Wednesday, September 14, 2011

இந்தியா - இயற்கை அமைப்பு.


இந்தியா - இயற்கை அமைப்பு.

        ஆசியாவில் இமயமலைத்தொடரால் பிரிக்கப்பட்ட இந்திய உபகண்டம் சுமார் 15,84,000 சதுர மைல் பரப்புடையது. இதில் இந்தியா சுமார் 12,22,000 சதுர மைல்; பாகிஸ்தான் 3,61,200 சதுர மைல். 1941 ஜன சங்கியைப்படி மொத்தம் 38.81 கோடியில், இந்தியாவில் 31.77 கோடியும், பாகிஸ்தானில் 7.11 கோடியுமாகப் பி¡¢ந்தனர். இந்தியாவில் இன்றைய ஜனத்தொகை சுமார் 34.2 கோடி இருக்கும்.

இந்தியாவின் வட கோடியில் காஷ்மீரையடுத்து வடக்கில் ஸிங்கியாங் என்ற சீத்துருக்கிஸ் தானமும், வடமேற்கில் ஆப்கனிஸ்தானையடுத்து டாஜிகிஸ்தான் முதலிய ரஷ்யகுடியரசுகளும், மேற்கில் பாகிஸ்தான் உள்ளன. இதற்குக் தெற்கில் இந்தியா-பாகிஸ்தான் எல்லை, பியாஸ், சட்லெஜ் நதிகளோரமாகச் சென்று, ராஜஸதான் எல்லை வழியாக கட்ச் வளைகுடாவில் முடிகிறது.

காஷ்மீருக்குக் கிழக்கில் இந்திய எல்லை திபேத்தையொட்டி தெற்கே வந்து, இமயமலைச் சாரலிலுள்ள நேபாளம், ஸிக்கிம், பூடான் சமஸ்தானங்களுக்குத் தெற்கில் கிழக்கே சென்று, வடக்கிழக்குக்கோடியில் சீன எல்லையைத் தொட்டுக்கொண்டு, தெற்கில்  திரும்பி பட்காஸ், நாகா மலைத் தொடர்கள் வழியாக பர்மாவின் மேற்கு எல்லையாக அமைகிறது. இவ்விடத்தில் அஸ்ஸாம், பீகார், மேற்கு வங்காளம் இவற்றிற்கிடையில கிழக்குப் பாகிஸ்தான் புகுந்திருக்கிறது. இதன் தென்கிழக்குக் கோடி பர்மா எல்லையைத் தொடுகிறது. இந்தியாவை கிழக்கிலும், மேற்கிலும், தெற்கிலும் சூழ்ந்துள்ள கடல் எல்லை சுமார் 3000 மைல் நீளமிருக்கும். அரபுக் கடலில் லக்ஷத் தீவுகளும், வங்கக்கடலில் அந்தமான், நிகோபார் தீவுகளும் இந்தியாவுடையது.

பூமத்தியரேகைக்கு வடக்கில் 8 டிகி¡¢ முதல் 37 டிகி¡¢ வரை பரவியுள்ள இந்தியாவை கடக ராசி சா¢பாதி பி¡¢ந்தாலும், இந்தியா பூராவும் அதியுஷ்ண நிலையுள்ள தேசமாகவே இருக்கிறது. இயற்கை அமைப்பில் இமய மலைப்பிரதேசம், மத்தியச் சமவெளி, தக்ஷ¢ண பீடபூமி என மூன்றாக பி¡¢க்கலாம்.

