Thursday, September 29, 2011

“என் கணவர்” திருமதி செல்லம்மாள் பாரதி ஆற்றிய உரை.

‎1951ஆம் ஆண்டு திருச்சி வானொலியில் “என் கணவர்” என்ற தலைப்பில் திருமதி செல்லம்மாள் பாரதி ஆற்றிய உரை.

                      வறுமை, கவிஞனின் தனி உடைமை. கவிஞனுக்கு இந்த மண்ணுலகில் இன்பம் அளிப்பது கவிதை; ஆனால் வயிற்றுக்குணவு தேடி வாழும் வகையை அவன் மனைவிதான் கண்டுபிடிக்க வேண்டி வருகிறது. காதல் ராணியாக மனைவியைப் போற்றும் கவிஞன் அவளுக்குச் சாதமும் போடவேண்டும் என்ற நினைவேயின்றிக் காலம் கழித்தானேயானால், என்ன செய்ய முடியும்?.
ஊருக்குப் பெருமை என் வாழ்வு. வையகத்தார் கொண்டாட வாழவேண்டும் என்ற என் கனவு ஓரளவு பலித்ததென்னவோ உண்மைதான். இன்று என் கணவரின் புகழ் விண்முட்டிச் செல்கிறது. இன்று மகாகவியின் மனைவியாகப் போற்றப்படும் நான் அன்று பைத்தியக்காரன் மனைவியென்று பலராலும் ஏசப்பட்டேன்… விநோதங்கள் என் வாழ்க்கையில் அதிகம்.
உலகத்தோடொட்டி வாழ வகை அறியாத கணவருடன் அமர வாழ்வு வாழ்ந்தேன் என்றால் உங்களுக்குச் சிரிப்பாகத்தான் இருக்கும். யாருக்கு மனைவியாக வாழ்ந்தாலும் வாய்க்கலாம். ஆனால் கவிஞன் மனைவியாயிருப்பது கஷ்டம்.
கவிஞர்கள் போக்கே ஒரு தனி. உண்பதிலும் உறங்குவதிலும் வட சாதாரண மனிதரைப்போல் அவர்கள் இருப்பதில்லை. கற்பனைச் சிறகு விரித்துக் கவதை வானில் வட்டமிடும் பறவை, பூலோகத்திலே இருண்ட வீட்டிலே மனைவிக்கும் மற்றவருக்கும் சம்பாத்தியம் செய்துபோட்டு, சாதாரண வாழ்க்கை வாழ முடியுமா?
வறுமை, கவிஞனின் தனி உடைமை. கவிஞனுக்கு இந்த மண்ணுலகில் இன்பம் அளிப்பது கவிதை ஆனால் வயிற்றுக்குணவு தேடி வாழும் வகையை அவன் மனைவிதான் கண்டுபிடிக்க வேண்டி வருகிறது. காதல் ராணியாக மனைவியைப் போற்றும் கவிஞன் அவளுக்குச் சாதமும் போடவேண்டும் என்ற நினைவேயின்றிக் காலம் கழித்தானேயானால், என்ன செய்ய முடியும்?
கவிஞன் விசித்திரமான தன்மை நிறைந்தவன்; அவனுக்கு எதுவும் பெரிதில்லை. ஆனால் கவலை நிறைந்த வாழ்நாளைக் கழிக்க வேண்டும் என்று எந்தப் பெண்தான் நினைக்க முடியும்? சிறு வயதில் ஆசாபாசங்களும் அபிலாஷைகளும் ஒவ்வொரு பெண்ணின் மனத்திலும் நிறைந்திருப்பது இயற்கைதானே? சுகமாக வாழுவதற்கு சொர்க்கலோகம் சென்றால்தான் முயும் என்ற நிலை கவிஞன் மனைவிக்கு ஏற்பட்டு விடுகிறது.
அந்த நாளிலிருந்த சத்திமுத்தப் புலவரின் மனைவியிலிருந்து இன்று என்வரை சுகவாழ்வு ஒரே விதமாகத்தான் அமைந்திருக்கிறது. ஏகாந்தத்தில் அமர்ந்துவிட்டால் முனிவரும்கூட அவரிடம் பிச்சைதான் வாங்கவேண்டும். ஆனால் மனைத் தலைவியாகிய நான் அவ்வாறு நிஷ்டையிலிருக்க முடியுமா?
கவிஞர்களில் பலதரப்பட்டவர்கள் இருக்கிறார்கள். கடவுளைப் பக்தி செய்யும் கவிஞன், காவியம் எழுதும் கவிஞன், இவர்களைப் புற உலகத் தொல்லைகளை சூழ இடமில்லை. எனது கணவரோ கற்பனைக் கவியாக மட்டுமல்லாமல் தேசியக் கவியாகவும் விளங்கியவர். அதனால் நான் மிகவும் கஷ்டப்பட்டேன்.
கவிதை வெள்ளைத்தை அணை போட்டுத் தடுத்தது அடக்கு முறை. குடும்பமே தொல்லைக்குள்ளாகியது. ஆனால் நுங்கும் நுரையுமாகப் பொங்கிவரும் புது வெள்ளம் போல அடக்குமுறையை உடைத்துக்கொணடு பாய்ந்து செல்லும் அவர் கவிதை.
காலையில் எழுந்ததும் கண்விழித்து, மேநிலை மேல், மேலைச்சுடர் வானை நோக்கி வீற்றிருப்பார். ஸ்நானம் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு விதத்தில் அமையும். ஸூரிய ஸ்நானம்தான் அவருக்குப் பிடித்தமானது. வெளியிலே நின்று நிமிர்ந்து ஸூரியனைப் பார்ப்பதுதான் வெய்யற் குளியல். ஸூரியகிரணம் கண்களிலேயுள்ள மாசுகளை நீக்கும் என்பது அவர் அபிப்பிராயம். காலைக் காப்பி, தோசை பிரதானமாயிருக்க வேண்டும் அவருக்கு. தயிர், நெய், புது ஊறுகாய் இவைகளைத் தோசையின் மேல் பெய்து தின்பார்.
அவருக்குப் பிரியமான பொருளைச் சேகரித்துக் கொடுத்தால், அவரது நண்பர்களான காக்கையும் குருவியும் அதில் முக்கால் பாகத்தைப் புசித்து விடுவார்கள். எதை வேண்டுமானாலும் பொறுக்க முடியும்; ஆனால் கொடுத்த உணவைத் தாம் உண்ணாமல் பறவைகளுக்குப் போட்டுவிட்டு நிற்கும் அவருடைய தார்மிக உணர்ச்சியை மட்டும் என்னால் சகிக்கவே முடிந்ததில்லை
சிஷ்யருக்குக் குறைவு இராது.செய்திகளுக்கும் குறைச்சல் இல்லை. கானாமுதமோ காதின் வழியே புகுந்து உடல் எங்கும் நிறைந்துவிடும். களிப்பை மட்டும் பூரணமாக அனுபவிக்க முடியாமல் உள்ளிருந்து ஒன்று வாட்டும். அதுதான் கவலை!
இச்சகம் பேசி வாழும் உலகத்தில் எப்பொழுதும் மெய்யே பேச வேண்டும் என்பது அவரது கட்டளை. எக்காரணத்தைக் கொண்டும் பொய் பேசக் கூடாது. இது எத்தனை சிரமமான காரியம் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தான்.
புதுவை எனக்குச் சிறைச்சாலை ஆகியது. சிறைச்சாலை என்ன செய்யும்? ஞானிகளை அது ஒன்றும் செய்ய முடியாதுதான். எதையும் ஏற்றுக்கொள்ளும் மனத்திண்மை அவர்களுக்கு உண்டு. ஆனால் என்னைப்போன்ற சாதாரணப் பெண்ணுக்கு, இல்லறத்தை நல்லறமாக்க வேண்டும் என்ற ஒரே விஷயத்தை லட்சியமாகக் கொண்ட ஒருத்திக்குச் சிறைச்சாலை நவநவமான துன்பங்களை அள்ளித்தான் கொடுத்தது.
புதுவையில்தான் புதுமைகள் அதிகம் தோன்றின. புது முயற்சிகள், புதிய நாகரிகம், புதுமைப் பெண் எழுச்சி, புதுக் கவிதை இவை தோன்றின. இத்தனை புதுமைகளும் எழுவதற்கு நான்தான் ஆராய்ச்சிப் பொருளாக அமைந்தேன். பெண்களுக்குச் சம அந்தஸ்து வழங்க வேண்டுமா வேண்டாமா என்று வெகுகாலம் ஆராய்ந்த பின்னரே, பெண் விடுதலை அவசியம் என்ற முடிவு கண்டு, நடைமுறையில் நடத்துவதற்குத் துடிதுடித்தார் என் கணவர். இந்த முடிவை அவர் காண்பதற்குள் நான் பட்ட பாடு சொல்லுந்தரமன்று.

புதுவையில் அரசியலில் கலந்துகொள்ள ஒரு வசதியும் இல்லாதிருந்த போதிலும், தமிழ் இலக்கியத் தொண்டு செய்ததனால் ஒருவாறு மன அமைதி பெற்றிருந்தார். நமது பொக்கிஷங்கள் என்று கருதத் தகும்படியான அவரது கவிதைகள் எல்லாம் அங்குதான் தோன்றின.

மனிதரை அமரராக்க வேண்டும் என்று தவித்த என் கணவர், எத்தனை இடையூறுகளுக்கும் எதிர்ப்புகளும் ஏற்பட்ட போதிலும், அவற்றையெல்லாம் மோதிமிதித்துவிட்டுத் தம் லட்சியத்தில் முன்னேறும் துணிவு கொண்டு செயலாற்றினார்.

மகாகவி நாட்டிற்காக, அதன் சுதந்திரத்திற்காக வாழ்ந்தார். தமிழ் பண்பாட்டில் சிறந்த அவர் ஈகை, அன்பு, சகிப்புத்தன்மை முதலான பண்புகளைக் கடைப்பிடித்து வாழ்ந்தது ஓர் அதிசயமன்று.

தூங்கிக் கிடந்த தமிழரை விழிப்புறுத்தியதும் அதிசயமன்று; ஆனால் இன்று அவரது பூத உடல் மறைந்த பின்பும் தமிழ் பேசும் ஒவ்வோர் உயிரினிடத்தும் அவர் கலந்து நிற்பதுதான் அதிசயம் என்று எனக்குத் தோன்றுகிறது. “விண்டுரைக்க மாட்டாத விந்தையடா!” என்று அவரது கவிதை மொழியில்தான் இந்த மகிழ்ச்சியைத் தெரிவிக்க வேண்டியிருக்கிற

Wednesday, September 14, 2011

இந்தியா - இயற்கை அமைப்பு.


இந்தியா - இயற்கை அமைப்பு.

        ஆசியாவில் இமயமலைத்தொடரால் பிரிக்கப்பட்ட இந்திய உபகண்டம் சுமார் 15,84,000 சதுர மைல் பரப்புடையது. இதில் இந்தியா சுமார் 12,22,000 சதுர மைல்; பாகிஸ்தான் 3,61,200 சதுர மைல். 1941 ஜன சங்கியைப்படி மொத்தம் 38.81 கோடியில், இந்தியாவில் 31.77 கோடியும், பாகிஸ்தானில் 7.11 கோடியுமாகப் பி¡¢ந்தனர். இந்தியாவில் இன்றைய ஜனத்தொகை சுமார் 34.2 கோடி இருக்கும்.

இந்தியாவின் வட கோடியில் காஷ்மீரையடுத்து வடக்கில் ஸிங்கியாங் என்ற சீத்துருக்கிஸ் தானமும், வடமேற்கில் ஆப்கனிஸ்தானையடுத்து டாஜிகிஸ்தான் முதலிய ரஷ்யகுடியரசுகளும், மேற்கில் பாகிஸ்தான் உள்ளன. இதற்குக் தெற்கில் இந்தியா-பாகிஸ்தான் எல்லை, பியாஸ், சட்லெஜ் நதிகளோரமாகச் சென்று, ராஜஸதான் எல்லை வழியாக கட்ச் வளைகுடாவில் முடிகிறது.

காஷ்மீருக்குக் கிழக்கில் இந்திய எல்லை திபேத்தையொட்டி தெற்கே வந்து, இமயமலைச் சாரலிலுள்ள நேபாளம், ஸிக்கிம், பூடான் சமஸ்தானங்களுக்குத் தெற்கில் கிழக்கே சென்று, வடக்கிழக்குக்கோடியில் சீன எல்லையைத் தொட்டுக்கொண்டு, தெற்கில்  திரும்பி பட்காஸ், நாகா மலைத் தொடர்கள் வழியாக பர்மாவின் மேற்கு எல்லையாக அமைகிறது. இவ்விடத்தில் அஸ்ஸாம், பீகார், மேற்கு வங்காளம் இவற்றிற்கிடையில கிழக்குப் பாகிஸ்தான் புகுந்திருக்கிறது. இதன் தென்கிழக்குக் கோடி பர்மா எல்லையைத் தொடுகிறது. இந்தியாவை கிழக்கிலும், மேற்கிலும், தெற்கிலும் சூழ்ந்துள்ள கடல் எல்லை சுமார் 3000 மைல் நீளமிருக்கும். அரபுக் கடலில் லக்ஷத் தீவுகளும், வங்கக்கடலில் அந்தமான், நிகோபார் தீவுகளும் இந்தியாவுடையது.

பூமத்தியரேகைக்கு வடக்கில் 8 டிகி¡¢ முதல் 37 டிகி¡¢ வரை பரவியுள்ள இந்தியாவை கடக ராசி சா¢பாதி பி¡¢ந்தாலும், இந்தியா பூராவும் அதியுஷ்ண நிலையுள்ள தேசமாகவே இருக்கிறது. இயற்கை அமைப்பில் இமய மலைப்பிரதேசம், மத்தியச் சமவெளி, தக்ஷ¢ண பீடபூமி என மூன்றாக பி¡¢க்கலாம்.

