Saturday, October 29, 2011

வர்மங்களின் வகைகள்..!

வர்மங்களின் வகைகள்..!
வர்மக் கலையை அகத்தியர் நான்கு பெரும் பிரிவுகளாய் பிரித்திருக்கிறார்.உடலில் உள்ள வர்ம புள்ளிகள் மற்றும், அவற்றை கையாளும் விதத்தினால் இவற்றை வேறு படுத்துகிறார்.இவை “படு வர்மம்”,”தொடு வர்மம்”,”தட்டு வர்மம்”,”நோக்கு வர்மம்”

படுவர்மம்

நான்கு வகை வர்மங்களில் மிகவும் ஆபாயகரமான பிரிவு இதுவேயாகும். உடலிலுள்ள வர்மப் பகுதிகளில் அடியோ அல்லது தாக்குதலோ ஏற்படுமானால் அப்போது ஏற்படும் வர்மமே "படுவர்மம்" என்கிறார். இந்த படுவர்ம தாக்குதலுக்கு உள்ளாகும் நபர்கள் உயிரிழக்கும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதால் இவை மிகவும் ஆபத்தானவை என்று அகத்தியர் குறிப்பிடுகிறார்.

ஒரு மனிதன் படுவர்மப் புள்ளிகளில் அடிபட்டால் உடனடியாக மயங்கி விழுவான் என்றும், அவன் வாய் பிளந்து நாக்கு வெளியே தள்ளும், வாயில் நுரையும் வெளியேறும் அத்துடன் அந்த அடிபட்ட இடங்களில் கைவைத்து பார்த்தால் அந்த இடம் மிகவும் குளிர்ச்சியாகக் காணப்படும் என்றும் குறிப்பிடுகிறார். எல்லோராலும் இதை செய்திட முடியாது என்றும், மிகுந்த பயிற்சி உள்ள ஒருவரால் மட்டுமே இத்தகைய செயல்களை செய்திட முடியும் என்றும் கூறுகிறார்.

தொடு வர்மம்

இதுவும் படுவர்மத்தைப் போலவே பலமாக தாக்கப்படுவதன் மூலமே ஏற்படுகின்றது. ஆயினும் இது படுவர்மம் போல அத்தனை ஆபத்தானதாக இருக்காது என்கிறார். இந்த முறைகளை எளிதில் குணப்படுத்த இயலும் என்றும் கூறுகிறார்.
 தொடு வர்மம்

இதுவும் படுவர்மத்தைப் போலவே பலமாக தாக்கப்படுவதன் மூலமே ஏற்படுகின்றது. ஆயினும் இது படுவர்மம் போல அத்தனை ஆபத்தானதாக இருக்காது என்கிறார். இந்த முறைகளை எளிதில் குணப்படுத்த இயலும் என்றும் கூறுகிறார்.

தட்டு வர்மம்

ஒரே ஒரு விரலை மட்டும் பயன்படுத்தில் தாக்கபடுபவரின் உடலில் வலி ஏற்படாதவாறு மிகமிக லேசாக தட்டுவதன் மூலம் பாதிப்புக்களை ஏற்படுத்துவதே தட்டுவர்மம் ஆகும்.

நோக்கு வர்மம்

பார்வையை ஒரே இடத்தில் பாய்ச்சி அதன் மூலம் விளைவுகளை உண்டாக்குவதே நோக்கு வர்மம் எனப்படும். இந்த வர்ம முறையும் ஆபத்தானது என்று குறிப்பிடும் அகத்தியர், நோக்கு வர்ம முறையில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு நிகரானவர்கள் எவரும் உலகில் இருக்கமாட்டார்கள் என்கிறார்.

இவை தவிர, உடம்பிலுள்ள முக்கியமான வர்மப் புள்ளிகளையும் விரிவாக பட்டியலிட்டிருக்கிறார், அதன் படி...

தலைப் பகுதியில் 37 முக்கியமான வர்மப் புள்ளிக்களும்,
 நெஞ்சுப் பகுதியில் 13 வர்மப் புள்ளிகளும்,
 உடலின் முன் பகுதியில் 15 வர்மப் புள்ளிகளும்,
 முதுகுப் பகுதியில் 10 வர்மப் புள்ளிகளும்,
 கைகளின் முன் பக்கத்தில் 9 வர்மப் புள்ளிகளும்,
 கைகளின் பின் பக்கத்தில் 8 வர்மப் புள்ளிகளும்,
 கால்களின் முன்பக்கம் 19 வர்மப் புள்ளிகளும்,
 கால்களின் பின்பக்கம் 13வர்மப் புள்ளிகளும்,
 கீழ்முதுகுப் பகுதியில் 8 வர்மப் புள்ளிகளும்

இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்.
 Author: தோழி / Labels: அகத்தியர், வர்மம்

வர்மத்தின் அதிசயங்கள் !!

வேறெந்த தற்காப்புக் கலைகளிலோ மருத்துவ உத்திகளிலோ இல்லாத அதிசயங்கள் வர்மத்தில் உண்டு, இங்கே சில உண்மைகளைச் சுருக்கமாகக் கோடிட்டுக் காட்ட விழைகிறேன்:

ஒளிவு, பூட்டு, பிரிவு என்னும் மூன்று அடிமுறை உத்திகளும் தமிழனின் வர்மக்கலையில் இருப்பதுபோல் வேறெந்தத் தற்காப்புக் கலையிலும் இல்லை.
வெட்டுக் காயங்ளிலிருந்து பீறிடும் ரத்தத்தை எந்தக் கட்டும் போடாமலேயே வர்ம நரம்புப் பிடியால் கட்டுப்படுத்தி நிறுத்திவிட முடியும்.
ஜன்னி, வாந்தி, ஆகிய நோய்களை எந்தவித மருந்தும் இல்லாமலேயே வர்மக்கலையின் தடவுமுறைகளால் உடனடியாகச் சரிசெய்துவிட முடியும்.
ஒற்றைத் தலைவலி என்னும் கொடிய நோயைக் கணைக்காலில் உள்ள வர்ம அடங்கல் கொண்டு நாலைந்து நிமிடங்களில் ஓட்டிவிடலாம்.
நட்போடு கைகுலுக்குவது போலவோ, பாசத்தோடு கட்டியணைப்பது போலவோ நடித்துக் கொண்டு பகையாளியைப் பிணமாகக் கீழே வீழ்த்திவிட வர்மம் அறிந்தவனுக்கு முடியும்.
மயங்கி வீழ்ந்தவனையும், அசைவற்று மரணப்பிடியில் கிடப்பவனையும் வர்மக் கலையின் உயிர்நிலை நாடிகளைப் பயன்படுத்தி உடனே எழுப்பிவிட முடியும்.

மேற்கூறிய உண்மைகளைச் சிலர் நம்ப மறுக்கலாம். நக்கல் புரியலாம். ஆனால் வர்மக் கலையின் அரிச்சுவடிகளையேனும் அறிய நேரிடுபவர்க்கு அங்ஙனம் மறுக்கவோ நகைக்கவோ இயலாது என்பது திண்ணம். வர்மத்தின் அதிசயங்களை அறிவார் மட்டுமே அறிவார்