இமயமலைப் பிரதேசம்:

இமயமலைத்தொடர் காஷ்மீர் முதல் பர்மாவரையில் சுமார் 1500 மைல் சீனம் வியாபித்திருக்கிறது. சராசா¢ அகலம் 200 மைல் இருக்கும். இதன் வடமேற்கு கோடியில் சிந்துவும், அதன் உபநதிகளும், மத்தியில் கங்கை, யமுனை நதிகளும், கீழ்க்கோடியில் பிரம்மபுத்ராகவும் இம்மலைத்தொடரைத் துளைத்துக்கொண்டு தெற்கே பாய்கின்றன. உலகிலேயே அதிக உயரமான மலைச்சிகரங்கள் எவரெஸ்ட், கிஞ்ஜிங்ஜங்கா, காட்வின் ஆடஸ்டி முதலியன இத்தொடா¢ல் உள்ளன. காஷ்மீரத்திலிருந்து ஸிக்கியாங் செல்லும் ஜோஜிலா, காரகோரம் கணவாய்களும் கிழக்குபஞ்சாபிலிருந்து திபேத்து செல்லும் ஷிப்கி கணவாயும், டார்ஜிலிங் அருகில் கலிம்பாங் பள்ளத்தாக்கும், அஸ்ஸாமிலிருந்து பர்மா செல்லும் ஹ¥காங் பள்ளத்தாக்கு மணிப்பூர் பாதைகளும் இமயத்தில் உள்ள முக்கிய பாதைகளாகும்.

இம்மலைத் தொடர்களுக்கிடையில் எக்காலத்திலும் பனி உருகி ஜலம் வருவதால் கங்கை, யமுனை முதலிய நதிகள் ஜீவ நதிகளாக இருக்கின்றன. குளிர் காலத்தில் மத்திய ஆசியாவிலிருந்து வரும் குளிர் காற்றை இத்தொடர் தடுத்துவிடுவதுடன், கோடையில் தென்மேற்குப் பருவக் காற்று அடிக்கும்போது மத்திய சமவெளியில் மழை பெய்யும்படி செய்கிறது. மலைச்சாரலில் நிறைய நாடுகளுக்கும் மின்சார சக்தி வசதிகளும் உண்டு. தமிழ் இலக்கியம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான தொடர்ச்சி கொண்ட உலகின் சிறந்த இலக்கியங்களில் ஒன்று 24 Jul, 2011 0 Comments மின்னஞ்சல் அச்சிடுக PDF 0

தமிழ் இலக்கியம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான தொடர்ச்சி கொண்ட உலகின் சிறந்த இலக்கியங்களில் ஒன்று. வாழ்வின் பல்வேறு கூறுகளை தமிழ் இலக்கியங்கள் இயம்புகின்றன. தமிழ் மொழியில் மரபுரீதியாக 96 இலக்கிய நூல் வகைகள் உண்டு. இன்று தமிழ் மொழியில் பல புது இலக்கிய வகைகள் உருவாக்கப்பட்டு தமிழ் இலக்கியம் விரிந்து செல்கின்றது.

பண்டைக்காலத்தில் வாழ்ந்த தமிழ்ப்புலவர்கள் என்றும் அழியாத தமிழ் இலக்கியங்களை இயற்றி பல நல்ல கருத்துகளை வெளியிட்டுள்ளனர். தமிழில் உள்ள இலக்கியங்களில் மிகவும் பழமையானவை சங்க இலக்கியங்கள் ஆகும்.

மு. வரதராசனின் தமிழ் இலக்கியம் என்னும் நூலில் தரப்பட்டிருக்கும் தமிழ் இலக்கிய கால வகைப்பாடு பின்வருமாறு.

பழங்காலம் சங்க இலக்கியம் (கிமு 300 - கிபி 300) நீதி இலக்கியம் (கிபி 300 - கிபி 500) இடைக்காலம் பக்தி இலக்கியம் (கிபி 700 - கிபி 900) காப்பிய இலக்கியம் (கிபி 900 கிபி 1200) உரைநூல்கள் (கிபி 1200 - கிபி 1500) புராண இலக்கியம் (கிபி 1500 - கிபி 1800) புராணங்கள், தலபுராணங்கள் இஸ்லாமிய தமிழ் இலக்கியம் இக்காலம் பத்தொன்பதாம் நூற்றாண்டு கிறிஸ்தவ தமிழ் இலக்கியம் புதினம் இருபதாம் நூற்றாண்டு கட்டுரை சிறுகதை புதுக்கவிதை ஆராய்ச்சிக் கட்டுரை.

No comments:

Post a Comment