இமயமலைப் பிரதேசம்:

இமயமலைத்தொடர் காஷ்மீர் முதல் பர்மாவரையில் சுமார் 1500 மைல் சீனம் வியாபித்திருக்கிறது. சராசா¢ அகலம் 200 மைல் இருக்கும். இதன் வடமேற்கு கோடியில் சிந்துவும், அதன் உபநதிகளும், மத்தியில் கங்கை, யமுனை நதிகளும், கீழ்க்கோடியில் பிரம்மபுத்ராகவும் இம்மலைத்தொடரைத் துளைத்துக்கொண்டு தெற்கே பாய்கின்றன. உலகிலேயே அதிக உயரமான மலைச்சிகரங்கள் எவரெஸ்ட், கிஞ்ஜிங்ஜங்கா, காட்வின் ஆடஸ்டி முதலியன இத்தொடா¢ல் உள்ளன. காஷ்மீரத்திலிருந்து ஸிக்கியாங் செல்லும் ஜோஜிலா, காரகோரம் கணவாய்களும் கிழக்குபஞ்சாபிலிருந்து திபேத்து செல்லும் ஷிப்கி கணவாயும், டார்ஜிலிங் அருகில் கலிம்பாங் பள்ளத்தாக்கும், அஸ்ஸாமிலிருந்து பர்மா செல்லும் ஹ¥காங் பள்ளத்தாக்கு மணிப்பூர் பாதைகளும் இமயத்தில் உள்ள முக்கிய பாதைகளாகும்.

இம்மலைத் தொடர்களுக்கிடையில் எக்காலத்திலும் பனி உருகி ஜலம் வருவதால் கங்கை, யமுனை முதலிய நதிகள் ஜீவ நதிகளாக இருக்கின்றன. குளிர் காலத்தில் மத்திய ஆசியாவிலிருந்து வரும் குளிர் காற்றை இத்தொடர் தடுத்துவிடுவதுடன், கோடையில் தென்மேற்குப் பருவக் காற்று அடிக்கும்போது மத்திய சமவெளியில் மழை பெய்யும்படி செய்கிறது. மலைச்சாரலில் நிறைய நாடுகளுக்கும் மின்சார சக்தி வசதிகளும் உண்டு. தமிழ் இலக்கியம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான தொடர்ச்சி கொண்ட உலகின் சிறந்த இலக்கியங்களில் ஒன்று 24 Jul, 2011 0 Comments மின்னஞ்சல் அச்சிடுக PDF 0

தமிழ் இலக்கியம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான தொடர்ச்சி கொண்ட உலகின் சிறந்த இலக்கியங்களில் ஒன்று. வாழ்வின் பல்வேறு கூறுகளை தமிழ் இலக்கியங்கள் இயம்புகின்றன. தமிழ் மொழியில் மரபுரீதியாக 96 இலக்கிய நூல் வகைகள் உண்டு. இன்று தமிழ் மொழியில் பல புது இலக்கிய வகைகள் உருவாக்கப்பட்டு தமிழ் இலக்கியம் விரிந்து செல்கின்றது.

பண்டைக்காலத்தில் வாழ்ந்த தமிழ்ப்புலவர்கள் என்றும் அழியாத தமிழ் இலக்கியங்களை இயற்றி பல நல்ல கருத்துகளை வெளியிட்டுள்ளனர். தமிழில் உள்ள இலக்கியங்களில் மிகவும் பழமையானவை சங்க இலக்கியங்கள் ஆகும்.

மு. வரதராசனின் தமிழ் இலக்கியம் என்னும் நூலில் தரப்பட்டிருக்கும் தமிழ் இலக்கிய கால வகைப்பாடு பின்வருமாறு.

பழங்காலம் சங்க இலக்கியம் (கிமு 300 - கிபி 300) நீதி இலக்கியம் (கிபி 300 - கிபி 500) இடைக்காலம் பக்தி இலக்கியம் (கிபி 700 - கிபி 900) காப்பிய இலக்கியம் (கிபி 900 கிபி 1200) உரைநூல்கள் (கிபி 1200 - கிபி 1500) புராண இலக்கியம் (கிபி 1500 - கிபி 1800) புராணங்கள், தலபுராணங்கள் இஸ்லாமிய தமிழ் இலக்கியம் இக்காலம் பத்தொன்பதாம் நூற்றாண்டு கிறிஸ்தவ தமிழ் இலக்கியம் புதினம் இருபதாம் நூற்றாண்டு கட்டுரை சிறுகதை புதுக்கவிதை ஆராய்ச்சிக் கட்டுரை.

லூர்துமாதா வரலாறு -பிரான்ஸ்.


லூர்துமாதா வரலாறு -பிரான்ஸ்.

பிரான்ஸ் நாட்டின் தென் - மேற்கு பகுதியில் Midi - Pyrénéees என்னும் மாநிலத்தில் லூர்து நகரம் அமைந்துள்ளது.அமெரிக்கா என்றால் நமக்கு சுதந்திர தேவியின் சிலை ஞாபகம் வருவது போல் ப்ரான்ஸ்

என்றால் அனைவருக்கும் லூர்து மாதா கோயில் தான் ஞாபகம் வரும். இயற்கை அழகு கண்கொள்ளாத வண்ணம் அமைந்திருக்கும் பிரான்ஸ் நாட்டில் அமைந்துள்ளது "லூர்ட்ஸ்" என்ற சின்னஞ்சிறு நகரம்.தென்மேற்கு ப்ரான்ஸ் பகுதியில் "Midi - Pyrénéees" என்ற மலைத்தொடரின் மத்தியப் பகுதியில் உள்ள இந்தச் சிறிய ஊரை,ஒவ்வொரு வருடமும் 50 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகிறார்கள்.இந்த சின்னஞ்சிறு ஊரில் அப்படியென்ன விசேஷம்?

லூர்ட்ஸ் என்னும் இவ்வூரில் அமைந்துள்ள மாதா கோயில்,கோயிலின் அடிவாரத்தில் உள்ள "கிரிட்டோ" எனப்படும் குகை,அந்தப் பகுதியில் குபுகுபுவென பொங்கி வரும் கற்கண்டாய் இனிக்கும் தெளிவான புனிதமான ஊற்று நீர்.ஊரின் நடுவே மிகவும் ப்ரம்மாண்டமாக மூன்று நிலைகளில் அமைக்கப்பட்டிருக்கிறது புனித லூர்து மாதா கோயில்

உலகெஞ்கும் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான பாஸ்லிகாக்களில் ஒன்றான இந்த ஆலயத்தை மாதாவே விரும்பி அமைத்துக் கொண்ட கதையை பார்க்கலாம்.

19ம் நூற்றாண்டில் கேவ் நதியின் கரையில் பல மாவு மில்கள் அமைக்கப்பட்டிருந்தன.அத்தகைய மில் ஒன்றில் பணி புரிந்து வந்த பிரான்ஸிஸ் தன் மனைவி லூயிஸ் சௌபிரஸ் மர்றும் 4 குழந்தைஅக்ளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்.இனிமையான இவர்களின் வாழ்வில் திடீரென துன்பங்கள் தொடர்ந்து வரத்தொடங்கின.

மில்லில் வேலை செய்யும் போது சிறு கல் ஒன்று பிரான்ஸிஸ்ஸின் இடதுகண்ணில் புகுந்து கண்பார்வை பறிபோயிற்று.2 மூட்டைகள் மாவினை திருடியதாக அவர்மேல் தவறான பழி விழு,எட்டு தினங்கள் சிறையிலடைக்கப்பட்டார்.ஊரெங்கும் பஞ்சமும்,காலரா நோயிம் பரவிற்று.

இந்நோய் பிரான்ஸிஸ்ஸின் மூத்த மகளான பெர்னாடெட்டையும் தாக்கிற்று.வசதியில்லாத காரணத்தினால் நடுத்தெருவிற்க்கு வந்த குடும்பத்தினரைப் பார்த்து பரிதாபப்பட்டு,அவர்களின் உறவினர் ஒருவர் பழைய சிறையான "காசோட்" என்ற அறையை அவர்கள் தங்குவதற்க்காக அளித்தார்.

தந்தை முதலில் சிறைக்கு சென்றார்,இப்போது குடும்பத்துடன் அனைவருமே சிறையில் தங்குகிறார்கள் என ஊரில் பலர் அவர்களைக் கேலி செய்தனர்.உடல்நலமில்லாததாலும்,ஊர்ப் பேசிய கேலியினாலும்,பெரிதும் மனதளவில் பாதிக்கப்பட்டாள் பெர்னாடெட்.பதினான்கு வயதாகியும் பள்ளிக்குச் செல்லாததால் ஆங்கிலத்திலோ,ப்ரெஞ்சிலோ பேச,படிக்க,எழுத தெரியாது.

அவளுக்குப் பேசத் தெரிந்தது கூட மாறுபட்ட பிரெஞ்சு மொழிதான்.அவள் மான்க்கவலைகளை வாரா வாரம் மாதா கோயிலுக்கு சென்று முறையிட்டு அழுவாள்.

ஊற்று நீர் பெருகுமிடத்தில் இருக்கும் மாதா

1858ம் ஆண்டு பிப்ரவரி பதினொன்றாம் தேதி தன் தோழிகளுடன் காட்டில் கள்ளிப் பொறுக்கவும்.ஆடு மேய்க்கவும் சென்றாள்.கேவ் நதிக்கரையில் பாறைகள் நிறைந்த காட்டில் தோழிகள் விறகு வெட்டிக் கொண்டிருந்த போது,பெர்னாடெட்டிற்கு காற்றில் ஒரு ரீங்கார ஒசை கேட்டது.நிமிர்ந்து பார்த்தவர்களுக்கு பாறையின் நடுவே ஒரு இளம்பெண்,கருணை முகத்துடன்,சுற்றிலும் ஒளிவட்டம் வீச நின்றிப்பது தெரிந்தது.என்னவென்று புரிந்து கொள்ளும் முன் அந்தப் பெண் மறைந்து விட்டாள்.

ஆர்வம் மேலிட,தொடர்ந்து அடுத்த நாள் அதே பகுதிக்குப் பெர்னாடெட் போன போது திரும்பவும் அதே காட்சியைக் கண்டாள்.3 ம் நாளும்,4 நாளும் காட்சித் தந்த பிறகு பெர்னாடெட்டிடம் அந்த இளம்பெண்,

"தொடர்ந்து உண்ணால் இந்தப் பாறைகள் நிறைந்த பகுதிக்குப் 15 நாட்களுக்கு வரமுடியுமா?" என்று கேட்டாள். "முடியும்" என்று பதிலளித்த பெர்னாட்டெட்டிடம் "உனக்கு இவ்வுலகில் சந்தோஷத்தை அளிக்க முடியாவிட்டாலும் அவ்வுலகில அளிப்பேன்" என்று கூறி மறைந்தாள்.

தொடர்ந்து 15 நாட்கள் கிரிட்டோவிற்க்குச் சென்ற போது,மேலும் மேலும் தரிசனங்கள் கிடைத்தன.8 தரிசனத்தின் போது "தவத்தில் ஈடுபடு! பாவப்பட்டவர்களுக்காக ஜபம் செய்!" என்ற ஆணை கிடைத்தது.9 வது முறை காட்சியளித்த போது அந்த இளம்பெண் பெர்னாடெட்டை அருகில் அழைத்து,"இக்குகையில் உள்ள மண்ணை உன் நகங்களினால் கீறு,அதில் தோன்றும் ஊற்று நீரில் உன் உடலைக் கழுவிய பிறகு அதனைப் பருகுவாயாக " என்று கூறினாள்.

அவள் வார்த்தைகளுக்குப் பதிலேதும் கூறாமல் அவ்வாறே செய்த போது,மண்ணாக இருந்த ஊற்று நீரைப் பருகியதும் உடலில் உள்ள வியாதியும்,அதனால் ஏற்பட்ட சோர்வும் நீங்கிய உணர்வைப் பெற்றாள்.ஆஸ்துமா நோயினால் தவித்துக் கொண்டிருந்தவளுக்கு மூச்சு நன்றாக விட முடிந்தது.புல்லரிப்புடன் திரும்பிப் பார்த்த போது ஊற்று நீர் குபுகுபுவெனப் பெருகத் தொடங்கியது.

இவர் தான் பெர்னாடெட்

அடுத்து வந்த தரிசனங்களில் அந்த ஊற்று நீரை பருகினால் உடலில் உள்ள நோய்கள் நீங்கப் பெறும் என்பதை மேலும் மேலும் உறுதிப்படுத்தினாள் அந்த இளம்பெண்.13 வது தரிசனத்தின் போது, "போய்ப் பாதிரியார்களையும்,பொது மக்களையும் திரளாக அழைத்து வந்து இங்கு எனக்கு ஒரு ஆலயம் எழுப்பச் சொல்"என்று அப்பெண் கூறினாள்.

அடுத்த 2 தரிசனங்களிலும் அதே வார்த்தைகளைக் கூறவே,யார் அந்த இளமங்கை என்றறியும் ஆவல் பெர்னாடெட்டிற்கு ஏற்பட்டது.16 வது முறை தரிசனம் தந்த போது, "ஒளி வெள்ளமாகத் திகழும் மாதாவே!தாங்கள் யார்? என்று பெர்னாடெட் கேட்டதும், "நான்தான் புனித தூயமேரி மாதா!" என்ற பதில் கிடைத்தது.

அறிவிலோ,செல்வத்திலோ,சுகத்திலோ,உடல்நலத்திலோ எந்தவிதத்திலும் தகுதியில்லாத ஏழையான தன்னைத் தேர்ந்தேடுத்து, ஒருமுறை, இருமுறையல்ல 18 முறை காட்சியளித்ததை எண்ணிப் பெருமகிழ்ச்சி அடைந்தாள் பெர்னாடெட்.