Tuesday, October 11, 2011

பெர்லின் சுவரும் அதன் சுவடுகளும்…

பெர்லின் சுவரும் அதன் சுவடுகளும்…


பெர்லின் சுவர் இடிப்பு: ஒரு சரித்திரத் தவறு திருத்தப்பட்டதன் 20-வது ஆண்டு
பெர்லின் சுவர்…
...
மனித சுதந்திரத்துக்கு எதிரான அடையாளமாகப் பார்க்கப்பட்ட இந்த சுவர் தகர்க்கப்பட்டு 20 ஆண்டுகள் ஆகின்றன. 1989 ம் ஆண்டு இதே நவம்பர் மாதத்தில்தான் மக்களால் தகர்க்கப்பட்டது.
இன்று பெர்லினில் அந்நாட்டு மக்கள் பெரும் உற்சாகத்துடன் இந்த நாளைக் கொண்டாடுகின்றனர். காரணம் பெர்லின் சுவரின் ‘பின்னணி’, அந்த சுவர் தகர்க்கப்பட்டதால் தாங்கள் அடைந்த சுதந்திரத்தின் மதிப்பு போன்ற உண்மைகள் புரிந்தவர்கள் அவர்கள்.
பெர்லின் சுவர் கட்டப்பட்டதன் பின்னணி?
இரண்டாம் உலகப் போருக்கு முன்பு வரை ஜெர்மனி என்பது ஒரே நாடு. ஆனால் போரில் ஹிட்லரின் நாஸிப் படைகள் தோற்ற பிறகு ஜெர்மனியை நான்கு துண்டுகளாக கூறுபோட்டன சோவியத் ரஷ்யா, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நேசநாடுகள். அவரவருக்குப் பிடித்த பகுதிகளை தங்கள் ஆளுகையின் கீழ் கொண்டுவந்தனர். ஜெர்மனியின் ஒன்றுபட்ட தலைநகராக இருந்த பெர்லின் நகரும் நான்கு துண்டுகளாக்கப்பட்டது.
ஆனால் அடுத்த இரண்டே ஆண்டுகளில் நேச நாடுகளுக்குள் கடும் மோதல் எழ, சோவியத் ரஷ்யாவைத் தவிர மற்ற மூன்று நாடுகளும் ஓரணியாக நின்றன. இவை தங்கள் வசமிருந்த ஜெர்மனியின் பகுதிகளை தனி நாடாக்கின. அதுதான் மேற்கு ஜெர்மனி.
சோவியத் ஒன்றியம் மட்டும் தன்னிடமிருந்த பகுதியை தனி நாடாக அறிவித்தது 1949-ல். அதுதான் கிழக்கு ஜெர்மனி (ஜிடிஆர் – ஜெர்மன் டெமாக்ரடிக் ரிபப்ளிக்) இதன் தலைநகராக கிழக்கு பெர்லின் இருந்தது. மேற்கு ஜெர்மனியின் தலை நகர் மேற்கு பெர்லின்.
கிழக்கு மேற்கு பெர்லின்கள் அடிப்படையில் ஒரே நகரம்தான். சென்னை அண்ணா சாலைக்கு இந்தப் பக்கம் ஒரு நகரம், அந்தப் பக்கம் ஒரு நகரம் என்று திடீரென்று எல்லை வகுத்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இது. சோவியத் – அமெரிக்க பனிப்போரின் உச்சகட்ட நாட்கள் அவை.
இதனால் கிழக்கு ஜெர்மனியிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் மேற்கு ஜெர்மனிக்கு ஓடிவிட்டார்கள். குறிப்பாக 1950, 51, 52, 53-ம் ஆண்டுகளில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் சட்டவிரோதமாக இப்படி எல்லை கடந்தார்கள். எனவே தனது அனைத்து எல்லைகளையும் சீல் வைத்து மக்களை ஓடவிடாமல் தடுத்தது கிழக்கு ஜெர்மனி.
ஆனால் பெர்லின் நகருக்குள் ஊடுருவலைத் தடுக்க முடியவில்லை.
எனவே 1961-ம் ஆண்டு ஆகஸ்ட் 13-ம் தேதி பெர்லினுக்குக் குறுக்கே பெரிய சுவர் எழுப்பி மக்கள் இருபுறமும் செல்லாதபடி தடுத்தது கிழக்கு ஜெர்மனி. சுவருக்கு அந்தப் பக்கம் அமெரிக்காவும், இந்தப் பக்கம் சோவியத்தும் படைகளை நிறுத்தி வைத்திருந்தன.
உரிமைகள், உறவுகள், வர்த்தகம், வாழ்க்கை முறை என அனைத்து வழிகளிலும் பாதிக்கப்பட்டனர் மக்கள். 28 ஆண்டுகள் இந்த பாதிப்பு தொடர்ந்தது. கிழக்கு ஜெர்மனி மக்கள் அந்த சுவரைத் தாண்ட முயற்சித்த போது சுட்டுக் கொல்லப்பட்டனர்… அல்லது கைதாகி சிறைவாசம் அனுபவித்தனர்.

பெர்லின் சுவருக்கு முடிவு கட்டிய முன்னாள் சோவியத் அதிபர் மிகையீல் கார்பசேவ், அமெரிக்க அதிபர் புஷ் (சீனியர்) மற்றும் ஜெர்மனியின் சான்ஸலர் ஹெல்மட் கோல்
சோவியத் – அமெரிக்க பனிப்போரின் இறுதிதான், மக்களைப் பிரித்து வைத்திருந்த இந்த நீண்ட பெர்லின் சுவருக்கு முடிவு கட்டியது.
1989ம் ஆண்டு நவம்பர் 9-ம் நாள் மக்கள் இந்த சுவரைத் தாண்டி சந்தித்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டனர். அடுத்த இரு தினங்களில் சுவரின் ஒரு பகுதியை மக்களே அடித்து நொறுக்கிவிட்டனர். கிழக்கு மேற்காகப் பிரிந்திருந்த ஜெர்மனிகளும் ஒன்றாகின.
இன்று பெர்லின் சுவர் இருந்த இடத்தில் அதன் சுவடு மட்டுமே மிச்சமுள்ளது. 20 ஆண்டுகள் கடந்து விட்டன… காலம் மக்களின் வலிகளை, மனதின் ரணங்களை ஆற்றிவிட்டாலும், இந்த சுதந்திரத்துக்கு தாங்கள் கொடுத்த விலையை நினைவுபடுத்திக் கொள்கின்றனர் ஜெர்மனி மக்கள். காயம் குணமாகிவிட்ட இடத்தில் மிச்சமிருக்கும் வடுவைத் தடவி, வலியை நினைவுபடுத்திக் கொள்ளும் ஒரு முயற்சிதான் இது.
இந்த நினைவூட்டல்தான், தாம் அனுபவிக்கும் சுதந்திரத்தின் மதிப்பை அடுத்த தலைமுறைக்கும் உணர்த்தும் என அந்த மக்கள் நம்புவதால் நடத்தப்படும் கொண்டாட்டம் இது.
இனி பெர்லின் சுவர் வரலாறு… அரிய புகைப்பட வடிவில்…

1961: ஆகஸ்ட் 13-ம் தேதி பெர்லினுக்குக் குறுக்கே முள்கம்பி வேலி அமைக்கு பணியில் கிழக்கு ஜெர்மனி வீரர்கள் ஈடுபட்டனர். அதை மேற்கு பெர்லின் மக்கள் வேடிக்கை பார்க்கும் காட்சி.

1961- பெர்லின் நகரின் மையப்பகுதியான கிரன்டன்பர்க் வாயில் முள்கம்பி வேலியமைக்கப்பட்டு சீல்வைக்கப்பட்டது.

1961: கிழக்கு பெர்லின் பகுதியில் சுவர் எழுப்பப்படுவதைப் கண்காணிக்கும் கிழக்கு ஜெர்மனி போலீஸார்…

1961- ல் புதிதாகக் கட்டப்பட்ட பெர்லின் சுவரை எட்டிப் பார்க்கும் மேற்கு பெர்லின் சிறுமி…

1961 -அறுபதுகளில் மிகப் புகழ்பெற்ற புகைப்படம் இது. ஷுமென் எனும் கிழக்கு ஜெர்மனி வீரர் , பெர்லின் சுவரை கட்டிக் கொண்டிருந்தபோதே எகிறி குதித்து மேற்கு ஜெர்மனிக்குள் ஓடும் காட்சி… சோவியத் கட்டுப்பாட்டில் கிழக்கு ஜெர்மனி வாழ்க்கை கொடுமையானது என்பதை உலகுக்குச் சொல்ல அமெரிக்கா இதைப் பயன்படுத்திக் கொண்டது.

அம்மா கிழக்கு பெர்லினில்… மகளோ மேற்கு பெர்லினில்… குறுக்கே நிற்கும் முள்வேலி கொண்டை வைத்த சுவரைத் தாண்டி பாசத்தைப் பரிமாறிக்கொள்ளும் காட்சி…

1962 – பெர்லின் சுவரைக் கடக்க முயன்ற தங்கள் நாட்டுக்காரரை கிழக்கு ஜெர்மனி வீரர்கள் சுட்டுக் கொன்று தூக்கிச் செல்கிறார்கள்.

1962-ஆண்டு பெர்லின் சுவர் தோற்றம்… மொத்த நீளம் நகரின் மேற்குப் புறத்தில் இருந்த மூன்று பகுதிகளிலும் சேர்த்து 156 கிமீ. இதில் பெர்லினைப் பிரித்த சுவரின் நீளம் 43 கிமீ.


1985- கோபுரம் அமைத்து கண்காணிக்கும் கிழக்கு ஜெர்மனி வீரர்கள்…

1989 – பெர்லின் சுவருக்கு எதிராய் கிழக்கு ஜெர்மனி மக்கள் நடத்திய போராட்டம்…

1989-நவம்பர் – பெர்லின் சுவரை உடைக்கும் மேற்கு ஜெர்மனிவாசிகள். கிழக்கு ஜெர்மனி போலீசார் அமைதியாக வேடிக்கைப் பார்க்கிறார்கள்…
1989- நவம்பர்- உடைக்கப்பட்ட சுவரின் வழியே எட்டிப்பார்க்கும் கிழக்கு ஜெர்மனி போலீஸ்காரர்.
28 ஆண்டுகள் மக்களைச் சிறைவைத்திருந்த சுவரை, மக்களே உடைத்த காட்சி…



1989 நவ 12 -மேற்கு ஜெர்மனிக்குள் வெள்ளமாய் நுழையும் மக்கள்..
பெர்லின் சுவரும்… அதன் சுவடுகளும்!

2009: சரித்திர சின்னமாய் மிச்சமிருக்கும் பெர்லின் சுவர்


2009- நவம்பர் 9-12: பெர்லின் சுவர் இடிக்கப்பட்டதன் 20ம் ஆண்டு கொண்டாட்டம்!

முசோலினி

முசோலினி உலகை பயமுறுத்திய சர்வாதிகாரிகளில் ஹிட்லருக்கு அடுத்தபடி புகழ் பெற்றவர்.1922 முதல் 21 ஆண்டுகாலம் இத்தாலியின் பயங்கரமான சர்வதிகாரியாக விளங்கிய இவர் ஹிட்லரின் நண்பர்.
ஹிட்லர் தற்கொலை செய்வதற்கு இரு நாட்களுக்கு முன்னர் முசோலி புரட்சிக்காரர்களால் கொல்லப்பட்டார்.இந்த கொலை நடந்த முறை சாதரணமானது அல்ல எல்லோருக்கும் சிம்மசொப்பனமாக இருந்த இந்த சர்வதிகாரியையும்,அவருடைய காதலியையும் சுட்டுக்...கொன்று,பிணங்களை விளக்கு கம்பம் ஒன்றில் தலை கீழாக தொங்கவிட்டார்கள்.

தொழிலாளியின் மகன்
இத்தாலியில் இரும்புப்படறை நடத்திய கொல்லர் ஒருவரின் மகனாக 1883 ஆம் ஆண்டு ஜூலை 29 ஆம் திகதி பிறந்தார்.முசோலினியின் தாயார் பாடசாலை ஆசிரியை.அப்போது இத்தாலியில் மன்னர் ஆட்சி நடந்து வந்தது.முசோலியின் தந்தை மன்னராட்சி ஒழித்து மக்களாட்சி மலர வேண்டும் என்ற கருத்துடையவர் .
தன் இரும்பு பட்டறைக்கு வருகின்றவர்களிடம் எல்லாம் அரசியல் பேசுவார்.அதனால் முசோலினிக்கு இளமையிலேயே அரசியலில் ஈடுபாடு ஏற்பட்டது.பாடசாலை படிப்பை முடித்ததும் சில காலம் ஆசிரியராக பணியாற்றினார்.இலத்தீன், பிரெஞ்சு,ஜெர்மன் ,ஸ்பானிஷ் ,ஆங்கிலம் ஆகிய மொழிகளையும் கற்றறிந்த அவர் பேச்சாற்றலும்
ஆசிரியர் தொழிலை விட்டுவிட்டு சிறிது காலம் இராணுவத்தில் பணியாற்றினார்.பிறகு கம்யூனிஸ்ட் பத்திரிகை ஒன்றில் ஆசிரியரானார்.பத்திரிகையில் அவர் எழுதிய கட்டுரைகள் பெரும் பரபரப்பை உண்டாக்கின .ஒரு கட்டுரைக்காக அவருக்கு ஓராண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.சிறையிலிருந்து விடுதலையான போது பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் அவரை சிறை வாசலில் வரவேற்றனர் .மறுநாளே அவந்தி என்ற புரட்சி பத்திரிகையின் ஆசிரியராக பொறுப்பேற்றார் .
முதலாம் உலகப்போர்
இந்த நிலையில் 1914 ஆம் ஆண்டு முதலாம் உலகப்போர் நடந்தது.முசோலினி இராணுவத்தில் சேர்ந்தார் .அதே ஆண்டில் தான் ஜேர்மனியில் ஹிட்லரும் இராணுவத்தில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.போரில் முசோலினி படுகாயமடைந்து ஊருக்கு திரும்பினார்.
1919 இல் உலகப்போர் முடிவடைந்தது.போரில் இத்தாலியில் மட்டும் 650,000 பேர் பலியானார்கள்,மேலும் 1,000,௦௦௦ பேர் படுகாயமடைந்திருந்தார்கள்.இத்தாலியின் பொருளாதாரமே சீரழிந்தது.எங்கு பார்த்தாலும் பசியும் பட்டினியும் .நாட்டில் கலகங்கள் மூண்டன.
இந்த சூழ்நிலையில் 1920 இல் பாசிஸ்ட் கட்சியை முசோலினி தொடங்கினார்.1921 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் முசோலினி கட்சி ஆட்சியை பிடிக்க முடியாது விட்டாலும் 30 இடங்களை கைபற்றியது. முசோலினி பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
எதிர்க்கட்சி தலைவரான முசோலினி பாராளுமன்றத்தில் நிகழ்த்திய வீராவேச சொற்பொழிவுகள் ஆளும் கட்ச்சியினருக்கு அச்சமூட்டின.பாராளுமன்றத்தை அமைதியாக நடத்தவிடாமல் குழப்பம் விளைவித்து கொண்டிருந்தார் முசோலினி.அது மட்டுமல்ல,ஊர் ஊராக சென்று பொது கூட்டங்கள் நடத்தி உணர்ச்சி ததும்ப பேசி ஆளும் கட்சிக்கு எதிராக மக்களை தூண்டிவிட்டார்.
மக்கள் தன் பேச்சில் மயங்கி கிடக்கிறார்கள் என்று தெரிந்து கொண்ட முசோலினி ஒவ்வொரு ஊரிலும் அராஜகம் நடத்தி ,அரச அலுவகங்களை கைப்பற்றும் படி தன் கட்சியினருக்கு கட்டளையிட்டான்.அதன் படி அவர் கட்சியினர் கிளர்ச்சியாளர்களையும் பொதுமக்களையும் அழைத்துக்கொண்டு பயங்கர ஆயுதங்களால் அரசு அலுவகங்களை தாக்கினார்கள்.ஊழியர்களை விரட்டி அடித்து விட்டு அலுவலகங்களையும் சொத்துக்களையும் கைப்பற்றி கொண்டனர் .
1922 ஒக்டோபரில் முசோலியின் கரும் சட்டை படை இத்தாலியின் தலைநகரை பிடிக்க திரண்டு சென்றது. நிலைமை கட்டுக்கடங்காமல் போனதால் அமைச்சரவையை இராஜினாமா செய்யுமாறு மன்னர் கட்டளையிட்டான்.மந்திரி சபை பதவி விலகியதும் ஆட்சி பொறுப்பை முசோலினியிடம் ஒப்படைத்தனர் .
அடக்குமுறை ஆட்சிக்கு வந்த முசோலி''இத்தாலியின் முன்னேறத்திற்காக நான் பல தீவிர நடவடிக்கைகளை எடுக்கப் போகிறேன்.இதை எதிர்ப்பவர்களை அடியோடு அழித்து விடுவேன் ".என்று அறிவித்தார்.
எதிர்க்கட்சிகளை தடை செய்தார். பத்திரிக்கை சுதந்திரத்தை நசுக்கினார்.தன்னை எதிர்த்தவர்களை நாடு கடத்தினார்.தன் எதிரிகளை சிறைச்சேதம் செய்யும் படி உத்தரவிட்டார் .மூன்றே ஆண்டுகளில் இவ்வாறு கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,000,000 க்கு மேல்.இவ்வளவு கொடுமைகள் செய்த முசோலினி மக்களை கவர பல திட்டங்களை கொண்டு வந்தார். விவசாயிகளுக்கு இயந்திர கலப்பைகளை வழங்கினார்.அதனால் உணவு உற்பத்தி பெருகியது.வேலை இல்லா திண்டாட்டத்தை ஒழிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.வரிகள் குறைக்கபட்டன. மருத்துவ வசதிகள் பெருகின. இதனால் முசோலினியை மக்கள் ஆதரித்தனர். நிலைமை தனக்கு சாதகமாக இருந்ததால் பொது தேர்தலை நடாத்தினர்.அதில் அவருடைய கட்சி மகத்தான வெற்றி பெற்றது.அதன் பின் பாராளுமன்றத்தின் அதிகாரங்களையும் தானே எடுத்துக்கொண்டார் .
1922 ஆம் ஆண்டு முதல் இத்தாலியின் மாபெரும் சர்வாதிகாரியாக முசோலினி விளங்கினார்.1933 ஆம் ஆண்டில் ஜெர்மனியின் ஆட்சியை கைப்பற்றிய ஹிட்லர் முசோலினியின் நண்பரானார். 1934 இல் வெனிஸ் நகருக்கு சென்று முசோலினியை சந்திந்து பேசினார் ஹிட்லர் . அதனை தொடர்ந்து இத்தாலி இராணுவத்தை பலப்படுத்தவும் யுத்த தொழிற்சாலைகளை அமைக்கவும் ஹிட்லர் உதவினார்.
இந்நிலையில் அரசாங்க விருந்து ஒன்றில் கிலார என்ற அழகியை முசோலினி சந்தித்தார்.தனது வசீகர பேச்சாற்றலால் கிளாராவை கவர்ந்த முசோலினி அவளை தன் காதலி ஆக்கிகொண்டான்.
இரண்டாம் உலகப்போர்
1939 இல் இரண்டாம் உலக போர் ஆரம்பமானது.ஹிட்லரும் முசோலினியும் ஓரணியில் நின்று நேச நாடுகளை எதிர்த்தனர்.முதலில் இவர்களுக்கு வெற்றி மேல் வெற்றி கிடைத்தது. பிறகு போரின் போக்கு மாறி ஹிட்லருக்கும் முசோலினிக்கும் தோல்விகள் ஏற்பட்டன.</p>
இதனால் இத்தாலி மக்களிடம் செல்வாக்கை இழந்தான்.அவரை பாசிஸ்ட் கட்சி மேலிடம் பதவி நீக்கம் செய்து வீட்டு காவலில் வைத்தனர்.முசோலினியை காப்பாற்ற விரும்பிய ஹிட்லர் தனது உளவுப்படையை அனுப்பினார்.உளவுப்படையினர் முசோலினியை மீட்டனர் .
முசோலினியின் மரணம்
வடக்கு இத்தாலியில் முசோலினிக்கு ஓரளவு ஆதரவு இருந்தது. தன் மனைவி உடனும் காதலி கிளாராவுடனும் அங்கு சென்ற முசோலினி ஒரு அரசாங்கத்தை அமைத்துக்கொண்டார்.
அப்போது இத்தாலி விடுதலை இயக்கம் என்ற புரட்சிகர இயக்கம் தோன்றியது.இத்தாலி முழுவதும் புரட்சிக்காரர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர்.புரட்சிக்காரர்களால்தனக்கு ஆபத்து ஏற்படும் என்பதை உணர்ந்த முசோலினி தன் மனைவியுடனும் காதலியுடனும் அண்டை நாடான சுவிசலாந்துக்கு தப்பியோட முயற்சி செய்தான்.இரண்டு இராணுவ லொறிகளில் தனது இரண்டு குடும்பத்தையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டான். அன்று மாலை உடல்கள் கீழே இறக்கப்பட்டு அடையாளம் தெரியாத இடத்திற்கு கொண்டு சென்று புதைக்கப்பட்டன.புதைப்பதற்கு முன் குற்றவியல் ஆராய்ச்சி நிபுணர்கள் முசோலியின் மூளையை எடுத்து சென்றனர்.
ஆனால் வழியிலேயே அந்த லொறிகள் புரட்சிகாரர்களினால் மடக்கப்பட்டது.முசோலினியையும் கிளாராவையும் புரட்சிக்காரர்கள் பிடித்தனர்.முசோலினியின் மனைவி லொறிக்குள் பதுங்கி கொண்டதால் அவள் புரட்சிகார் கண்ணில் படவில்லை.
இச்சம்பவம் 1945 ஏப்ரில் 27 ஆம் திகதி இடம் பெற்றது.அன்று டாங்கோ நகரில் ஒரு அறையில் முசோலினியும் கிளாராவும் அடைத்து வைக்கப்பட்டனர்
மறுநாள் வந்து இயந்திர துப்பாக்கியால் இருவரையும் புரட்சிக்காரர்கள் துப்பாக்கியால் சுட்டார்கள் .முசோலினிக்கு உதவியாக இருந்த வேறு சிலரையும் சுட்டு கொண்டனர். அவர்களது உடல்கள் மிலான் நகருக்கு கொண்டு செல்லப்பட்டு மின் கம்பத்தில் தலைகீழாக தொங்கவிடப்பட்டது.