அடுத்த நாள் ஊர் மக்களையும்,படித்தவர்களையும்,பெரியோர்களையும் கிரிட்டோவிற்கு அழைத்து வந்தாள் பெர்னாடெட்.அவளுக்கு மாதாவின் தரிசனம் கிடைத்த போது மாதாவின் முன் மெழுகுவர்த்தி ஏற்றி நின்றாள்.பெழுகுவர்த்தி உருகி பெர்னாடெட்டின் கையிலேயே 10 நிமிடங்கள் எரிந்தது.ஆனால் பெர்னாடெட்டின் கையைப் பாதிக்கவில்லை. சுற்றி நின்றிருந்த மக்களுக்கு மாதாவைக் காண முடியாவிட்டாலும்,மாதாவை தரிசித்துக் கொண்டிருக்கும் பெர்னாடெட்டின் பரவசமான முகம் தெரியவே,அவர்கள் உடல் புல்லரித்தது.அதற்கு அடுத்த நாள், 18 வது தரிசனம் கேவ் நகரின் அக்கரையில் உள்ள புல்வெளியில் பெர்னாடெட்டுக்குக் கிடைத்தது,இதுவரை தன் வாழ்நாளில் என்றுமே கண்டிராத அளவு அழ்கும்,கருணையும் ததும்பும் மாதாவைக் கண்டாள்.

மூத்த பிஷப்புகளையும்,மூத்த பாதிரியர்களையும் பல பெரியோர்களையும் அறிஞர்களையும் தேடி சந்தித்து ,தனக்கு 18 முறை மாதா தரிசனம் அளித்ததையும்,ஊற்று நீரின் மகிமையை விளக்கியதையும்,தனக்கு கோயில் எழுப்புமாறு கூரியதையும் எடுத்துக் கூறினாள்.ஆனால் அவள் வார்த்தைகளை உடனே நம்ப அவர்கள் தயாராக இல்லை.

"மாதாவின் வார்த்தைகளை உங்களிடம் எடுத்துக் கூறுவது மட்டுமே என் வேலை.நம்புவதும்,நம்பாமலிருப்பதும் உங்கள் இஷ்டம் "என்று ஒதுங்கி விட்டாள் பெர்னாடெட்.அவளது வார்த்தைகளை வழக்காக பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வாதாடப்பட்டது.இதற்கிடையில் நோயினால் பாதிக்கப்பட்ட பலர்,ஊற்று நீரைப் பருகி,மாதாவை வேண்டி பல வகையான நோய்களிலிருந்து குணமடையத் தொடங்கினார்கள்.பொது மக்களின் நம்பிக்கை பெருகி,பலரும் மாதாவை தரிசித்த பெர்னாடெட்டை நாடி வணங்கத்தொடங்கினர்.

மிகவும் வறுமையான சூழ்நிலையில் இருந்த போதும்,தன்னையோ தன் குடும்பத்தையோ வியாபாரப் பொருளாக பொதுமக்கள் மாற்றுவதை விரும்பாத பெர்னாடெட் லூர்ட்ஸ் நகரிலிருந்து நெவர்ஸ் என்ற நகருக்குச் சென்று,அங்குள்ள கிறிஸ்துவ மிஷனின் கான்வெண்ட்டில் சேர்ந்து உடல்நலம் குன்றியவர்களுக்காகச் சேவை செய்யத் தொடங்கினாள்.திரும்ப லூர்ட்ஸ் நகருக்கு வராமலேயே 1879ம் ஆண்டில் தன் 35 வதுவயதில் உயிர்நீத்து அவ்வுலகில் இன்பம் பெற மாதாவை சரணடைந்தாள்.

நெவர்ஸ் கான்வெண்ட்டிலேயே புதைக்கப்பட்ட அவளது உடல்ன,கோயில் கட்டுவதற்காக வாதாடப்பட்ட வழக்கிற்காக 1909ம் ஆண்டு ஒரு முறையும்,1919ம் ஆண்டு ஒரு முறையும் வெளியே எடுக்கப்பட்டது.சிறிதளவு கூட பழுதடையாமல் அவள் உடல் இருந்ததைக் கண்டு அனைவரும் திகைத்தனர்.புனிதமேரி மாதாவின் அருள் பூரணமாகப் பெர்னாடெட்டின் மேல் இருப்பது அனைவருக்கும் தெளிவாயிற்று.

லூர்ட்ஸ் நகரில் மாதாவின் விருப்பபடி மிகப் பெரிய ஆலயம், 3 நிலையில் எழுப்பப்பட்டுள்ளது.உலகெங்கிலிருந்தும் மக்கள் திரளாக வந்து மாதாவை வணங்கி ஊற்றுநீரைப் பருகி பலவிதமான நோய்களிலிருந்து குணமடைந்துள்ளனர்.நோயாளிகள் பலர் மாதாவின் கருணையை நாடி ஸ்ட்ரெச்சரில் டிரிப் பாட்டிலுடனும்,சக்கர வண்டிகலீல் ஊனமுற்றவர்களும் திரளாக வருவதை இங்கு காணலாம்.

கைகால் முறிவு,கண்பார்வை பாதிப்பு,காசநோய்,ஆஸ்துமா,பாரிசவாயு,உடலில் பல இடங்கலீல் ஏற்பட்டுள்ள ட்யூமர் என்ற கட்டிகள் எனப் பலவித நோய்களில் இருந்து குணமடைந்த, பல நோயாளிகள் ஊற்று நீரின் பிரசித்ததை கோயிலின் ரிஜிச்தரில் பதிவு செய்துள்ளனர்.பிப்ரவரி 12ம் தேதி பெர்னாடெடிற்க்கு மாதாவின் முதல் தரிசனம் கிடைத்த நாள் "உலக நோயாளிகளின் நாளா"கக் கருதப்படுகிறது.

4,000 மக்கள் மட்டுமே வாழ்ந்து வந்த லூர்ட்ஸ் நகரம் இன்ரு மிக் முக்கியமான புண்ணியஸ்தலமாக பிரபலமடைந்துவிட்டது.பல்வேறு யாத்ரீகர்கள் வந்து தங்குவதால்.பிரான்ஸ் நாட்டில் பாரீஸ் நகரத்திர்க்கு அடுத்தபடியாக இங்குதான் 270 ஹோட்டல்கள் கட்டப்பட்டுள்ளன.ஒவ்வொரு சீஸன் எனப்படும் பருவகாலத்திலும் 6 மில்லியன் கடிதங்கள் நோயாளிகளிடமிருந்தும் பொது மக்களிடமிருந்தும் பிரார்த்தனையாக வந்து சேர்கிறது.இண்டர்நெட்டின் மூலமாகவும் பிரார்த்தனைகள் பதிவு செய்யப்படுகின்றன.அவை மாதாவின் பாதத்தில் சமர்ப்பிக்கபடுகின்றன.

இந்த ஆலயம் அமைந்துள்ள ஊரினை "துலூஸ்" (TOULOUSE) என்றா நகரத்திற்கு விமானம் மூலம் சென்ரால்,அங்கிருந்து சாலை வழியாக சென்றடையலாம்.வழியெங்கும் இயற்கை காட்சிகளே நம்மை நோயிலிருந்து பாதி விடுபடச்செய்யும்.போகும் போது கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டியது புனித ஊற்றுநீரை நிரப்பி வரத் தேவையான பாட்டிலகள் அல்லது ஜெரிகேன்கள்!மாதா பெர்னாடெட்டிற்கு காட்சியளித்த குகையைத் தொட்டுப் பரவசமடையலாம்.பெழுகுவர்த்திகளை நாமே பணம் போட்டு எடுத்துச் சென்று மாதாவின் முன் ஏற்றலாம்.

யாத்ரீகர்களின் பேரில் ஆலயம் கொண்டுள்ள அளவற்ற நம்பிக்கையினால் நம்மைக் கட்டுப்படுத்த,மெழுகுவர்த்தி விற்க, புனித நீரை நிரப்ப எங்கும் ஆட்களில்லை.புனிதநீர் சிறிய ஊற்றில் பொங்குவதை கண்ணாடி வழியே காணலாம்.அந்நீரை பல்வேரு குழாய்களில் பொதுமக்கள் சிரமமின்றி பிடித்துக் கொள்ள குழாய்கள் பல அமைக்கப்பட்டுள்ளன.

இந்த விஞ்ஞான யுகத்தில் இன்னும் நடந்து கொண்டிருக்கும் தெய்வீக அற்புதங்களஒ அங்கு காணலாம்.இந்த புனிதமாதாவை தரிசிக்க விரும்புபவர்கள் இந்தியாவில் கூட தரிசிக்கலாம்.புதுச்சேரி மாநிலத்தில் வில்லியனூர் என்னும் நகரத்தில் லூர்துமாதா கோயில் இருக்கு.பிரான்ஸ் நாட்டிலிருந்து மாதாவின் சிலை வரவைக்கப்பட்டு இங்கு கோயில் அமைந்துள்ளது.நாமும் மாதாவை தரிசித்து அவர்களின் அருளை பெறுவோம்

வானொலியை கண்டுபிடித்தவர் யார்?

வானொலியை கண்டுபிடித்தவர் யார்?

வானொலியை கண்டறிந்தவர் யார்? என்ற கேள்விக்கு அனைவரும் கூறும் பதில், மார்கோனி. அப்படியென்றால் நீங்கள் சொல்வது தவறு. மார்கோனி, வானொலியை கண்டுபிடித்தவர் என்று ஏற்றுகொண்டலும், அவருக்கு முன்பே ஒருவர் வானொலியை கண்டுபிடித்துவிட்டார்.

1900 களில், மார்கோனி வானொலியை கண்டுபிடித்தார். ஆனால், அதற்கு முன் 1897 - ம் ஆண்டு நம் இந்திய நாட்டை சேர்ந்த ஜெகதீஷ் சந்திரபோஸ் எனும் விஞ்ஞானி வானொலியை கண்டுபிடித்துவிட்டார்.

ஜெகதீஷ், எப்படி வானொலியை கண்டுபிடித்தார், அவர் பயன்படுத்திய தொழில்நுட்பம் இவற்றை அறியும் முன் அவரை பற்றி சுருக்கமாக அறிவோம்.

அப்போதைய வங்காளத்தை சேர்ந்த முனிஷிகன்ச் மாவட்டத்தில் (தற்போது வங்காளதேசம்) 1858 - ம் ஆண்டு நவம்பர் 30 - ந் தேதி ஜெகதீஷ் சந்திரபோஸ் பிறந்தார். ஜெகதீஷின் தந்தை பகவான் சந்திரபோஸ், இவர் பரித்பூரின் காவல் துணை ஆணையராக பணிபுரிந்தவர். தாய் மொழிக்கு பின் ஆங்கிலம் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும் என்று பகவான் கருதியதால் ஜெகதீஷ்யை, அவர், ஆங்கில வழி பள்ளியில் சேர்த்தார்.

1869 - ம் ஆண்டு செயின்ட் சேவியர் பள்ளி, கொல்கத்தாவில் உயர்நிலை பள்ளி படிப்பை தொடங்கினார். பின்னர் 1875 - ம் ஆண்டு நடந்த நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்று செயின்ட் சேவியர் கல்லூரியில் இளங்கலை பட்டப் படிப்பை படித்தார். அடுத்த கட்டமாக, முதுகலை பட்டதை இயற்கை அறிவியல் துறையில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழத்தில் பயின்றார்.

1885 - ல் நாடு திரும்பிய ஜெகதீஷ், சென்னை மாநிலக் கல்லூரியில் இயற்பியல் துறையில் பேராசிரியராக பணியில் சேர்ந்தார். அவரின் முதல் ஊதியம் 200 ருபாய். முதல்முதலில் இயற்பியல் துறைக்கு அக்கல்லூரியில் செய்முறை கூடம் அமைதவரும் இவரே ஆவார்.

1887 - ல் அபாலா என்கிற பெண்ணுடன் அவருக்கு திருமணமானது. அபாலா, சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்றவர்.

1893 - ல் ஜெகதீஷ் வானொலி கண்டுபிடிப்பதற்கான ஆய்வுகளை தொடங்கினார். கொல்கத்தா டவுன் ஹாலில் 'அதிர்ஷ் அலோக்' (மறைந்த ஒளி) என்ற ஆய்வறிக்கையை சமர்பித்தார். மேலும், படிப்படியான ஆய்வு சோதனையில் டிசம்பர் 1895 - ல் வானொலிக்கான அலை வடிவத்தை கண்டுபிடித்தார். இதே மாதத்தில் இவரது இரண்டாம் ஆய்வறிக்கை, லண்டன் ஆய்வு நூல் ஒன்றில் 36 - ம் பகுதியில் வெளியானது.

1897, மார்கோனி இந்தியா வந்தார். அவர், வானொலி பற்றி ஆய்வு ஒன்றினை கொல்கத்தாவில் சமர்பித்தார். இதற்கு ஒரு ஆண்டு முன் ஜெகதீஷ் லண்டனில் மார்கோனியை சந்தித்தார். அப்போது, இருவரும் தங்களது ஆய்வுகளை பற்றி பரிமாரிகொண்டனர். (இருவரும் ஒரே காலகட்டத்தில் வானொலிக்கான ஆய்வுகளில் ஈடுப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது).

வானொலி அலையை உருவாக்க பகுதி மின் கடத்தியை (செமி கண்டக்டர்) பயன்படுத்தினார். பகுதி மின் கடத்தியை அலை கடத்த முதல்முதலில் பயன்படுதியவரும் ஜெகதீஷ் தான். இதன் பின் பல அறிவியல் ஆய்வுகளில் பகுதி மின் கடத்திகள் பயன்படுத்தப்பட்டன.

பின்னர், 1897- ம் ஆண்டு கொல்கத்தாவில் வானொலிக்கான ஆய்வு முழுமைப் பெற்றது.

ஜெகதீஷ், வானொலியின் அலைக்கற்றை பரப்பக் கொம்பு வடிவிலான அலை கடத்தியை (ஆன்டெனா) பயன்படுத்தினார். டை எலெக்ட்ரிக் லென்ஸயை பயன்படுத்தி வானொலி அலையை உருவாக்கினார். அது, 60 GHz அதிர்வலைகளை உருவாகியது. மேலும், 1.3 மில்லி மீட்டர் பண்ணொளி உள்வாங்கி, NRAO 12 மீட்டர் நுண்ணோக்கி போன்றவற்றையும் பயன்படுத்தினார்.