பிளேட்டோ

பிளேட்டோ (ஒரு பக்க வரலாறு)"
சுமார் இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முந்தைய காலம். கிரேக்கத் தத்துவ ஞானி பிளேட்டோ, ‘குடியரசு’ எனும் அரசியல் ஆய்வு நூலில், முடியாட்சியையும் மக்களாட்சியையும் கடுமையாக விமர்சித்து இருந்தார். அரசியல் ஞானம் இல்லாத மக்களால் தேர்வு செய்யப்படும் தலைவர்கள் தலைமைக்குத் தகுதியானவர்கள் அல்ல என வாதிட்டதுடன் நில்லாமல், தலைவன் என்பவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமும் வகுத்திருந்தார்.

பிளேட்டோவின் அரசியல் ஞானத்தை அறிந்த சிசிலி நாட்டின் அரசன் டேயானியஸ், "நீங்கள் ஆசைப்பட்டதுபோல் ஐரோப்பிய கண்டம் முழுவதற்கும் ஒரு லட்சிய அரசு அமைக்கலாம், வாருங்கள்" என அழைப்பு விடுத்தான். ஆசையோடு வந்த பிளேட்டோ, அரசன் ஆடம்பரப் பிரியனாகவும், நாடு பிடிக்க விரும்பும் சுயநலக்காரனாகவும் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அரசவையிலேயே, "உன் தலைமையில் லட்சிய அரசு அமைக்க முடியாது. உனது சுயநலத்தால் இந்தப் பதவியையும் நீ விரைவில் இழந்துவிடுவாய். சுயநலமற்றவனையே தலமை தேடி வரும்!" என்று தைரியமாகச் சொன்னார்.

ஆத்திரமடைந்த அரசன், பிளேட்டோவை அடிமையாக விற்க உத்தரவிட்டான். சந்தையில் ஏலப்பொருளாக நிறுத்தப்பட்ட பிளேட்டோவை, அவரது மாணவர் அன்னிசெரஸ் பெரும் கிரயம் கொடுத்து மீட்டார்.
கிரேக்க நாட்டின் ஏதென்ஸ் நகரில் கி.மு. 427-ல் ஒரு பிரபுவின் வீட்டில் செல்வச் செழிப்பில் பிறந்த பிளேட்டோ, சிறு வயதிலேயே சோக்ரடீஸின் தத்துவஞானத்தில் மயங்கி, அவரது சீடரானார். சாக்ரடீஸிக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டபோது, பிளேட்டோவின் வயது 28. சோக்ரடீஸின் மறைவுக்குப் பின், அவரது மாணவர்கள் பிளேட்டோவைத் தேடி வந்து தம் தலைவராக ஏற்றுக்கொண்டனர். ‘சோக்ரடீஸிக்கு மரண தண்டனை அளித்த மக்களாட்சி, ஓர் இழிவான ஆட்சிமுறை’ என வெளிப்படையாகக் குற்றம்சாட்டிய பிளேட்டோவையும் ஆட்சியில் இருந்தவர்கள் கைது செய்ய முயன்றனர். அவர் ஏதென்ஸில் இருந்து வெளியேறி இத்தாலி, சிசிலி, எகிப்து போன்ற நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து, அங்குள்ள மக்களின் வாழ்க்கை முறையை ஊன்றி கவனித்தார். ஏதென்ஸ் நகரில் ஆட்சி மாற்றம் நடந்த பின்னர் தாய் மண்ணுக்குத் திரும்பினார்.

"செருப்பு அறுந்தால், கதவு பழுதானால், நோய் வந்தால் சம்பந்தப்பட்ட நிபுணர்களிடம் செல்லும் மனிதர்கள், ஆட்சி செய்யும் பொறுப்பை மட்டும் எந்தத் தகுதியும் இல்லாதவரிடம் ஒப்படைப்பது சரிதானா?" என்று கேள்வி கேட்டு, ஆட்சி செய்பவர்களுக்குச் சில தகுதிகளையும் வகுத்தார். "பத்து வயது வரை சுதந்திரமாகவும், அதற்குப் பின் கட்டாயப்படுத்துதல் இன்றி பத்து வருடம்விருப்பமாகக் கல்வி பயின்றும், அதன் பின் தத்துவ ஞானம் அறிய சுற்றுப்பயணம் செய்து மக்கள் வாழ்வை நேரடியாக அறிந்தும்... இப்படியாக ஐம்பது வயது வரை வாழ்வைப் படித்தவனே ஆட்சி செய்யத் தகுதி படைத்தவன். அவன் திருமணம் முடிக்கமாட்டான்; தாழ் போட்டு உறங்கமாட்டான். அவனுக்காக மற்றவர்கள் உழைப்பார்கள்; அவன் மற்றவர்களுக்காக உழைப்பான். அப்படிப்பட்ட சுயநலமற்றவனே தலமைக்குத் தகுதியானவன்" என்றார்.

இருபது வயதுக்குட்பட்ட பெண்களும், முப்பது வயதுக்குட்பட்ட ஆண்களும் திருமணம் முடிக்கக் கூடாது; செல்வம் சேர்ப்பதற்கு உச்ச வரம்பு வேண்டும்; தனிமனித உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்’ என எத்தனையோ புரட்சிக் கருத்துக்கள் பிளேட்டோவின் நூலில் ஒளிந்திருப்பதால்தான், எமர்ஸன் என்றதத்துவஞானி, "பிளேட்டோவின் ‘குடியரசு’ நூலை மட்டும் வைத்துக்கொண்டு,உலகில் உள்ள மற்ற எல்லா நூல்கைளயும் எரித்துவிடலாம்" என்றார். திருமணமே செய்துகொள்ளாமல் நாடோடியாக வாழ்ந்து, எண்பதாவது வயதில் தூக்கத்திலேயே மரணமெய்திய பிளேட்டோவின் இறுதி ஊர்வலத்தில் ஏதென்ஸ் நகரமே திரண்டுவந்து, பிரியாவிடை கொடுத்தது

உலக ஹெவிவெயிட்-முகமது அலி

உலக ஹெவிவெயிட் குத்துச்சண்டைப் போட்டியில், 1964-ம் வருடம், சாம்பியன் லிஸ்டைன எதிர்த்து நின்ற 22 வயது கறுப்பு இளைஞன் முகமது அலியைப் பார்வையாளர்கள் பரிதாபமாகப் பார்த்தார்கள். போட்டியின் முதல் இரண்டு சுற்றுகள் சாதாரணமாகேவ நடந்தன. மூன்றாவது சுற்றில் முகமது அலியின் குத்து, லிஸ்டனின் புருவத்தைப் பதம் பார்த்தது. காயத்துக்கு மருந்து போட்டு வந்த லிஸ்டன் ஆக்ரோஷமாக குத்துக்களை விட்டார். அவரது புருவத்தில...் இருந்த மருந்து தெறித்து, முகமது அலியின் கண்ணுக்குள் விழுந்துவிட, பெரும் உறுத்தலோடு அடுத்த இரண்டு சுற்று சண்டை போட்டார் அலி.

ஆறாவது சுற்றின்போது உறுத்தல் நீங்க, அதிரடி தாக்குதலில் இறங்கினார். அந்தச் சுற்று முடிந்த பின்புதான், தன் கைமூட்டு இடம் பெயர்ந்திருப்பது லிஸ்டனுக்குப் புரிந்தது. அவர் தொடர்ந்து போட்டியில் பங்கேற்க முடியாமல் போகவே முகமது அலி உலக சாம்பியன் ஆனார்.

நிருபர்கள், ‘‘இந்த வெற்றியை எதிர்பார்த்தீர்களா?’’ எனக் கேட்க, உற்சாகமாகப் பேசினார் அலி. ‘‘இரண்டாவதாக வருபவனை, உலகம் ஒருபோதும் ஞாபகம் வைத்துக்கொள்வதில்லை என்று எனக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார் என்னுடைய கோச் மிஸ்டர் ஃபிரட்ஸ் டோனர். அதனால், முதல் இடம் தவிர எதையும் எப்போதும் நான் ஏற்றுக் கொள்வதில்லை’’ என்றார் அலி தன்னம்பிக்கையுடன். ஆம், கலந்துகொண்ட போட்டிகள் எல்லாவற்றிலும் வெற்றியே பெற்று, இறுதிவரை முதல்வனாகவே திகழ்ந்த முகமது அலிக்கு ஊக்கம் தந்த மந்திரச் சொல் அதுதான்.
அமெரிக்காவின் லூயிஸ்வில்லி நகரத்தில் (1942), ஒரு பியானோ கலைஞரின் மகனாகப் பிறந்தார் முகமது அலி. இயற்பெயர், காஸியஸ் மெர்ஷிலிஸ் கிளைவ்.12-வது வயதில் பாக்ஸிங் கற்றுக் கொள்ளத் துவங்கினார். அவருடையகோச் ஃபிரட்ஸ் டோனர், ‘‘வண்ணத்துப் பூச்சியைப் போல பறந்து, தேனியைப் போல‌த் தாக்கு’’ என்று ஒரு புதிய ஸ்டைலை கற்றுக் கொடுத்தார்.

18-வது வயதில் இத்தாலியில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்று,தங்கப்பதக்கத்துடன் தாய்நாடு திரும்பிய காஸியஸ், அந்த சந்தோஷத்தைக் கொண்டாட, நண்பர்களுடன் ஒரு பெரிய ஓட்டலுக்குள் நுழைய, அவரைத் தடுத்து, ‘‘கறுப்பர்களுக்கு இங்கு எதுவும் வழங்குவதில்லை. வெளியே செல்லுங்கள்’’ என்றார் ஓட்டல் மேலாளர்.
‘‘நான், நம் நாட்டுக்காக இத்தாலியில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் தங்கம் ஜெயித்திருக்கிறேன்’’ என்று காஸியஸ் சொன்ன பிறகும், மேலாளரிடம் எந்த மாற்றமும் இல்லை. உடனே கடும் ஆத்திரத்தில் தங்கப்பதக்கத்தை ஆற்றில் வீசி எறிந்தார். சொந்த நாட்டில் அந்நியராகக் கேவலப்படுவதாக உணரேவ, இஸ்லாம் மதத்துக்கு மாறி ‘முகமது அலி’ எனப் பெயரை மாற்றிக்கொண்டு, கடுமையாகப் பயிற்சிகள் செய்து, உலக சாம்பியன் பட்டத்தை எட்டிப் பிடித்தார். அதன்பின், அவருக்குப் பல தடைக் கற்கள் வந்தபோதும், சளைக்கவில்லை. தொடர்ந்து வெற்றிகளைக் குவித்தார்!

1981-ம் வருடம் அவரை அல்ஸீமர் நோய் கடுமையாகத் தாக்கியது. அதன்பின்னர், கறுப்பர்களின் உரிமைகளுக்காக அரசியலில் ஈடுபட்டதுடன், சமூக சேவையிலும் இறங்கினார். பள்ளி விழாக்களில் கலந்துகொண்டு குழந்தைகளுக்கு உற்சாக விதை தூவுவதை மிகவும் விரும்புவார்.

‘‘சூரியனுக்கு ஒரு காரியம் இருக்கிறது; சந்திரனுக்கு ஒரு காரியம் இருக்கிறது; ஏன், மிருகங்களுக்கும்கூட செய்வதற்கு என ஒரு காரியம் இருக்கிறது. அதுபோல் ஒவ்வொரு மனிதனும் தனக்குரிய காரியம் எது என்பதைக் கண்டறிந்து அதில் முழுமையாக ஈடுபட்டு, முதல்வனாக வெற்றி பெற வேண்டும். ஏனென்றால், இரண்டாவதாக வருபவனை, உலகம் ஒருபோதும் ஞாபகம் வைத்துக் கொள்வதில்லை!’’ என்பதுதான் அவர் தூவிய உற்சாக விதைகளில் முக்கிய விதை!

நெப்போலியன் போனபார்ட் I

நெப்போலியன் போனபார்ட் – பகுதி-1


வரலாற்றின் பக்கங்கள் சுவாரஸ்யமானவை மட்டுமல்ல.. பல பாடங்களைச் சொல்லிச் செல்பவை.
பல நாட்டு மனித வரலாறுகளைப் படித்தாலும் ஐரோப்பிய வரலாற்றின் மேல் எப்போதும் தீராத ஆர்வம். காரணம் இருந்த வளங்களை அவர்களைப் போல வீணடித்தவர்களும் செம்மையாகப் பயன்படுத்தியவர்களும் அன்றைக்கு மட்டுமல்ல… இன்றைக்கும் யாருமில்லை.
...குறிப்பாக பிரெஞ்சுப் புரட்சி… இந்தப் புரட்சி மூலம் பிரான்ஸ் மக்கள் சுதந்திரம் பெற்ற விதம், பெற்ற சுதந்திரத்தை காப்பாற்றிக் கொள்ள அவர்கள் பட்ட பாடுகள், எதை எதிர்த்து அவர்கள் போராடினார்களோ, எதிலிருந்து விடுதலை பெற விரும்பினார்களோ அதற்குள்ளேயே மீண்டும் விரும்பிப் போய் மாட்டிக் கொண்டது… இப்படி ஒவ்வொரு நாட்டவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய படிப்பினைகள் ஏராளம்.
இங்கே பிரெஞ்சுப் புரட்சி பற்றி நாம் பாடம் எடுக்கவில்லை. அதன் பிந்தைய விளைவாகத் தோன்றிய நெப்போலியன் சம்பந்தப்பட்ட மாபெரும் வரலாற்று நிகழ்வுகளை மட்டும் முடிந்தவரை எளிமையாக சொல்லவிருக்கிறோம்.
வரலாற்றை ஒரு தொடராகத் தராமல்… அவ்வப்போது சுவாரஸ்யமான நிகழ்வுகளாக மட்டுமே சொல்ல வேண்டும் என்பதே நமது நோக்கம்.
இதை இப்போது எழுதக் காரணம்… தெரிந்தோ தெரியாமலோ நமக்கு நெப்போலியன் பற்றிய பல கதைகள் சொல்லப்பட்டுள்ளன. அந்தக் கதைகளுக்கும் அப்பால் உண்மையான நெப்போலியன் யார்… என்ன அவர் செய்த சாதனை என்பதை மிகையின்றி சொல்ல விரும்பியதன் விளைவு இது. சற்று பெரிய கட்டுரை என்பதால் இரு பகுதிகளாகத் தருகிறோம்.
இனி நெப்போலியன் கதை…
நெப்போலியன் போனபார்ட் I