60 ஆண்டுகள் செலவு செய்ய வேண்டிய ஆய்வை 10 ஆண்டுகளில் ஜெகதீஷ் செய்து முடித்தார் என்று விஞ்ஞானிகள் அவரை பெருமைப்படுத்தினர். பின்னர், கண்டுபிடிக்கப்பட்ட P- வகை மற்றும் N- வகை பகுதி மின் கடத்திகளுக்கு, ஜெகதீஷின் ஆய்வுகளே ஆதாரமாக அமைந்தது.

வானொலியை கண்டுபிடித்த பின் ஜெகதீஷ், தாவரவியலில் தன் ஆய்வுகளை மேற்கொண்டார். 1927 - ம் ஆண்டு தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பதையும் ஜெகதீஷ் சந்திரபோஸ் கண்டுப்பிடிதார்.

இயற்பியல், தாவரவியல் என இரண்டிலும் முக்கியமான பல ஆய்வுகள் செய்து உலக அறிவியலுக்கு பல கண்டுப்பிடிப்புகளை கொடுத்தவர் இந்தியர் என்பதில் நாம் பெருமைப்படலாம்.

கலிலியோ கலிலீ - விஞ்ஞானி.

கலிலியோ கலிலீ - விஞ்ஞானி.

கலிலியோ கலிலீ (Galileo Galilei) இத்தாலி நாட்டிலுள்ள பைசா நகரத்தில் கி.பி.1564 - ஆம் ஆண்டு பிப்ரவரி 15 - ஆம் நாள் பிறந்தார். இவரது தந்தை வின்சென்சோ கலிலீ. சிறந்த இசைமேதை. கலிலியோ ஆறு பிள்ளைகளில் மூத்தவர்.

முற்காலத்தில் அரிஸ்டாட்டில் எழுதிவைத்தபடி ஆண்களுக்கு 32 பற்கள் உண்டு என்றும், பெண்களுக்கு 28 பற்கள் தான் உண்டு என்றும் நம்பிவந்தனர். அதையே, கலிலியோவின் பள்ளியிலும் பாடமாகச் சொல்லிக் கொடுத்தார்கள். கலிலியோ அதை பரிசோதனை செய்துபார்த்தார். வீட்டில் அவரது அம்மா மற்றும் பக்கத்துவீட்டுப் பெண்களின் பற்களையும், ஆண்களின் பற்களையும் எண்ணிப்பார்த்து அரிஸ்டாட்டில் கூறியது தவறு. ஆண், பெண் அனைவருக்கும் 32 பற்கள் உண்டு என்ற உண்மையைக் கூறினார்.

கலிலியோவின் தந்தை அவரை மருத்துவராக்க வேண்டும் என்று விரும்பினார். அதனால் பைசா நகரத்திலுள்ள பைசா பல்கலைக்கழகத்தில் (University of Pisa) 1581 - ல் சேர்ந்தார். கலிலியோவுக்கு மருத்துவத்தில் ஆர்வம் இல்லை, கணிதத்தைக் கற்றார். இயல்பிலேயே கலிலியோவுக்கு இயந்திர இயலிலும், இசையிலும், ஓவியத்திலும் மிகுந்த ஆர்வம் இருந்தது.

ஒருநாள் மாதாகோயிலின் கூரையிலிருந்து தொங்கிக் கொண்டிருந்த விளக்கு காற்றில் அசைந்து ஆடிக்கொண்டிருப்பதைக் கண்டார். விளக்கு வேகமாக ஆடினாலும், மெதுவாக ஆடினாலும் ஒருமுறை ஆடுவதற்கு ஆகும் நேரம் ஒரே அளவாக இருப்பதைக் கண்டார். கடிகாரம் கண்டுபிடிப்பதற்கு இந்தக் கண்டுபிடிப்பே அடிப்படையாக அமைந்தது.

அக்காலத்தில் மருத்துவர்கள் இதயத்தின் துடிப்பை நாடிபிடித்து அறிந்தனர். அவர்கள் நேரத்தை கணக்கிட சிரமப்பட்டனர். மருத்துவர்களுக்கு பயன்படும் வகையில் கலிலியோ கடிகாரத்தை உருவாக்கிக் கொடுத்தார். மருத்துவம் செய்யாவிட்டாலும், மருத்துவத்துறைக்கு சேவை செய்தார். அதுபோல், உடலின் வெப்பத்தைக் கணக்கிடும் வெப்பமானியையும் கண்டுபிடித்தார்.

கணிதக்கலையில் மிகுந்ததிறமை பெற்றிருந்த கலிலியோ அவர் பயின்றுவந்த பைசா பல்கலைக்கழகத்திலேயே 1589 - ஆம் ஆண்டு கணித ஆசிரியராக பதவியேற்றார். அக்காலத்தில் கிரேக்க அறிஞர் அரிஸ்டாட்டிலின் அறிவியல் கொள்கைகளே அனைவராலும் ஏற்றுகொள்ளப்பட்டன. எதையும் சோதனை செய்துபார்க்கும் கலிலியோ, அரிஸ்டாட்டில் கண்ட முடிவுகளிலுள்ள தவறுகளைச் சுட்டிக்காட்டினார்.

இரண்டு பொருட்கள் ஒரே உயரத்திலிருந்து கீழே விழுந்தால் அவற்றுள் எடை அதிகமான பொருள்தான் முதலில் தரையில் விழும் என அரிஸ்டாட்டில் கூறியுள்ளார். இதை கலிலியோ மறுத்தார். பொருட்கள் அனைத்தும் ஒரே உயரத்திலிருந்து விழுந்தால் ஒரே சமயத்தில் அவை தரையை அடையும் என்று கூறினார்.

இதை நிரூபிக்க 1590 - ஆம் ஆண்டு மக்களையும், அறிஞர்களையும் பைசா நகரத்து கோபுரத்துக்கு அழைத்துச் சென்றார். அனைவரையும் கீழே நிறுத்திவிட்டு கலிலியோ மேலே சென்றார். உச்சியிலிருந்து இரண்டு குண்டுகளை ஒரே சமயத்தில் தரையை நோக்கிப் போட்டார். ஒரு குண்டின் எடை 450 கிராம். இன்னொரு குண்டின் எடை 4500 கிராம். இரண்டும் ஒரே நேரத்தில் தரையை வந்தடைந்தன. கோபுரம் சாய்ந்த கோபுரம் என்பதால் கலிலியோவால் எளிதாக விளக்கிக் காட்ட முடிந்தது. ஆனாலும், மக்கள் கண்ணால் கண்டும் அவரது கண்டுபிடிப்பை ஏற்றுக் கொள்ள மறுத்தனர். ஆனாலும், சோதனை செய்து முடிவுகளை ஏற்கவேண்டும் என்ற கொள்கை வளர இது அடிகோலியது. இதுபோல் சாய்வுகளிலும் பந்துகளை உருளவிட்டு பரிசோதித்து பார்த்தார். தனது முடிவுகளை ஆன் மோஷன் (On Motion) என்ற புத்தகமாக எழுதி வெளியிட்டார்.

அந்நாளில் லெக்ஹாரன் என்னும் துறைமுகத்தில் மணல் மிகுதியாக நிறைந்திருந்தது. கப்பல் தங்குவதற்கு அது இடையூறாக இருந்தது. அறிஞர் ஒருவர் மணல் அள்ளும் கருவி ஒன்றை கண்டுபிடித்தார். கலிலியோ அது பயன்படாது என்று கூறிவிட்டார். அது உண்மையிலேயே பயன்படாது போய்விட்டது. அந்த அறிஞரும் மக்களும் கலிலியோ மீது வெறுப்பு கொண்டவர்களாக இருந்தனர்.

கலிலியோ 1592 - ல் பதுவா பல்கலைக்கழகத்தில் கணிதப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். அங்கு பணிபுரிந்தபோது அருகிலுள்ள அர்செனல் (Arsenal) துறைமுகத்திற்கு பொழுது போக்காக செல்வார். அங்கு வந்திருந்த வெனிஸ் கப்பல் சரக்குகளை ஏற்றிக் கொண்டிருந்தது. கலிலியோ கப்பல் இயந்திரங்களின் செயல்பாடுகள் மீது மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். 1593 - ல் ஒரு கப்பலின் துடுப்பு வலிக்கின்ற சுக்கானின் நெம்புகோலின் இயங்கா நிலைபுள்ளி (Fulcrum) பழுதடைந்தது. கலிலியோ ஒரு நீரேற்றியை (Pump) உருவாக்கி அந்தப் பிரச்சனைக்கு தீர்வுகண்டார். ஒரு குதிரை சக்திக்கொண்ட அந்த நீரேற்றியின் உரிமத்தையும் பெற்றுக் கொண்டார். இவையல்லாமல் பல இயந்திரக் கண்டுபிடிப்புகளை கலிலியோ கண்டுபிடித்தார். ஆனாலும், அவரது கண்டுபிடிப்பில் தலையானது அவர் தொலைநோக்கி கருவியை (Telescope) கண்டுபிடித்தது தான்.

1604 - ஆம் ஆண்டில் வானில் ஒரு புதிய விண்மீன் காணப்பட்டது. வானநூல் அறிஞர்களுக்கு அது என்னவென்று திட்டமாக தெரியவில்லை. சிலர் அதை ஓர் புதிய கிரகம் என்றும் சிலர் அது ஒரு வால் நட்சத்திரம் என்றும் கூறினர். ஆனால், அது கிரகங்களுக்கு அப்பாலுள்ள ஒரு விண்மீன் என்று கலிலியோ நிரூபித்தார். அதன்பிறகு வானவியலில் அவரது கவனம் சென்றது. வானவியல் தொடர்பான அவரது உரையை கேட்க மக்கள் பெருந்திரளாக வந்தனர்.

அக்காலத்தில் ஹாலந்து நாட்டில் மூக்குக்கண்ணாடி வியாபாரி ஒருவர் இருந்தார். அவரிடமிருந்த குவிவில்லை மற்றும் குழி வில்லைகளை வைத்து அவரது மகன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அவன் குவிவில்லையை கண்ணருகிலும் குழிவில்லையை சற்று தூரத்திலும் பிடித்துக் கொண்டு தூரத்திலுள்ள மாதாகோவிலை பார்த்தான். அப்போது அக்கோயில் கோபுரம் வெகு அருகில் தெரிந்தது. பையன் சந்தோசத்தில் கூச்சல் போட்டான். அவனது தந்தை வந்து பார்த்திருக்கிறார். அவருக்கும் மாதாகோயில் அருகில் தெரிந்தது. இந்தச் செய்தியை கேள்வியுற்ற கலிலியோ ஒரு குவிவில்லையையும், ஒரு குழிவில்லையையும் முன்னும் பின்னும் நகர்த்தக் கூடியவகையில் அமைத்து தொலை நோக்கியை செய்தார். உலகில் முதல் முதலாக உருவாக்கப்பட்ட தொலைநோக்கி இதுதான். இது 1609 - ல் நடந்தது.

இதைத் தொடர்ந்து பல தொலைநோக்கிகளை உருவாக்கினார். நான்காவது தயாரித்த தொலைநோக்கியைக் கொண்டு சந்திரனை ஆராய்ந்தார். சந்திரனில் பூமியில் உள்ளதுபோல் மேடுபள்ளங்களும், மலைகளும் தெரிந்தன. சந்திரனின் மேல்பகுதி வளவளப்பாக இல்லை என்பதைக் கண்டார். மேலும், சூரியனில் கரும்புள்ளிகள் இருப்பதையும், சனிகிரகத்தைச் சுற்றி வளையங்கள் உள்ளதையும், வியாழன் கிரகத்தை நான்கு சந்திரன்கள் சுற்றுகின்றன என்பதையும் கண்டுபிடித்து கூறினார்.

பூமி தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றிவருகிறது என்பதை ஆதாரத்துடன் விளக்கினார். 1632 - ல் இரண்டு முக்கியமான உலகங்களின் உரையாடல் (Dialogue Concerning the Two chief world systems) என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டார்.

கலிலியோவின் விரோதிகள் அவருக்கு எதிராகச் செயல்பட்டனர். சமயப் பெரியவர்களின் கருத்துக்கு எதிரான பல உண்மைகள் அதில் இருப்பதாக குற்றம் சாட்டினர். எனவே, 1633 - ஆம் ஆண்டு ஜூன் 2 - ஆம் நாள் கிறிஸ்தவத் திருச்சபை முன் நிறுத்தப்பட்டு குற்றம் சாட்டப்பட்டார். அப்போது அவர் நமது வேதநூல் பரலோக வாழ்வை அடைவதற்கான வழியைக் காட்டுகிறதே தவிர வானில் உள்ள அற்புதங்களை விளக்குவதன்று என்று வாதிட்டார். ஆனால், இந்த வாதம் ஒப்புக் கொள்ளப்படவில்லை. கலிலியோவுக்கு சிறைத்தண்டனை அளிக்கப்பட்டது. 22 நாட்கள் சிறையிலிருந்த பின் கலிலியோ விடுவிக்கப்பட்டு வியன்னா நகருக்கு அனுப்பப்பட்டார்.

அங்கு அவர் வறுமையால் பீடிக்கப்பட்டு, கண்களை இழந்து குருடரான அவர் தனது 78 ம் வயதில் மரணமடைந்தார்.

கலிலியோவுக்கு மூன்று குழந்தைகள். இரண்டு பெண்கள் இருவரும் கிறிஸ்தவ துறவற சகோதரிகளாக சேர்ந்தனர். சகோ. செலஸ்டி மற்றும் சகோ. அர்காஞ்சலா தான் அந்த இருவர். ஒரு மகன் வின்சென்சியோ.

டெலஸ்கோப் உருவாகிய வரலாறு!!!