மத்தியதரைக்கடலில் உள்ள கார்சிகா என்ற சின்ன தீவில் கார்லோ போனபார்ட் – மரியா லெட்டிஸியா ரமாலினோவுக்கும் பிறந்த எட்டுப் பிள்ளைகளில் இரண்டாவது மகன் நெப்போலியன். பிறந்த தேதி 15 ஆகஸ்ட், 1769!
கத்தோலிக்கரான நெப்போலியன் பிறப்பே ராணுவப் பின்னணியில் அமைந்துவிட்டதால் (கார்லோ போனபார்ட்தான் பிரெஞ்சு மன்னன் 16-ம் லூயியின் பிரதிநிதி- கார்சிகா தீவுக்கு). தாயின் ஒழுக்கமான வளர்ப்பில் வளர்ந்த நெப்போலியனுக்கு, அந்த வாழ்க்கை முறையே பின்னர் வெற்றிகரமான ராணுவ வீரனாகத் திகழ உதவியது.
மேற்படிப்புக்காக, 1779-ல் கார்சிகா தீவிலிருந்து பிரான்சுக்கு வந்த நெப்போலியன் பிரையன் – லெ-சாடெ ராணுவப் பள்ளியில் சேர்கிறார்.
ராணுவப் பள்ளியில் கணக்கில் புலியாகத் திகழ்ந்த நெப்போலியன், வரலாறு – புவியியலில் மிகச் சிறந்த மாணவராகத் திகழ, அவரது ஆச்ரியர் இப்படிச் சொல்கிறார்: ‘இந்த மாணவன் மிகச் சிறந்த மாலுமியாக வருவான்’.
ஆனால் நெப்போலியன் மாலுமியாகவில்லை. மிகச் சிறந்த தரைப்படை வீரனுக்கான பயிற்சிகளைப் பெற்று முடித்தார். தந்தை இறந்ததால், வருமானம் இல்லாமல், இரண்டு ஆண்டு கல்வியை ஒரே ஆண்டில் கற்று முடித்தார் நெப்போலியன் என்கிறது அவரே எழுதி வைத்த வரலாற்றுக் குறிப்பு.
1785-ல் நெப்போலியன் இரண்டாம் நிலை லெப்டினென்டாக பதவி ஏற்றார். பிரெஞ்சுப் புரட்சி வெடித்த 1789-ம் ஆண்டுவரை பிரான்ஸின் பல்வேறு நகரங்களில் அந்தப் பதவியில் பணியாற்றினார். பின்னர் இரண்டாண்டுகள் லீவெடுத்துக் கொண்டு சொந்தத் தீவுக்குப் போய் அங்கு புரட்சியாளர்களுக்கு ஆதரவாக பிரெஞ்சு நராணுவத்தையே எதிர்த்துப் போராடினார். பின்னர் பாரிஸ் திரும்பினார். ராணுவ அதிகாரிகளை எப்படியோ சமாளித்து 1792-ல் கேப்டனாகப் பதவி உயர்வு பெற்று மீண்டும் கார்ஸிகா வந்தார்.
அப்போதுதான் அவருக்கும் கார்ஸிகாவின் தலைவர் பாஸ்கல் பாலிக்கும் இடையே மோதல் வலுக்க, குடும்பத்துடன் கார்ஸிகாவை விட்டே வெளியேற வேண்டிய சூழல் நெப்போலியனுக்கு. இது நடந்தது ஜூன் 1793 (வரலாறு முக்கியம்!).
புரட்சிக்காரர்களாகிய ரோபஸ்பியர் சகோதரர்களின் நட்பு கிடைத்தது நெப்போலியனுக்கு. இன்னொரு பக்கம், தனது தீவைச் சேர்ந்த வீரர் ஒருவரின் துணையுடன் டுலன் நகர குடியரசுப் படைகளின் கமாண்டராக நியமிக்கப்பட்டார் நெப்போலியன். அந்த நகரம் பிரிட்டிஷ் படைகளின் பிடிக்குள் வந்தபோது, அவர்களை வெற்றிகரமாக விரட்டியடித்து பிரிகேடியர் ஜெனரலாகப் பதவி உயர்வு பெற்றார்.
ஆனால் 1794-ல் நெப்போலியன் கைது செய்யப்பட்டார். காரணம் புரட்சிக்காரர்களுடன் அவருக்கிருந்த தொடர்புகள் என்று விளக்கமளிக்கப்பட்டாலும், அடுத்த 10 நாட்களில் ரிலீஸாகிவிட்டார்.
வென்டீ எனும் பகுதியில் நடந்த புரட்சிக்கு எதிரான படைக்கு அவரை கமாண்டராக நியமித்தார்கள். ஆனால் ஆர்டிலரி ஜெனரலாக இருந்த நெப்போலியனுக்கு அது பதவியிறக்கமே. எனவே உடல்நிலையைக் காரணம் காட்டி அந்தப் பணியை செய்ய மறுத்தார். எனவே துருக்கியின் கான்ஸ்டான்டிநோபிளுக்கு தூக்கியடிக்கப்பட்டார். அங்கு சுல்தானின் படையில் பணியாற்ற அனுப்பப்பட்டார்.
அவரும் அந்தக் கால கட்டத்தில் துருக்கிக்குப் போய், ஒரு சூப்பர் ரொமான்டிக் நாவலை எழுதி முடித்துள்ளார்! ஒரு போர்வீரனுக்கும் அவனது காதலிக்குமான உறவைச் சொல்லும் கதை அது. அதில் இடம்பெற்ற பெரும்பாலான சம்பவங்கள் நெப்போலியனுக்கு அவரது காதலிக்குமிடையே நடந்தவற்றின் தொகுப்பாகவே இருந்ததாம்.
ஆனால் இந்தப் பணி முடிந்து பாரிஸ் திரும்பிய நெப்போலியனை, முன்பு வென்டீ பணி மறுத்த காரணத்தால் பதவி நீக்கம் செய்தது அரசு. நெருக்கடிக்குள்ளானார் நெப்போலியன்.
ஆனால் அதே ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி மீண்டும் நெப்போலியனின் தயவை நாடியது புரட்சி நிர்வாகம் (டைரக்டர்ஸ் குழு), பால் பேரஸ் என்பவர் மூலம். இந்த முறை பாரிஸ் தெருக்களில் புரட்சிப் படைகளுக்கும் அரசப் படைகளுக்குமான உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் பெரும் பொறுப்பு நெப்போலியனுக்கு தரப்பட்டது. அவரும் கிடைத்த வாய்ப்பை மிகச் சரியாகப் பயன்படுத்தி அக்டோபர் 5-ம் தேதி, பாரிஸ் தெருக்களில் ரத்த ஆறு ஓட, உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தார். 1400 அரச படையினர் கொல்லப்பட, எஞ்சியோர் ஓடிவிட்டனர்.
சாதாரண போர் வீரராக இருந்த நெப்போலியன் படிப்படியாக பிரஞ்சு நிர்வாகத்தின் கவனத்துக்குரியவராக மாறினார். பிரஞ்சுப் படைகளின் தளபதியானார்.
செல்வம் குவிந்தது. இந்தப் பொறுப்பை தனக்கு வாங்கிக் கொடுத்த பால் பேரஸ் மனைவி ஜோஸப்பினையே பின்னர் திருமணம் செய்து கொண்டார் நெப்போலியன் (ஏற்கெனவே ஒரு பெண்ணுடன் நெப்போலியனுக்கு நிச்சயதார்த்தம் ஆகியிருந்தது. ஜோஸப்பினைப் பார்த்ததும் அந்த நிச்சயதார்த்தத்தை முறித்துக் கொண்டார் மனிதர். அந்த நேரம் பார்த்து ஜோஸப்பின் கணவரும் போரில் கொல்லப்பட்டுவிட, திருமணத்துக்கு எந்தத் தடையுமில்லாமல் போனது!)
1796-ம் ஆண்டு கல்யாணமான இரண்டாம் நாள், இத்தாலியப் படையெடுப்புக்கு தலைமை தாங்கிச் சென்றார் நெப்போலியன்.
லோடி எனும் இடத்தில் நடந்த போரில் ஆஸ்திரியப் படைகளை லம்பார்டி பகுதிக்கு அப்பால் விரட்டியடித்தார். பின்னர் ரோம் வரை முன்னேறி போப்பின் அதிகாரத்தையும் ஆட்டம் காண வைத்தார். கிட்டத்தட்ட ஒட்டுமொத்த இத்தாலியையும் பிரான்ஸின் மேலாதிக்கத்தை ஏற்க வைத்தார் நெப்போலியன். அதுமட்டுமல்ல… 1100 ஆண்டுகள் சுதந்திர நாடாகத் திகழ்ந்த ஆஸ்திரியாவின் மீது படையெடுத்து அதன் தலைநகர் வியன்னாவை 1797-ல் வீழ்த்தி, பிரான்சின் ஆதிக்கத்துக்குள் கொண்டு வந்தார். பிரான்சின் சார்பாக போர் முடிவுகளை எடுக்கும் அதிகாரம் அவர் கைக்கு வந்தது… அது மட்டுமா.. வென்ற நாடுகளின் செல்வங்களை அடியோடு எடுத்துக் கொள்ளும் (கொள்ளையிடும்?) அதிகாரமும் நெப்போலியன் வசம்.
நெப்போலியன் போரிடும் ஸ்டைலே அலாதியானது. அவர் பழமையான போர் முறைகளை அடியோடு உடைத்தார். போரில் பெரும்பாலும் நெப்போலியன் நடுவில் நின்று தாக்க, அவருக்கு துணையாக இரு புறத்திலும் படைகள் திரண்டு வந்து தாக்கும்… எதிரிப் படை நிலைகுலைந்து போகும். இந்த டெக்னிக்கை, எதிரணியின் போக்குக்கேற்ப திடீர் திடீரென்று மாற்றிக் கொள்ளவும் செய்தார் நெப்போலியன். இன்னொன்றகு, எதிரி எந்தப் பகுதியில் வீக்காக இருக்கிறானோ அந்த இடத்துக்கு சடாலென போய் தாக்குவது இவரது பாணி. எப்படி போய் தாக்கவேண்டும், எந்த நேரம் என்றெல்லாம் பார்க்கக் கூடாது… நினைத்த மாத்திரத்தில் வேகமாகப் பாய்ந்து சென்று எதிரியை நிலைகுலைய வைத்தாலே போதும்… மற்றதை அவர் பார்த்துக் கொள்வார். இந்த டெக்னிக் கடைசி வரை அவருக்குக் கைக் கொடுத்தது.
இத்தாலிப் போரில் 150000 வீரர்களைச் சிறப்பிடித்த நெப்போலியன், ஏராளமான பீரங்கிகள் மற்றும் படையணிகளை கட்டி இழுத்து வந்தார்.
நெப்போலியன் செல்வாக்கு ஓஹோவென்று உயர்ந்தது. சொந்தமாக மூன்று செய்தித்தாள்களை நடத்தினார் அவர். இன்னொரு பக்கம் பிரான்ஸ் தேர்தல்களில் அரச விசுவாசிகளின் கை ஓங்கியது. இத்தாலியையும் ஆஸ்திரியாவையும் நெப்போலியன் கொள்ளையடித்துவிட்டதாக அவர்கள் குற்றம்சாட்ட, நெப்போலியன் பாரிஸுக்குப் போகாமலேயே, தனது ஆதரவாளர்கள் மூலம் ஒரு புரட்சியை அரங்கேற்றி அரச விசுவாசிகளை தூக்கினார். மீண்டும் அதிகாரம் நெப்போலியனுக்கு வேண்டப்பட்ட இயக்குநர்கள் கைகளுக்கு வந்தது.
இப்போது முன்னிலும் பல மடங்கு பாப்புலர் ஹீரோவாக பாரிசுக்குத் திரும்பினார் நெப்போலியன்.
அரசு நிர்வாகத்தை ஆளும் இயக்குநர்களை விட நெப்போலியனுக்கு கூடுதல் மரியாதை.. செல்வாக்கு!
இதை பிரான்ஸின் ஆட்சியாளர்களான இயக்குநர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அந்த நேரம் பார்த்து எகிப்துக்குப் படையெடுத்துச் செல்ல நெப்போலியன் விருப்பம் தெரிவித்தார். அப்படியே, சூயஸ் கால்வாய் வழியாக ஒரு 15000 வீரர்களை இந்தியாவுக்கு அனுப்பி, திப்பு சுல்தான் உதவியோடு பிரிட்டிஷ்காரர்களை விரட்டிவிட்டு, இந்தியாவில் பிரான்ஸின் வியாபார சாம்ராஜ்யத்தை நிறுவ வேண்டும் என்றும் விரும்பினார்.
ஆனால் அவ்வளவு பெரிய படையை இந்தியாவுக்கு ஆகும் செலவு கட்டுப்படியாகுமா என ஆலோசகர்கள் யோசிக்க, ‘அட முதலில் அந்தாளை பாரிசிலிருந்து பக்குவமாக அனுப்பி வெச்சுடுங்க… போய் மெல்ல வரட்டும்’ என்று வெளிப்படையாகவே சொல்லிவிட்டனராம் ஆட்சியிலிருந்த இயக்குநர்கள்.
நெப்போலியனின் எகிப்து பயணம் துவங்கியது.

எகிப்தில் நெப்போலியன்...
இரண்டுமாதங்கள் பக்காவாக திட்டமிடப்பட்ட போர் அது. எகிப்து – சூயஸ் கால்வாய் பகுதிதான் மத்திய கிழக்கு நாடுகளின் நுழைவாயிலாகத் திகழ்ந்தது அன்றைக்கு. குறிப்பாக பிரிட்டிஷ்காரர்களுக்கு. அந்த வழியை அடைத்துவிட்டால்… அல்லது கையகப்படுத்திவிட்டால், பிரிட்டனின் வர்த்தக சாம்ராஜ்யத்துக்கு ஒரு செக் வைத்த மாதிரியும் இருக்கும், இந்தியாவுடன் வர்த்தகத் தொடர்புகளை உருவாக்கிக் கொள்ளவும் வாய்ப்பு கிடைக்கும் என்பது நெப்போலியன் திட்டம்.
1798-ல் மால்டாவை அடைந்த நெப்போலியன், ஜஸ்ட் மூன்றே வீரர்களை இழந்து எகிப்தின் முக்கியத் துறைமுகத்தைப் பிடித்தார் நெப்போலியன். அடுத்த வாரத்தில் அலெக்ஸாண்ட்ரியாவை வீழ்த்தினார். அடுத்து ஒரு வாரம் நடந்த ‘பிரமிடு போரில்’ 300 பிரெஞ்சு வீரர்களை இழந்த நெப்போலியன், 6000 மாம்லுக் வீரர்களை வீழ்த்திவிட்டார்.
இருந்தாலும் இதை பெரிய வெற்றியாகக் கொண்டாட முடியவில்லை அவரால். காரணம் பிரிட்டிஷ் கப்பல் படை தளபதி நெல்சன். நெப்போலியனின் கப்பல் படையையே பெருமளவு நாசம் செய்துவிட்டார் அவர். மத்தியதரைக் கடலில் பிரான்ஸின் கடல் ஆதிக்கத்தை நிலை நாட்டும் நெப்போலியன் முயற்சி தோற்றுப் போனது என்றே வரலாறு பதிவு செய்துள்ளது.
இந்தத் தோல்வியிலிருந்து தப்பிக்க, ஆட்டோமான் துருக்கியர் வசமிருந்த சிரியா, கலிலே பகுதிக்கு தனது 13000 படையினருடன் சென்றார். அங்கே அரீஷ், காஸா, ஜாஃபா, ஹெய்ஃபா போன்ற கடலோர நகரங்களைக் கைப்பற்ற கடும் போரில் இறங்கினார். ஏராளமானவர்களைக் கொன்று ரத்தக் குளியல் நடத்தியது நெப்போலியன் படை. குறிப்பாக ஜாஃபாவில் நிகழ்ந்தது கொடூரத்தின் உச்சம்.

ஜாஃபாவில்...
இங்கே பிரெஞ்சுப் படையை எதிர்த்துப் போரிட்டவர்கள் கைதிகளாக இருந்து படையில் சேர்க்கப்பட்டவர்கள். மொத்தம் 1400 பேர். இவர்களை துப்பாக்கியின் முனையில் இருந்த கத்தியால் குத்தியே கொன்றுவிட்டதாம் நெப்போலியன் படை. சுட்டால் குண்டு வீணாகிவிடுமே என்பதால் இந்த குரூரமாம். இவர்களைத் தவிர இந்தப் பகுதியில் இருந்த பெண்கள், குழந்தைகள் மற்றும் வயதானவர்களையும் விட்டு வைக்காமல் மூன்று நாட்கள் தொடர்ந்து கொன்றழித்தார்களாம் பிரெஞ்சுப் படையினர்.
இந்த கொடூரக் கொலையே பின்னர் பிளேக் நோய் பரவ காரணமாக, அது எங்கே தம் படையைத் தொற்றிக் கொள்ளுமோ என்று பின்வாங்கி மீண்டும் எகிப்துக்கு வந்துவிட்டார் நெப்போலியன்.
அதேநேரம் பிரான்ஸில் அவரது செய்தித் தாள்களும் உரிய நேரத்தில் டெலிவரி செய்யப்படாமல், பாதிப்புக்குள்ளாகியிருந்தது.
பிரான்ஸுக்கு திரும்ப நேரம் பார்த்துக் கொண்டிருந்தார் நெப்போலியன். அங்கே பிரான்ஸ் படைகள் தொடர் தோல்விகளை சந்தித்துக் கொண்டிருந்தன.
தனக்கு பதில் கெப்ளர் என்பவரை பிரெஞ்சுப் படைகளுக்குப் பொறுப்பாக நியமித்துவிட்டு பிரான்ஸ் திரும்பினார் நெப்போலியன், 1799, அக்டோபர் மாதம். அப்போது கிட்டத்தட்ட நாடு திவாலாகியிருந்தது. அரசின் இயக்குநர்கள் செல்லாக் காசுகளாக பார்க்கப்பட்டனர். மக்களிடம் அவர்களுக்கு இம்மியளவு கூட மதிப்பில்லை.
இந்த சூழலை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள எண்ணினார் நெப்போலியன். அதே நேரம் இயக்குநர்களோ தங்களுக்கு பெரும் சவாலாகத் திகழும் நெப்போலியனை எப்படி தூக்கியெறிவது என மண்டையைப் பிய்த்துக் கொண்டிருந்தனர். அப்போதுதான் இயக்குநர் குழுவில் இருந்த தனக்கு வேண்டப்பட்டவர் மூலம் இன்னொரு புரட்சியை அரங்கேற்றினார் நெப்போலியன்.
9 நவம்பர் 1799-ல் இயக்குநர் குழுவைக் கலைத்துவிட்டு புதிய கான்சல் அமைப்பைத் தோற்றுவித்த நெப்போலியன், தன்னை முதன்மை கான்சலாக அறிவித்தார். அதற்கேற்ப புதிய அரசியல் அமைப்பு சட்டம் ஒன்றையும் தோற்றுவித்தார்.
பிரான்ஸின் ஆட்சியாளராக நெப்போலியன் பதவியேற்ற நேரம், மீண்டும் படு வீக்காக இருந்தது பிரான்ஸ் நாடு. இத்தாலி அதன் கட்டுப்பாட்டிலிருந்து விலகி மீண்டும் வாலாட்ட, தனது மேலாதிக்கத்தை நிலைநாட்ட வேண்டிய கட்டாயத்திலிருந்து நெப்போலியன் தனது பெரும்படையுடன் ஆல்ப்ஸைக் கடந்து இத்தாலிக்குள் பிரவேசித்தார். ஆரம்பத்தில் சில சறுக்கல்கள் நேர்ந்தாலும், 1801-ம் ஆண்டு லுனவில்லே உடன்பாடு மூலம் வெற்றிகரமாக இத்தாலியை தனது ஆட்சிக்குள் கொண்டு வந்தார்.