டெலஸ்கோப் உருவாகிய வரலாறு!!!
1608-ம் ஆண்டு ஒரு முறை ஹாலந்து நாட்டில் ஹான்ஸ் லிப்பன்ஷி (ஜேன் லிப்பர்ஷை.) என்பவர் ஒரு கண்ணாடிக் கடை வைத்து நடத்தி வந்தார். அப்பொழுது அங்கு தனது எடுபிடி வேலைகளுக்காக ஒரு சிறுவனை பணியில் அமர்த்தி வேலை வாங்கி வந்தார் . ஒரு நாள் ஒரு அவசர வேலை காரணமாக அந்த ஹான்ஸ் லிப்பன்ஷி என்பவருக்கு வெளியில் செல்லவேண்டிய நிர்பந்தம் ஏற்ப்பட்டது. அப்பொழுது அந்த சிறுவனிடம் கடையை, தான் வரும்வரை பார்த்துக்கொள்ளும்படி சொல்லி விட்டு சென்றுவிட்டார்.

ஹான்ஸ் லிப்பன்ஷி சென்ற பின்பு அங்கு பணி செய்த சிறுவன் வேலைகளை நிறுத்திவிட்டு குறும்புகள் செய்து இன்றையப் பொழுதை கழிக்க திட்டமிட்டான். சிறிது நேரத்திற்குள் எல்லாம் அந்த குறும்புகளும் சலிப்புத் தட்டிப் போகவே, கடையில் விற்பனைக்கு வைத்து இருந்த சில கண்ணாடி வில்லைகளை எடுத்து ஒவ்வொன்றாக உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான். சிறிது நேரம் கழித்து ஒரு உட்குவிந்த கண்ணாடி வில்லை ஒன்றை எடுத்து சற்று தூரத்தில் வைத்து தான் பணிபுரியும் கடையின் அருகில் இருக்கும் ஒரு மாதா கோவிலை உற்று நோக்க தொடங்கினான். அப்பொழுது அவன் கண்டக் காட்சி அவனை மிகவும் வியப்பின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. சந்தோசத்தின் மகிழ்ச்சியில் வார்த்தைகள் எதுவும் பேசாமல் துள்ளிக் குதிக்கத் தொடங்கினான். காரணம் அவன் பார்த்த அந்த மாதக் கோவிலின் கோபுரம் அவனின் கண்ணின் பக்கத்தில் வந்து நிற்பதைப் போல் அந்தக் குவிந்தக் கண்ணாடி வில்லைகள் காட்டியது . அப்பொழுது யதார்த்தமாக ஹான்ஸ் லிப்பன்ஷி சென்ற பணி முடிந்து திரும்பி வந்துவிட்டார்.

galileo_telescope_320அப்பொழுது சிறுவன் தான் கண்ட அதிசயத்தை அவரிடம் விளக்கி சொல்லவே அவரும் அந்த குவிந்தக் கண்ணாடியை வைத்து தினமும் தூரத்தில் இருக்கும் ஒவ்வொன்றையும் அருகில் பார்த்து ரசித்து வந்தார். இந்த விஷயம் நாளடைவில் இத்தாலிய விஞ்ஞானியான கலிலியோவின் காதிற்கு எட்டியது. உடனே கலிலியோ (Galileo)அந்தக் கடைக்கு சென்று அந்தக் கண்ணாடி வில்லையை வாங்கி அந்த தத்துவத்தை அறிந்துகொண்டார். பின்பு ஒரு உருண்டை வடிவிலான சிறிய பெட்டி ஒன்றை உருவாக்கி அந்தக் குவிந்த கண்ணாடி வில்லைகளை முன்னும் பின்னும் ஒவ்வொன்றாகப் பொருத்தி அவற்றை சற்று மேலும் கீழும் நகர்த்தி நகர்த்தி வித்தியாசமான மாற்றங்களைக் கண்டு வியந்தார். பின்பு அவற்றிற்கு ஒரு மாதிரி வடிவம் அமைத்து இறுதியாக டெலஸ்கோப் என்று பெயரிட்டார் அதுவே உலகில் தோன்றிய முதல் தொலை நோக்கியாகும்.

அதன் பின் தான் உருவாக்கிய அந்த தொலைநோக்கி மூலம் கடலில் மிதந்துகொண்டிருக்கும் ஒரு கப்பலை பார்க்கத் தொடங்கினார். அந்தக் கப்பல் அவர் கண்களுக்கு மிகவும் அருகில் தெரியத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து ஒரு பெரிய டெலஸ் கோப் (telescope) ஒன்றை உருவாக்கி தற்செயலாக அந்த டெலஸ் கோப்பை சந்திரன் பக்கமாகத் திருப்பினார். அந்த நொடி முதல் வானவியல் ஆராய்ச்சியில் டெலஸ் கோப்பின் (telescope) பங்கு தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிப்போனது என்று சொல்லலாம். சந்திரனை தான் உருவாக்கிய டெலஸ் கோப்பின் மூலம் பார்த்த கலிலியோ அதிர்ந்து போனார் காரணம் அதுநாள் வரை சந்திரன் மிகவும் மென்மையான பிரகாசம் நிறைந்த கோள் என்றுதான் சொல்லிக்கொண்டிருந்தது இந்த உலகம். அதற்கு மாறாக சந்திரன் கரடுமுரடான மலைகள் நிறைந்த கோள் என்று அன்றுதான் முதன் முதலாக இந்த உலகிற்கு தெரியவந்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

கலிலியோ கண்டுபிடித்த தொலைநோக்கியில் சில குறைபாடுகள் இருந்தது. புறம் குவிந்த கண்ணாடிகளை தொலைநோக்கியில் பயன்படுத்தி பார்க்கும் பொழுது காட்சியில் தெரியும், உருவங்களின் பக்கத்தில் பல வண்ணங்கள் காணப்பட்டது அதனால் காட்சிகள் தெளிவாக தெரியாமல் இருந்தன.

telescope_320இந்தக் குறையை சரி செய்ய கலிலியோவிற்கு பின்பு இங்கிலாந்து விஞ்ஞானியான சர் ஐசக் நியுட்டன் முயற்சி செய்தார். அப்பொழுது இந்தக் புறம் குவிந்த கண்ணாடியை பயன்படுத்தினால் இந்த குறைபாடுகள் தொடரத் தான் செய்யும் என்பதை உணர்ந்த நியுட்டன் அதற்கு மாறாக ஒரு கண்ணாடியை கண்டுபிடிக்க முயற்சி செய்தார் இறுதியில் முகம் பார்க்கும் கண்ணாடி போன்ற மாதிரி ரசம் பூசப்பட்டக் கண்ணாடியை பயன்படுத்தி வெற்றி கண்டார். அதன் பின்புதான் இந்த உலகிற்கு குறைகள் எதுவும் இல்லாத முதல் தொலைநோக்கி உருவாக்கப்பட்டது. இத்தொலை நோக்கிகளுக்கு பிரதிபலிக்கும் தொலைநோக்கிகள் என்ற மற்றொரு பெயரும் உண்டு. இதன் அடிப்படையில்தான் இன்றைய அனைத்து டெலஸ்கோப்புகளும் செயல்படுகிறது.

இது வரை உருவாக்கப்பட்டுள்ள டெலஸ்கோப்புகளில் அதிக சக்தி வாய்ந்தது பூமியில் இல்லை. அது விண்வெளியில் சுற்றிக்கொண்டு இருக்கிறது. அது தான் ஹப்பிள் டெலஸ்கோப். பூமியில் உள்ள டெலஸ்கோப்புகளை விட அளவில் சிறியதாக இருந்தாலும் அவை அனைத்தையும் விட அதிக சக்திவாய்ந்ததாகும். உலகிலேயே மிகப்பெரிய இராட்சத தொலைநோக்கியான இது 18 மாடிக் கட்டிட உயர அளவில் ஆயிரம் டன் எடையுள்ளதாக இருக்கும். அதனால் தான் இதற்கு தி ஜெயன்ட் மெகல்லன் டெலஸ்கோப் என்று பெயரிட்டுள்ளனர்.

ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக் கழகம் உட்பட 9 ஆராய்ச்சி நிறுவனங்கள் இணைந்து இதை வடிவமைத்துள்ளன. இதன் மூலம் பிரபஞ்சம் மற்றும் கறுப்பு துவாரத்தையும் நாம் காண முடியும். பிரபஞ்சத்தில் சூரிய குடும்பத்தையும் தாண்டி இதுவரை நாம் காணாத சில அரிய தகவல்களையும், விவரங்களையும் இந்த மெகல்லன் டெலஸ்கோப் மூலம் காண முடியும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் .

அறிவை வ‌ள‌ர்த்துக் கொள்வ‌து எப்ப‌டி?

 
 அறிவை வ‌ள‌ர்த்துக் கொள்வ‌து எப்ப‌டி?
 
 அறிவை வ‌ள‌ர்த்துக் கொள். இது ஒவ்வொருவ‌ரும் ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கு கூறும் அறிவுரை. உங்க‌ள் குழந்தைக‌ளை எங்க‌ள் ப‌ள்ளிக்கு, க‌ல்லூரிக்கு அனுப்புங்க‌ள். நாங்க‌ள் அவ‌ர்க‌ளின் அறிவை வ‌ள‌ர்த்து விடுகிறோம். இது திருட்டுக் க‌ய‌வாளி ஆசிரிய‌ கொள்ளைக்கூட்ட‌ங்க‌ளின் பொய்யுரை. அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள‌ ஒருவ‌ன் ப‌ல‌ ஆண்டுக‌ள் ப‌ள்ளி சென்று, புத்த‌க‌ங்க‌ள் ப‌ல ப‌டித்து, பாட‌ங்க‌ள் ப‌ல‌ ப‌யின்று, தேர்வுக‌ள் ப‌ல எழுதி, ப‌ட்ட‌ங்க‌ள் ப‌ல பெற‌வேண்டுமா? தேவையில்லை. உன்னிட‌ம் சிந்திக்கும் திற‌னிருக்கிறதா? அது போதும். நான் காட்டும் வ‌ழியில் சிந்தித்துப் பார். வ‌ள‌ரும் உன் அறிவு.
 
 கேள்வி: ஒன்றைப்ப‌ற்றி என் அறிவை வ‌ள‌ர்த்துக் கொள்வ‌து எப்ப‌டி?
 
 ப‌தில்: ஒன்றைப்ப‌ற்றி அறிய‌ப்ப‌ட‌ வேண்டிய‌வைக‌ளை அறியும்போது அதைப்ப‌ற்றிய‌ உன் அறிவு வ‌ள‌ரும்.
 
 
 
 ஒன்றைப்ப‌ற்றி உன் அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள அறியப்ப‌ட‌ வேண்டியவைக‌ள்:
 1. அத‌ன் பாக‌ங்க‌ள் எவை?
 2. அதிலிருப்ப‌து, ம‌ற்ற‌ எதிலிருக்கிற‌து?
 3. அத‌னோடு இணைந்திருப்ப‌வைக‌ள் எவை?
 4. அதைப் பாதிப்ப‌வைக‌ள் எவை?
 5. அத‌ன் உருக்க‌ள் எவை?
 6. அத‌ற்குப் ப‌திலாக‌ இருக்கும் மாற்றுக‌ள் எவை?
 7. அத‌னால் ஏற்ப‌டும் ப‌ய‌ன்க‌ள் எவை?
 
 
 உன்னைப்ப‌ற்றி உன் அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள அறியப்ப‌ட‌ வேண்டியவைக‌ள்:
 1. உன் பாக‌ங்க‌ள் எவை?
 2. உன்னிட‌மிருப்ப‌து, ம‌ற்ற‌ எவ‌ரிட‌ம் இருக்கிற‌து?
 3. உன்னோடு இணைந்திருப்ப‌வ‌ர்க‌ள் யார்?
 4. உன்னைப் பாதிப்ப‌வைக‌ள் எவை?
 5. உன் உருக்க‌ள் எவை?
 6. உன‌க்குப் ப‌திலாக‌ இருப்ப‌வ‌ர்க‌ள் யார்?
 7. உன்னால் ஏற்ப‌டும் ப‌ய‌ன்க‌ள் எவை?
 
 
 என்னைப்ப‌ற்றி உன் அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள அறியப்ப‌ட‌ வேண்டியவைக‌ள்:
 1. என் பாக‌ங்க‌ள் எவை?
 2. என்னிட‌மிருப்ப‌து, ம‌ற்ற‌ எவ‌ரிட‌ம் இருக்கிற‌து?
 3. என்னோடு இணைந்திருப்ப‌வ‌ர்க‌ள் யார்?
 4. என்னைப் பாதிப்ப‌வைக‌ள் எவை?
 5. என் உருக்க‌ள் எவை?
 6. என‌க்குப் ப‌திலாக‌ இருப்ப‌வ‌ர்க‌ள் யார்?
 7. என்னால் ஏற்ப‌டும் ப‌ய‌ன்க‌ள் எவை?
 
 
 
 
 ஒரு ஆணைப்ப‌ற்றி உன் அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள அறியப்ப‌ட‌ வேண்டியவைக‌ள்:
 1. அவ‌ன் பாக‌ங்க‌ள் எவை?
 2. அவ‌னிட‌மிருப்ப‌து, ம‌ற்ற‌ எவ‌ரிட‌ம் இருக்கிற‌து?
 3. அவ‌னோடு இணைந்திருப்ப‌வ‌ர்க‌ள் யார்?
 4. அவ‌னைப் பாதிப்ப‌வைக‌ள் எவை?
 5. அவ‌ன் உருக்க‌ள் எவை?
 6. அவ‌னுக்குப் ப‌திலாக‌ இருப்ப‌வ‌ர்க‌ள் யார்?
 7. அவனால் ஏற்ப‌டும் ப‌ய‌ன்க‌ள் எவை?
 
 
 ஒரு பெண்ணைப் ப‌ற்றி உன் அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள அறியப்ப‌ட‌ வேண்டியவைக‌ள்:
 1. அவ‌ளின் பாக‌ங்க‌ள் எவை?
 2. அவ‌ளிட‌மிருப்ப‌து, ம‌ற்ற‌ எவ‌ரிட‌ம் இருக்கிற‌து?
 3. அவ‌ளோடு இணைந்திருப்ப‌வ‌ர்க‌ள் யார்?
 4. அவ‌ளைப் பாதிப்ப‌வைக‌ள் எவை?
 5. அவ‌ளின் உருக்க‌ள் எவை?
 6. அவ‌ளுக்குப் ப‌திலாக‌ இருப்ப‌வ‌ர்க‌ள் யார்?
 7. அவ‌ளால் ஏற்ப‌டும் ப‌ய‌ன்க‌ள் எவை?
 
 “மெய்ப்பொருள் அறிவல்ல!
மெய்ப்பொருள் காண்பது தான் அறிவு!”
 
 
 எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
 மெய்ப்பொருள் காண்ப தறிவு.          (குறள் எண் : 423)
 
 
 ஒரே விஷயத்தை பல விதங்களில் கூறமுடியும். கூறிய விதம் புதிது என்பதால் கூறிய விஷயமும் புதிது என்று அர்த்தமல்ல. ஒன்றைப் பற்றி மேற்கூறிய விஷயங்களை வெவ்வேறான வார்த்தைகளைக்கொண்டு வெவ்வேறான புதிய விதங்களில் கூறமுடியும். ஒன்றைப் பற்றி ஒரு விஷயத்தை ஒருவர் புதுவிதமாகக் கூறினாலும், அவர் கூறும் விஷயம் புதிதுதானா என்பதை எண்ணிப்பார்க்கவேண்டும். அறியப்படும் விஷயமும் பொருளுக்குப் பொருள் மாறுபடுகிறதா என்பதையும் எண்ணிப் பார்க்கவேண்டும்! அறியப்படும் விஷயங்கள் பொருளுக்குப் பொருள் மாறக்கூடியதல்ல. You will discover the same laws of nature in anything and everything! இது குறித்து மேலும் விவரங்கள் வேண்டுவோர் KNOWLEDGE EXPANSION MANUAL-ஐ பார்க்கவும்.
 
 ஒரு விஷயத்தைக் கூற வெவ்வேறான வார்த்தைகள்:
 
 1. அத‌ன் பாக‌ங்க‌ள் எவை?
 பாகம், பகுதி, பிரிவு, அங்கம், அங்கத்தினர், உறுப்பு, உறுப்பினர், கட்டம், பக்கல், கூறு, காண்டம், மூலகம், மூலகத்துவம், பின்னம், துண்டு, துணுக்கு, உள்ளடங்கிய பொருள், வகுப்பு, பகுப்பு, துளிமம், பங்கு, துண்டம், வெட்டுத் துண்டம், பகவு, துறை, உள்ளடக்கமாகக் கொண்டிரு, உட்கூறாகக் கொண்டிரு, உட்பொதி, கால அளவு, பருவம், Part, Component, Element, Factor, Fraction, Fragment, Ingredient, Member, Quantum, Section, Sector, Segment, Division, Piece, Portion, Compartment, Region, Domain, Unit, Phase, Particular, consists of, comprise, contains, includes, content, constituents, be a part of, not whole, period
 
 2. அதிலிருப்ப‌து, ம‌ற்ற‌ எதிலிருக்கிற‌து?
 ‘எங்கிட்ட இருப்பது வேற எவங்கிட்ட இருக்கு’ என பலர் கூறக் கேட்டிருக்கிறோம். ‘அவங்கிட்ட இருப்பது என்னிடமில்லையே’ என சிலர் புலம்பக் கேட்டிருக்கிறோம். இது ஒப்பிடுதல். எங்கிட்ட இருப்பது வேற எத்தனை பேரிடம் இருக்கு? இது ஒப்பிட்டபின் எண்ணிக் கணக்கிடல். பரவல், ஒப்பீடு, ஒத்துப்பார், ஒப்பிடு, ஒரே மாதிரியானதென்று தெரிவி, ஒத்ததென விவரித்துரை, ஒப்புப்படிகளைத் தா, ஒப்பீடு செய், ஒப்புமை காட்டு, ஒப்பாக, ஒப்புமை, ஒத்த தன்மை, ஒப்பு, ஒத்திசைவு, ஒப்புடைமை, அமைப்பொற்றுமை, அமைப்பொப்பு, உடனொத்திசையும் பண்பு, ஒத்தவடிவ, ஒத்த, ஒப்புமையுடைய, போன்றிருக்கிற, நகலி, போலிகை, படியெடு, பிரதி, நகல், அதே மாதிரி, பிரதிமை, போன்றிருத்தல், ஒத்திருத்தல், ஒரே மாதிரியான, ஒன்று போன்ற, அதுபோலவே, ஒரேமாதிரி, ஒரே வகைமை, அதே தன்மையான, ஒரே இயல்புடைய, அதே வகையான, ஒரே மாதிரிப்பட்ட, ஒரே வகையான தன்மை, அதுவே போன்ற, சமன், சமம், சரிசமமான, நிகரான, சமானப் பகுதி, சமான, சமன்பாட்டுத் தத்துவம், Distribution, Abundance, Comparable, Analogy, Homology, Homologue, Clone, Copy, Analog, Analogous, Resembling, Resemblance, Alike, Similar, Same, Sameness, Identical, Equal, Similarly, Equally, Synonymous, Equivalence, Equivalent, Different, Difference, Unique, Unlike, Dissimilar, Distinct, எங்கிட்ட இருப்பது வேற எத்தனை பேரிடம் இருக்கு? How often, How frequent, How many, frequency, எண்ணிக்கை, எண்ணுதல், அளவிடல், அளவீடு [frequency = எண்ணிக்கை, எத்தனை தடவை, எத்தனை முறை]
 3. அத‌னோடு இணைந்திருப்ப‌வைக‌ள் எவை?
 இணைப்பு, பிணைப்பு, உறவு, தொடர்பு, தொகுத்தவரிசை, இணை, சேர், பொருந்தவை, ஒன்றுபடுத்து, சேர்த்துக்கட்டு, இணக்கி ஒருநிலைப்படுத்து, கருத்தில் இணை, தொடர்புபடுத்து, பிறவற்றுடன் கூடு, சம்பந்தம், இணைத்தல், பிணை, தொடர் கோவை, கொக்கி, கொளுவி, இடையிணைப்புக்கருவி, இடையிணைப்புப் பொருள், இடை இணைப்பாளர், இடைநிரப்பீடு, கட்டு, கட்டுப்பாடு, கோவைப்படுத்து, Connectivity, Connect, Connection, Relation, Link, Bond, Bind, Associate, Attachment, interconnection, Hookup, Joining, Joint, Junction, Join, Ligament, Ligation, Relationship, Tie, Combine, Affix, Fasten, Append, Linkage, Connective, Concatenate
 4. அதைப் பாதிப்ப‌வைக‌ள் எவை?
 பாதிப்பு, தாக்கம், தாக்கு, இயக்கு, தொந்தரவு செய், அமைதியைக்குலை, உலைவுசெய், இடையிட்டுத் தடு, தொல்லைகொடு, குழப்பு, கலக்கு, கிளர்ச்சி, தூண்டு , தூண்டல், தூண்டிச் செயலாற்றுவி, Disturb, Induce, Influence, Kick, Knock, Bang, Crush, Injure, Motivate, Affect, Tamper, Disturbance, Force, push, pull, Arouse, Evoke, Perturb, Excite, Inspire, Rouse, Stimulate, Stimuli, Stimulant, Compel, Cause, Effect, Response
 5. அத‌ன் உருக்க‌ள் எவை?
 உரு, உருவம், வடிவம், ரூபம், மூர்த்தி, தோற்றம், படிவம், வடிவு, உருவு, உருவரைத்தோற்றம், தோற்றம், உருக்காட்சி, காட்சியுரு, பிழம்புரு, மெய்யுருவம், புறவடிவம், வடிவவேறுபாடு, வகை மாதிரி, கோலம், சீர், ஒழுங்கமைப்பு, ஒழுங்கமைவான வடிவம், உருச்செப்பம், உருவாக்கம், தொற்றுவித்தல், உருமாற்றம், உருவம் மாறுதல், மாற்றம், ஸ்திதி, நிலை, நிலைமை, Form, Shape, Topology, Order, reorder(=change), transformation, transition, state
 6. அத‌ற்குப் ப‌திலாக‌ இருக்கும் மாற்றுக‌ள் எவை?
 ‘இவ போன என்ன, இவளுக்குப் பதிலா இன்னொருத்தி சிக்கவா மாட்டா’, ‘இந்த இடம் இல்லாட்டா என்ன, இதற்குப் பதிலா இன்னொரு இடம் இருக்குமல்ல’, ‘இப்ப போன போகுது, இதற்கு பதிலா பின்னாடி செஞ்சுக்கலாம்’, ‘இந்த வேலை போனால் போகட்டும், இதற்குப் பதிலா
 
 இன்னொரு வேலை தேடிக் கொள்ளலாம்’,  மாற்று, பகரம், பதிலீடு, பதிலி, ஈடு, பதிலாள், மாற்றாள், மாற்றீடு செய், ஈடுகொடு, மாற்றாள், பதிற்பொருள், மாற்றுப்பொருள், பகரப்போலி, பதில் ஏற்பாடு செய், பதிலாள் அமர்த்து, மாற்றீடு செய், இருந்தும், பகரமாக, பதிலாக, ஈடாக, அது இருந்தால் என்ன செய்வது? அது இல்லாவிட்டால் என்ன செய்வது? மற்றபடி, இல்லையெனின், நிலைமைகள் வேறானவையாயிருந்தால், அல்லது, பெயராள், பதிலாக அனுப்பு, மாற்று மருந்து, வாய்ப்பு, Substitute, Instead, Else, Instead of, Spare, Surrogate, Depute, As an alternative to, In lieu of, In place of, In preference, Either, or, otherwise, possibilities, opt, option [Note: comparison ≠ substitution]
 7. அத‌னால் ஏற்ப‌டும் ப‌ய‌ன்க‌ள் எவை?
 அது எதுக்கு? அவள் எதுக்கு? அவன் எதுக்கு? அது எதுக்குப் பயன்? அவள் எதுக்குப் பயன்? அவன் எதுக்குப் பயன்? அது எதுக்குத் தேவை? அவள் எதுக்குத் தேவை? அவன் எதுக்குத் தேவை? அதனாலென்ன பலன்? அதனாலென்ன பயன்? அவளாலென்ன பயன்? அவனாலென்ன பயன்? அது எனக்கு ஏன் தேவை? அவன் எனக்கு ஏன் தேவை? அவள் எனக்கு ஏன் தேவை? உபயோகம், பயன்பாடு, பயன், பலன், நற்பலன், தூர்பலன், பிரயோஜனம், அவசியம், தேவையுள்ளவனாயிரு, வேண்டு, வேண்டியிரு, வேண்டிய பொருள், நாட்டம், வேண்டப்படும் பொருள், பூர்த்தி செய், Use, useful, fulfill, need, requirement, benefit, satisfy
 
 ஒன்றைப்ப‌ற்றி அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள அறியப்பட வேண்டியவைகள் எவையென்பதை இன்றைய ஆசிரியர்கள் மாணவர்களுக்குப் போதிப்பது கிடையாது. கருத்துக் கோர்வையற்ற காகிதகக் குப்பைகளின் தொகுப்புதான் இன்று மாணவர்களுக்குப் பாடப்புத்தகம். ஒன்றைப்ப‌ற்றி தன் அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள அறியப்பட வேண்டியவைகள் எவையென அறியாதவன் எப்படி உனக்கு ஒன்றைப்ப‌ற்றி அறிவை வளர்த்துக்கொள்ள சரியான வழிகாட்ட முடியும்? பணத்தை ‘ஆசிரியன்’ என்ற போர்வையில் இருக்கும் ஓநாய்களிடம் கொடுத்து முட்டாள் ஆகிவிடாதே! நான் இங்கு காட்டியுள்ள வழியைத் தவறு எனச் சுட்டிக்காட்டும் அறிவுள்ள ஆசிரியன், பேராசிரியன் எவனாவது தமிழகத்தில் இருக்கிறானா? இருந்தால் நேரடியான பொது விவாதத்திற்கு வரட்டும்! அரசியல்வாதிகளின் காலைப்பிடித்து முறைகேடாகப் பட்டம் பெற்று லஞ்சம் கொடுத்து பணியில் அமர்ந்திருக்கும் மூதேவிகளா பொது விவாதத்திற்கு வரப்போகிறது?
 
 எதைச் செத்து சுடுகாடு போகும் வரை மறக்காமல் இருக்கிறாயோ, அது மட்டுமே படிப்பினை, படிப்பு, படமாகும். நேற்றுப் படித்தேன். இன்று மறந்துவிட்டேன் என்றிருப்பதெல்லாம் படிப்புமல்ல, பாடமுமல்ல, படிப்பினையுமல்ல!
 
 
 கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்கஅதற்குத்தக                                                                                               (குறள் எண் : 391)
   
 
 பிரபஞ்சம் பற்றி அறிவு இருக்கிற‌தா உன‌க்கு?
 
 பிரபஞ்சம் ப‌ற்றி உன் அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள அறியப்ப‌ட‌ வேண்டியவைக‌ள்:
 1. அத‌ன் பாக‌ங்க‌ள் எவை?
 2. அதிலிருப்ப‌து, ம‌ற்ற‌ எதிலிருக்கிற‌து?
 3. அத‌னோடு இணைந்திருப்ப‌வைக‌ள் எவை?
 4. அதைப் பாதிப்ப‌வைக‌ள் எவை?
 5. அத‌ன் உருக்க‌ள் எவை?
 6. அத‌ற்குப் ப‌திலாக‌ இருக்கும் மாற்றுக‌ள் எவை?
 7. அத‌னால் ஏற்ப‌டும் ப‌ய‌ன்க‌ள் எவை?
 மனித உடல் பற்றி அறிவு இருக்கிற‌தா உன‌க்கு?
 
 மனித உடல் ப‌ற்றி உன் அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள அறியப்ப‌ட‌ வேண்டியவைக‌ள்:
 1. அத‌ன் பாக‌ங்க‌ள் எவை?
 2. அதிலிருப்ப‌து, ம‌ற்ற‌ எதிலிருக்கிற‌து?
 3. அத‌னோடு இணைந்திருப்ப‌வைக‌ள் எவை?
 4. அதைப் பாதிப்ப‌வைக‌ள் எவை?
 5. அத‌ன் உருக்க‌ள் எவை?
 6. அத‌ற்குப் ப‌திலாக‌ இருக்கும் மாற்றுக‌ள் எவை?
 7. அத‌னால் ஏற்ப‌டும் ப‌ய‌ன்க‌ள் எவை?
 தமிழ்நாடு பற்றி அறிவு இருக்கிற‌தா உன‌க்கு?
 
 தமிழ்நாடு ப‌ற்றி உன் அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள அறியப்ப‌ட‌ வேண்டியவைக‌ள்:
 1. அத‌ன் பாக‌ங்க‌ள் எவை?
 2. அதிலிருப்ப‌து, ம‌ற்ற‌ எதிலிருக்கிற‌து?
 3. அத‌னோடு இணைந்திருப்ப‌வைக‌ள் எவை?
 4. அதைப் பாதிப்ப‌வைக‌ள் எவை?
 5. அத‌ன் உருக்க‌ள் எவை?
 6. அத‌ற்குப் ப‌திலாக‌ இருக்கும் மாற்றுக‌ள் எவை?
 7. அத‌னால் ஏற்ப‌டும் ப‌ய‌ன்க‌ள் எவை?
 

Thursday, September 1, 2011

உலக சர்வாதிகாரி ஹிட்லரையே அடிபணிய வைத்தான் ஒரு தமிழன்

உலக சர்வாதிகாரி ஹிட்லரையே அடிபணிய வைத்தான் ஒரு தமிழன்

எத்தனையோ வரலாற்று உண்மைகள் உலகில் மறைக்கப்பட்டிருப்பது மறுக்க முடியாத தொன்று. அதிலும் தமிழினத்தின் வரலாறுகளை கேட்பார் அற்றதால் விழுங்கிக் கொண்டிருக்கிறது இந்த உலகு. உலக சர்வாதிகாரியான ஹிட்லரையே மன்னிப்பு கோரச்செய்தவன் அடி பணியவைத்தவன் ஒருவன் உள்ளான். என்றால் நம்புவீர்களா அதுவும் அவன் ஒரு தமிழன் என்பதை எத்தனை பேர் அறிவீர்கள். ஆம் தோழர்களே அந்த வீரன் வேறுயாருமில்லை அவன் தான் மாவீரன் செண்பகராமன். மாவீரன் செண்பகராமனை எத்தனை பேர் அறிவீர்கள்? ஒரு வேடிக்கையான விடையம் தமிழக அரசே 2009 ஆம் ஆண்டு தான் மாவீரன் செண்பகராமனை இனங்கண்டு கொண்டு அவரை கெளரவித்து சிலை ஒன்றை நிறுவியது.


இத்தனைக்கும் செண்பகராமன் ஒரு சுதந்திர போராட்ட தியாகி என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய சுதந்திரத்திற்காய் போற்களமாடிய வீரர்கள் யார் என்று எமது தமிழ் சகோதரர்களிடம் ஒரு கேள்வி கேட்டால்; உடனே சுபாஸ் சந்திரபோஸ், பகத்சிங் என ஒரு பட்டியலை தருவார்கள். அவர்களிடம் நான் கேட்கிறேன் தமிழர்கள் ஒருவரும் போராடவில்லையா? அல்லது அவர்களின் போராட்டத்தில் வீரியம் இல்லையா? எண்ணற்ற தமிழ் மறவர்கள் விடுதலைக்காக வீரகாவியமானார்கள். வெள்ளையனின் பீரங்கிகளுக்கும் துப்பாக்கிகளுக்கும் முன்னால் வாளும் வேலும் கொண்டு போராடினால் சாவு நிச்சயம் என்று தெரிந்தும்; அடிமையாக வாழ்வதைவிட செத்துமடிவதே மேல் போராடிய வீரபாண்டிய கட்டப்பொம்மன், தீரன் சின்னமலை, வேலு நாச்சியார் போன்ற எண்ணற்ற தமிழ் மறவர்களையெல்லாம் பார்க்க உங்களுக்கு வீரர்களாக தெரியவில்லையா? இப்படி தமிழர்கள் இருப்பதால் தான் தமிழினத்தின் வரலாறு மண்ணோடு மண்ணாகிப் போகிறது. தமிழர்களாகிய நாங்கள் கூட தமிழ் வீரர்களை நினைவுகூறாவிட்டால் வேறு எவன் நினைவுகூறுவான்? கேரளாவிலோ அல்லது ஆந்திராவிலோ போய் கேட்டுப்பாருங்கள் வீரபாண்டிய கட்டப்பொம்மன் யார் என்று? ஒரு பத்து போராவது சரியான பதில் தருவார்களா? இல்லை நண்பர்களே நாங்கள் தான் எங்கள் வரலாற்றை பாதுகாக்கவேண்டும். இல்லையென்றால் காலம் எம் வரலாற்றை மறந்துவிடும். இன்னும் ஒரு ஆச்சரியத்தை உங்களுக்கு தருகிறேன்.


இந்தியக் குடியரசின் உயிர் மூச்சாகத் திகழும் “ஜெய்ஹிந்த்” என்னும் தாரக மந்திரத்தை, முதன் முதலில் உச்சரித்தவர் வங்காளச் சிங்கம் சுபாஸ் சந்திரபோஸ் என்று தான் பலர் கருதுகின்றனர். அவர் நிறுவிய இந்திய தேசிய இராணுவத்தின் போர் முழக்கம் “ஜெய்ஹிந்த்” என்பது உண்மையே. ஆனால் அவருக்கு முன்பே “ஜெய்ஹிந்த்” மந்திரத்தை உச்சரித்து இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கிய பெருமை செண்பகராமன் என்ற ஒரு தமிழனுக்குத்தான் உரியதென்றால், ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? யார் அந்த செண்பகராமன் என்று பார்ப்போம்.


பாரத மாதாவின் அடிமை விலங்குகளை அடித்து நொறுக்கிவிட வேண்டும் என இந்திய மக்கள் அத்தனைபேரும் ஆக்ரோஷத்தால் குமுறிக் கொந்தளித்துக் கொண்டிருந்த காலம் அது. பால்மணம் மாறாத பள்ளி மாணவர்கள் கூட, போராட்டத்தில் குதித்து விட்டனர். பாரதத்தைக் காக்கப் புறப்பட்ட பல்லாயிரக் கணக்கான பள்ளி மாணவர்களுக்கு, ஒரு தலைவனாய் விளங்கினான் ஒரு பதினைந்து வயது சிறுவன். அவன் தான் நாஞ்சில் மண் பெற்றெடுத்த நாயகன் செண்பகராமன். இவனது திறமைகளையும் ஆற்றலையும் கண்டு வெள்ளையர்கள் வியந்து போனார்கள். சிறிது காலம் தலைமறைவாக வாழவேண்டிய நிற்பந்தம்; அதனால் ஜேர்மனிக்கு பயணமானான். ஆங்கிலேயர்களுக்கு அதிர்ச்சி இந்த சிறுவனால் இது எப்படி சாத்தியம்? வியந்தார்கள்.


ஜேர்மனியிலே உயர்கல்விகளையெல்லாம் முடித்து கலாநிதி பட்டம் பெற்றுக்கொண்டார். அறிவிலே சிறந்து மிளிரத்தொடங்கினார். ஜெர்மனியச் சக்கரவர்த்தியாக அப்போதிருந்த கெய்சர் மன்னன், தன் அந்தரங்க நண்பனாக செண்பகராமனை ஏற்றுக்கொண்டார் என்றால், மேலும் விளக்கம் தேவையில்லையல்லவா? டாக்டர் செண்பகராமன் கலந்து கொள்ளாத ராஜாங்க வைபவமோ, விருந்தோ ஜெர்மனியில் கிடையாதென்ற நிலைமை உருவாகியது.


தாயகத்தை விட்டு வெளியேறியதன் நோக்கமே, இனிமேற்தானே நிறைவேற வேண்டும் என்று உழைக்க ஆரம்பித்தான். இந்திய தேசியப் போராட்டத்தைப் பற்றி ஜெர்மனில் நிகழ்ந்த சரமாரியான சொற்பொழிவுகளைத் தொடர்ந்து, இவற்றின் எதிரொலியாக அங்கு “இந்திய ஆதரவு சர்வதேசக் கமிட்டி” ஒன்று நிறுவப்பட்டது. டாக்டர் செண்பகராமனே இதற்கும் தலைமை தாங்கினார். இந்தக் கமிட்டியின் உதவியோடு, ஐரோப்பிய நாடுகளிடையே, இந்தியாவைப் பற்றி நிலவிய தவறான அபிப்பிராயங்களைத் தவிடுபொடியாக்கிய செண்பகராமன், இந்திய நலனுக்கு அக் கமிட்டியை வெற்றிகரமாகப் பயன்படுத்தினார்.


தனது எண்ணங்களை ஐரோப்பிய நாடுகளுக்குத் தெளிவாக எடுத்துக் கூறுவதற்காக டாக்டர் செண்பகராமன் நடத்திய “புரோ இந்தியா” ( PRO INDIA ) எனும் ஆங்கிலப் பத்திரிகை இந்தியாவை நிர்மாணிக்கப் போகும் புரட்சிக் குரலாகியது.


ஹிட்லர் மன்னிப்பு கோரல்


ஒருநாள் டாக்டர் செண்பகராமனும், ஹிட்லரும் அவருடைய சகாக்களும் ஒரு இடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்பொழுது அகங்காரம் பிடித்த ஹிட்லர், ஆணவத்தோடு இந்தியாவையும், இந்தியத் தலைவர்களையும் பற்றி இழிவாகப் பேசினார்.

‘சுதந்திரம் பெறக்கூடிய யோக்கியதை இந்தியர்களுக்கு கிடையாது” என்றாராம் ஹிட்லர். இதைக் கேட்டதும் கொதித்தெழுந்து, சிங்கம் போல் கர்ஜித்தார் செண்பகராமன். இந்தியாவின் பாரம்பரிய பெருமை பற்றியும் இந்தியத் தலைவர்களின் மேதா விலாசம் பற்றியும் ஆணித்தரமான வாதங்களை எடுத்து ஹிட்லர் முன் விளக்கினார். டாக்டரின் கர்ஜனையைக் கேட்ட ஹிட்லர் உண்மையிலேயே ஸ்தம்பித்து விட்டார். டாக்டர் செண்பகராமனின் மனோசக்தி முன், தன்னால் நிற்க முடியாது அடங்கியதோடு, தாம் செய்த பிழையையும் உணர்ந்து உடனே செண்பகராமனிடம் மன்னிப்புக் கோரினார். வார்த்தையளவில் மன்னிப்புக் கேட்டால் போதாது எழுத்திலும்; மன்னிப்பைத் தரவேண்டும் என்று வாதாடினார் பிடிவாதக்காரரான டாக்டர் செண்பகராமன். அதன்படியே, எழுத்தில் மன்னிப்புக் கோரினார்.


முதலாம் உலகப்போர் பிரிட்டனுக்கும் ஜெர்மனுக்குமிடையில் ஆரம்பமாகியது. உடனடியாக டாக்டர் செண்பகராமன் ஐரோப்பிய நாடுகளில் அப்போது சிதறிக் கிடந்த இந்தியர்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டி ஒரு ராணுவ சக்தியாக உருவாக்கினார். போரில் தனக்குச் சாதகமாக இந்தியர்களைப் பயன்படுத்த ஜெர்மனி முயற்சித்தது. அக்கட்டத்தில் ஐரோப்பாவில் வாழ்ந்த இந்தியர்களின் மனோபாவத்தை, போரினால் எழும் இந்த நெருக்கடியை இந்தியாவின் விடுதலைக்காகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர்கள் தீர்மானம் செய்து உள்ளனர். ஜெர்மனியர் லாபத்திற்காக மட்டும் பாடுபட வேண்டும் என்பது அவர்கள் நோக்கமல்ல என நேருஜி தனது சுயசரிதையில் தெளிவாக எடுத்து விளக்கி இருந்தார்.


இவ்விதம் பாரதத்தின் நலன் கருதி செண்பகராமன் உருவாக்கிய போராட்ட அணிக்கு “இந்திய தேசியத் தொண்டர்படை”(ஐ.என்.வி) என்று பெயர் கொடுக்கப்பட்டது


ஜெர்மனி கேட்டுக் கொண்டபடி, சில நிபந்தனைகளோடு போரில், ஜெர்மனிக்கு உதவ ஐ. என். வி. எனும் இந்தியப்படை ஒப்புக் கொண்டது. செண்பகராமனின் திட்டங்கள் அனைத்தையும் ஜெர்மனின் கெய்ஸர் மன்னர் ஏற்றுக் கொண்டார். இந்தச் சந்தர்ப்பத்திலேதான், செண்பகராமனின் மதிநுட்பத்தைப் பாராட்டி, “சுதந்திர பாரதத்தின் முதல் ஜனாதிபதியாக வீரன் செண்பகராமன் நியமிக்கப்பட வேண்டும்” என்று கெய்ஸர் மன்னர் தனது அந்தரங்க ஆவலை வெளியிட்டார்.


யுத்த காலத்தில், ஹம்டன் என்ற பிரசித்தி பெற்ற நீர் முழ்கிக் கப்பலின் பெயரைக் கேட்டாலே, அன்று பிரிட்டிஷார் கதி கலங்கினர் அந்தக் கப்பலைச் செலுத்தி. 1914 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி சென்னையிலுள்ள சென்ட் ஜோர்ஜ் கோட்டையைத் தாக்கி, பிரிட்டிஷ் அரசை கலங்கடித்த வீரன் வேறு யாரென்று நினைக்கிறீர்கள்? “ஹம்டன்” எனும் பிரமாண்டமான நீர் மூழ்கியின் பொறியியலாளரும், இரண்டாவது கமாண்டருமான டாக்டர் செண்பகராமன்தான். சென்ட் ஜோர்ஜ் கோட்டை தகர்ந்ததற்கும், பிரிட்டிஷார் நடுங்கியதற்கும் காரணபூதர்! ஹம்டன் குண்டு வீச்சு சம்பவத்தைப் பற்றிய வரலாறு, கோட்டைச் சுவற்றில் பதிக்கப்பட்டிருப்பதை இப்போதும், சென்னையிலுள்ள இதே கோட்டையில் காணலாம். இது நடந்தது செண்பகராமனின் இருபத்தி மூன்றாவது வயதில்! இத்தனை இளம் பருவத்தில் செண்பகராமன் மேற்கொண்ட சாதனைகளை கண்டு ஆங்கிலேயர்கள் வியந்தார்கள். அவர் வழி நடத்திய ஐ. என். வி. யின் ஆற்றலைக் கண்டு வெள்ளையர் அடைந்த பீதிக்கு அளவே கிடையாதென வரலாறு கூறுகிறது.


இந்தனை வீரசாகசங்களை புரிந்து ஆங்கிலேயர்களை துவசம் செய்த மாவீரன் நாசிப்படைகளின் நயவஞ்சகமான சூழ்ச்சியால் கொல்லப்படுகின்றார். தன் இறுதி லட்சியத்தை மனைவியிடம் கூறுகிறார் செண்பகராமன்.

இந்திய சுதந்திரத்தை கண்ணால் காணாமல். என் உயிர் பிரியத்தான் போகிறது. எனினும் நான் இறந்த பின், எனது அஸ்தியை பத்திரமாக எடுத்துச் சென்று, நான் பிறந்த தமிழ் நாட்டில், என் அன்னையின் அஸ்தி சங்கமமான கரமனை ஆற்றில் கரைத்துவிடு, மறுபகுதியை நாஞ்சில் நாட்டடின் வளமிக்க வயல்களில் தூவிவிடு. அதோடு என் உயிர் பிரிந்தபின்னும், என் போராட்டத்தை தொடர்ந்து நீ, நடத்த வேண்டும். நெஞ்சை உருக்கும் வண்ணம் மேற் கண்ட வேண்டுகோளை விடுத்த செண்பகராமனின் உயிர் 1934 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் திகதி இவ்வுலகத்தை விட்டு நீங்கி அமரத்துவம் அடைந்தது.


உலக சர்வாதிகாரி ஹிட்லரையே அடிபணிய வைத்தான் ஒரு தமிழன்

உலக வரலாறு: ரஷ்யா!!!

சோவியத் ரஷியா உடைந்து சிதறியது

உலக வல்லரசுகளில் ஒன்று ரஷியா. சுமார் 90 ஆண்டுகளுக்கு முன்பு கம்ïனிஸ்டு கட்சியின் தந்தையான லெனின், ரஷியாவை உருவாக்கினார். கம்ïனிஸ்டு கொள்கைகளை அடிப்படையாக கொண்ட சோசலிஸ்டு நாடு (யு.எஸ்.எஸ்.ஆர்) என்று அழைக்கப்பட்டது.

இரண்டாம் உலகப்போருக்கு பிறகு அண்டை நாடுகளைச்சேர்ந்த பல பகுதிகளையும், சில குட்டி நாடுகளையும் இணைத்துக் கொண்டது. இதனால் ரஷியா உலகின் மிகப் பெரிய நாடாக விளங்கியது. இதன் நிலப்பரப்பு ஐரோப்பா, ஆசியா ஆகிய இரு கண்டங்களிலும் பரவி இருந்தது.

இந்த சோவியத் யூனியனில் கம்ïனிஸ்டு ஆட்சி நடைபெற்றது. இந்த நாட்டுக்குள் என்ன நடைபெறுகிறது என்பது வெளி உலகுக்கு தெரியவராது. இதனால் "இரும்பு திரை" நாடு என்று வர்ணிக்கப்பட்டது.

ரஷியக் கூட்டமைப்பில், ரஷியா, பைலோருஷியா, அர்மீனியா, அஜர்பைஜான், உஸ்பெக்கிஸ்தான், துர்க் மேனிஸ்தான், தஜிக்ஸ்தான், கஜகஸ்தான், கீர்க்கிஸ்தான், ஜார்ஜியா, உக்ரைன், மால் டோவியா, எஸ்டோனியா, லட்வியா, லிதுவேனியா ஆகிய 15 மாநிலங்கள் இருந்தன.

இதில் இடம் பெற்ற லிது வேனியா, லட்வியா, எஸ் டோனியா ஆகிய மாநிலங்கள் (இதற்கு பால்டிக் நாடுகள் என்று பெயர்) ஸ்டாலின் ஆட்சி காலத்தில் ரஷியாவுடன் இணைந்தன.

ரஷிய அதிபராக 1984_ம் ஆண்டு கார்பசேவ் பதவி ஏற்றார். அவர் பல சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்தார். சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கம்யூனிஸ்டு ஆட்சியின் அதிகாரபிடியை தளர்த்தியதோடு, உலக அமைதி முயற்சியிலும் இறங்கினார். அணு ஆயுதங்களை ஒழிக்க அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்தார். இதனால் சமாதானத்துக்கான நோபல் பரிசு அவருக்கு கிடைத்தது. உலக நாடுகளில் அவர் புகழ் ஓங்கியது. 6 ஆண்டுகள் சுமுகமாக நகர்ந்தன.

ஆனால் எதிர்பாராத சூழ்நிலையால் ரஷியாவில் உணவு தானிய தட்டுப்பாடு ஏற்பட்டது. உள்நாட்டில் அவருக்கு எதிர்ப்பு கிளம்ப தொடங்கியது. 1991_ம் ஆண்டு மத்தியில் அது உச்ச கட்டத்தை அடைந்தது.

கார்பசேவ் ஜனாதிபதி ஆகும் வரை இருந்த பல்வேறு அதிபர்களிடமும் அதிகாரம் குவிந்து இருந்ததாலும், உலகின் மிகப் பெரிய வல்லரசாக ரஷியா திகழ்ந்ததாலும், இணைந்து இருந்த குட்டி நாடுகள் பிரிந்து போக ஆசைப்படாமல் இருந்தன.

கார்பசேவ் அதிபரானது முதல் அவரது அமைதிக் கொள்கையும், உணவுத்தட்டுப்பாடும் பல மாநிலங்களுக்கு பிரிந்து போகும் எண்ணத்தையும், தைரியத்தையும் கொடுத்தன. பால்டிக் நாடுகள் எனப்படும் லிதுவேனியா, லட்வியா, எஸ்டோனியா ஆகிய மாநிலங்கள் முதல் சுதந்திர குரலை எழுப்பின. அதன் பிறகு ஜார்ஜியாவும் சுதந்திரம் கோரியது.


சுதந்திரம் கோரி போர்க்கொடி உயர்த்திய மாநிலங்கள் இந்த 4 மாநிலங்களும் சுதந்திரப் பிரகடனம் செய்தன. இவற்றுக்கு தூதரக அங்கீகாரம் வழங்க ஜப்பான், பிரான்சு, இங்கிலாந்து, போலந்து, நார்வே, ஐஸ்லாந்து, டென்மார்க், பின்லாந்து, சுவீடன் ஆகிய நாடுகள் முன்வந்தன.

பால்டிக் நாடுகளுக்கு விரைவில் சுதந்திரம் கொடுக்கப்பட வேண்டும் என்று ரஷியாவை அமெரிக்கா வலியுறுத்தியது. சில மாநிலங்கள் சுதந்திர பிரகடனம் செய்ததது கார்ப சேவுக்கு தலைவலியைக் கொடுத்தது. எனவே, அதி காரங்களை பரவலாக்கி மாநிலங்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள முடிவு செய்தார்.

கம்யூனிஸ்டு கொள்கையில் தீவிரம் கொண்ட முன்னணி தலைவர்கள் சிலருக்கு இது பிடிக்கவில்லை. கார்பசேவினால் பதவியில் அமர்த்தப்பட்டவர்களே அவருக்கு எதிராக ஆட்சியை கவிழ்க்க முயன்றனர். திடீரென்று கார்பசேவ் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். பாராளுமன்றத்தை கைப்பற்ற முயற்சி செய்தனர்.

கம்யூனிஸ்டு தீவிரவாதிகளின் முயற்சியை ரஷிய மாநில ஜனாதிபதியாக இருந்த எல்ட்சின் எதிர்த்து நின்றார். கம்யூனிஸ்டு ஆட்சி முறையால் ஏமாற் றம் அடைந்து இருந்த மக்கள் கம்யூனிஸ்டு தீவிரவாதிகளுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கு எதிராக துப்பாக்கியைத் தூக்க ராணுவம் மறுத்து விட்டது. இதனால் கம்யூனிஸ்டு தீவிரவாதிகளின் முயற்சி தோற்றுப்போனது. கார்பசேவ் விடுவிக்கப்பட்டார்.

புரட்சியை நடத்திய 8 முன்னணி தலைவர்களின் பொறுப்புகள் பறிக்கப்பட்டன. 6 பேர் கைது செய்யப்பட்டார்கள். புரட்சி தோல்வி அடைந்ததால் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர். புதிய பிரதமர் மற்றும் மந்திரிகளை கார்பசேவ் நியமித்தார். அவருக்கு கம்யூனிஸ்டு உயர்மட்ட குழு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. இதனால் கார்பசேவ்வின் தலைமை பலவீனம் அடைந்தது.

இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு ஆர் மீனியா, மால்டோவியா, பைலோருஷியா, உஸ்பெக்கிஸ் தான், உக்ரைன் ஆகிய 5 மாநிலங்களும் சுதந்திர பிரகடனம் வெளியிட்டன. சுதந்திர நாடுகளாக பிரகடனப்படுத்தப்பட்ட மாநிலத் தலைவர்களின் மாநாடு, கஜகஸ்தான் மாநில தலைநகரான அல்மா_அடாவில் நடந்தது.

மொத்தம் உள்ள 15 மாநிலங்களில் பால்டிக் பகுதியைச்சேர்ந்த லிதுவேனியா, எஸ்டோனியா, லட்வியா ஆகியவை இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை. ரஷியா, உக்ரைன், கஜகஸ் தான், அஜர்பைஜான், அர் மினியா உள்பட 11 மாநிலங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த 11 மாநிலத் தலைவர்களும் கூடி, தங்கள் மாநிலங்கள் சுதந்திர நாடுகள் என்றும், சோவியத் ïனியன் மறைத்து விட்டது என்றும் பிரகடனப்படுத்தினர். "காமன்வெல்த்" என்ற பெயரில் ஒரு கூட்டமைப்பு ஏற்படுத்திக்கொள்வது என்றும் தீர்மானித்தனர். இந்த 11 மாநில தலைவர்கள் சார்பில் எல்ட்சின், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

"புதிய கூட்டமைப்பில் கார்பசேவுக்கு இடம் கிடையாது. அவர் பதவி விலக வேண்டியதுதான். சாகும் வரை பதவியில் இருப்பது என்ற மரபு 1920_ல் தொடங்கியது. அதற்கு முற்றுப் புள்ளி வைக்க விரும்புகிறோம்.

சோவியத் ïனியனுக்கு சொந்தமான அணு ஆயுதங்களும், அணு உலைகளும் பல்வேறு நாடுகளில் சிதறிக் கிடக்கின்றன. அவற்றை 11 நாட்டுத் தலைவர்களும் கூட்டாக கட்டுப்படுத்துவார்கள். காமன்வெல்த் கூட்ட மைப்பின் உயர் தலைமை பீடமாக 11 நாட்டு ஜனாதிபதிகளின் குழு இருக்கும். சம வாய்ப்பு, சம அந்தஸ்து அளிக்கப்படும். ஐ.நா. பாதுகாப்பு சபையில் சோவியத் ïனியனுக்குப் பதிலாக ரஷியா இடம் பெறும்."

இவ்வாறு எல்ட்சின் கூறினார்.

இதனால் சோவியத் ïனியன் கலைக்கப்பட்டது. அதன் அதிபரான கார்பசேவும் தனது பதவியை டிசம்பர் 25_ந்தேதி இரவு ராஜினாமா செய்தார். டெலிவிஷன் மூலம் கார்பசேவ் தனது ராஜினாமாவை அறிவித்தார். "நான் ராஜினாமா செய்வது என்ற தீர்மானத்துக்கு வந்தது தவிர்க்க முடியாதது" என்று கூறினார். புதிய கூட்டமைப்புக்கு தனது ஆதரவை தெரிவித்தார்.

சோவியத் ïனியனில் இருக்கும் 30 ஆயிரம் அணு ஆயுதங்களின் "சுவிட்ச்" அதுவரை கார்பசேவிடம் இருந்தது. அவர் பதவி விலகியதும் "சுவிட்"சை ரஷிய ஜனாதிபதி எல்ட்சினிடம் ஒப்படைத்தார்.

கார்பசேவ் ரஷியாவில் உள்ள பிரிவோல்னயா என்ற கிராமத்தில் 1931_ம் ஆண்டு மார்ச் 2_ந்தேதி பிறந்தார். பள்ளிப்படிப்பை முடித்த பிறகு, மாஸ்கோ பல்கலைக் கழகத்தில் சட்டம் பயின்றார். மாணவ பருவத்திலேயே பொது வாழ்வில் ஈடுபட்ட அவர் 21_ம் வயதில் கம்ïனிஸ்டு கட்சியில் உறுப்பினரானார். பிறகு கட்சியின் முக்கிய பொறுப்புகளை ஏற்றார்.

ராஜினாமா செய்த கார்பசேவுக்கு மாதா மாதம் ரூ.1 லட்சம் பென்ஷனாக வழங்கப்படும் என்றும், அவர் வசிப்பதற்கு அரசாங்க வீடும், கோடை காலத்தில் ஓய்வு எடுப்பதற்கு குளிர்பிரதேசத்தில் ஒரு வீடும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.