இத்தாலியப் போருக்காக ஆல்ப்ஸ் மலையைக் கடக்கும் நெப்போலியன்
அடுத்த நான்கு ஆண்டுகளில் பிரான்ஸின் பேரரசனாக தன்னை அறிவித்துக் கொண்டார் நெப்போலியன். மன்னராட்சிக்கு எதிராக பெரும் புரட்சி செய்து, குடியரசாட்சியை கொண்டு வந்த அதே நெப்போலியன் போனபார்ட், மீண்டும் மன்னராட்சியை ஏற்படுத்தினார் பிரான்ஸில்!
தொடர்ந்து பல போர்களில் வென்ற நெப்போலியன், ஒரு கட்டத்தில் போர்ச்சுகல், பிரிட்டன், ஸ்கான்டிநேவியா நீங்கலாக மொத்த ஐரோப்பாவையும் தனது ஆட்சியின் கீழ் கொண்டு வந்திருந்தார். ரஷ்ய மன்னர் ஜார் அலெக்சாண்டருடன் டில்ஸிட் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு, ஐரோப்பாவை இரு பகுதியாகப் பிரித்தார். தான் வென்ற நாடுகள் முழுவதிலும் தனது அண்ணன், தம்பிகள், நண்பர்களை ஆட்சியாளர்களாக நியமித்துக் கொண்டார்.
மொத்த ஐரோப்பாவும் தன் கைவசம் வந்ததால், பிரிட்டனுக்கு எதிராக பொருளாதாரத் தடையையும் கொண்டு வந்தார்… ஆனால் அது சரியான பலனைத் தரவில்லை.
இந்த நேரத்தில்தான் நெப்போலியன், தேவையில்லாத தீபகற்பப் போரில் இறங்கி… தனது ‘வாட்டர்லூ’வைச் சந்தித்தார்…





நெப்போலியனிடம் கோபித்துக் கொண்ட பீத்தோவன்! – பகுதி-II

ஒரே ஆண்டில் நெப்போலியன் செய்த நிர்வாகப் புரட்சி! – பகுதி 2
வெற்றி மேல் வெற்றி பெற்று, பிரான்ஸின் பேரரசனாக தன்னை அறிவித்துக் கொண்ட நெப்போலியனுக்கு பெரும் உறுத்தலாக இருந்தது பிரிட்டன்தான். கடற்படையில் அத்தனை பெரிய பலசாலிகளாக திகழ்ந்தார்கள் பிரிட்டிஷார். தரைப்படை நடத்துவதில் தன்னிகரற்றுத் திகழ்ந்த நெப்போலியனுக்கு, இந்த கடற்படைதான் தண்ணி கா...ட்டியது என்றால் மிகையல்ல.

பிரெஞ்சுப் பேரரசன் நெப்போலியன் போனபார்ட்-1
1801-ம் ஆண்டு பிரிட்டன் மீது படையெடுத்து அந்த நாட்டையே உருத்தெரியாமல் அழித்துவிட வேண்டும் எனும் அளவுக்கு கடும் கோபம் கொண்டிருந்தார் நெப்போலியன். தனது தளபதிகளிடம், ‘பிரிட்டன் என்றொரு நாடு உலக வரைபடத்திலேயே இல்லை’ என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும்” என்று கமெண்ட் அடித்தார் என்றால் அவரது பிரிட்டிஷ் வெறுப்பு புரிந்திருக்கும்.
அவரது மனம் இந்த அளவு வெறுத்தாலும், உண்மையில் பிரிட்டனை தோற்கடிப்பது அத்தனை சுலமாக இல்லை. பொருளாதார ரீதியாகவும் நொடித்துப் போயிருந்தது நாடு. இந்த காலகட்டத்தில்தான் தனது ஆதிக்கத்திலிருந்த வட அமெரிக்காவின் பெரும்பகுதியை ஏக்கர் வெறும் 3 சென்ட்டுக்கு விற்று சமாளித்தார் நெப்போலியன். அதாவது ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பை வெறும் ரூ 400 க்கும் குறைவாக (7.4 டாலர்) விற்றுள்ளார்!!
ஒரே ஆண்டில் நிர்வாகத்தைப் புரட்டிப் போட்ட நெப்போலியன்!
பிரிட்டன் பக்கமும் இதே நெருக்கடிதான் கிட்டத்தட்ட. எனவே அந்த நேரத்தில் ஒரு தற்காலிக ஒப்பந்தம் போட்டார் பிரிட்டனுடன். பிரான்ஸின் அமியன்ஸ் எனும் இடத்தில் கையெழுத்தானது அந்த அமைதி ஒப்பந்தம், 1801 மார்ச் 25-ல். ஆனால் அதுவும் அற்பாயுளில் முறிந்தது. 1802-ம் ஆண்டே மீண்டும் போர்மேகங்கள் கவியத் தொடங்கின.

நெப்போலியன் வெளியிட்ட நாணயங்கள்
1789 முதல் 1815-ம் ஆண்டு வரை நடந்த பிரெஞ்சு யுத்தம் என்ற சரித்திரப் புகழ் வாய்ந்த போர்க்காலத்தில் ஐரோப்பா அமைதியாக இருந்தது இந்த ஒரு ஆண்டு மட்டுமே.
ஆனால் இந்த ஒரே ஆண்டில் அவர் செய்த சீர்திருத்தங்கள் பிரமிப்பூட்டுபவை. இன்றுவரை நெப்போலியன் அறிமுகப்படுத்திய திட்டங்கள், அரசியல் சட்டங்களே பிரான்ஸில் பெரும்பாலும் நடைமுறையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. பிரான்ஸுக்கென சிவில் கோடு, ராணுவச் சட்டம், சாலை – பாதாள சாக்கடைத் திட்டம் உள்ளிட்ட சிறப்பான உள்கட்டமைப்பு வசதி,
நாட்டின் சிறந்த குடிமகன்கள், வீரர்கள், கலைஞர்களை கவுரவிக்கும் விருதுகளை 1802-ம் ஆண்டு நெப்போலியன் அறிமுகப்படுத்தினார். அதில் ஒன்றுதான் செவாலியே விருது!
குற்றவாளிகளைத் தண்டிப்பதில் இன்றும் பிரான்ஸில் நடைமுறையில் உள்ளது நெப்போலியன் சட்டம்தான் (Code of Napoleon).
பொருளாதார நிர்வாகத்தை அத்தனை சிறப்பானதாக, ஒரு திட்டமிட்ட அமைப்பாக மாற்றியவரும் நெப்போலியனே. பிரான்ஸ் மத்திய வங்கி, புதிய நாணய முறை, ஒருமுகப்படுத்தப்பட்ட நிர்வாக முறை என எல்லோரும் வியந்து பார்க்கும் புதிய முறைகளை, எந்த நாட்டு பாதிப்பும் இன்றி நெப்போலியன் உருவாக்கியது இன்றும் சரித்திர ஆய்வாளர்களால் வியந்து பார்க்கப்படுகிறது.
ஆனால் நெப்போலியனை மிகச் சிறந்த நிர்வாகியாகத் தொடர்ந்து இருக்க விடவில்லை பிரிட்டன். 1803-ம் ஆண்டு மீண்டும் பிரான்ஸ் மீதான போரை அறிவித்தது பிரிட்டன்.
இதற்கிடையில் நெப்போலியன் தனக்கு பேரரசனாக முடிசூட்டிக் கொள்ள முடிவெடுத்து, அந்த வைபவத்தை நிறைவேற்ற போப் ஆண்டவரை வரவழைத்தார் (முந்தைய பகுதியில் இதை விரிவாகச் சொல்லவில்லை).
1804-ம் ஆண்டு, டிசம்பர் 2-ம் தேதி போப் ஆண்டவர் தனது கையில் பேரரசனுக்கான கிரீடத்தை வைத்துக் கொண்டு நிற்கிறார். ஆனால் அவர் கிரீடத்தை கடைசி நேரத்தில் சூட்டாமல் சதி பண்ணி விடுவாரோ என்ற சந்தேகம் நெப்போலியனுக்கு. பார்த்தார்… சட்டென்று அதை போப் கையிலிருந்து பிடுங்கி தானே சூட்டிக் கொண்டார்!
மனைவி ஜோஸப்பினை பேரரசியாக அறிவித்தார்.

போப்பிடமிருந்து கிரீடத்தை எடுத்துக் கொள்ளும் நெப்போலியன்...
பீத்தோவனின் கோபம்…
பின்னர் 1805-ம் ஆண்டு தனது ஆதிக்கத்திலிருந்த இத்தாலிக்கு ஒரு விஸிட் அடித்து, அங்கும் பேரரசனாக மிலன் தேவாலயத்தில் முடிசூட்டிக் கொண்டார். அப்போது 18 மார்ஷல்களை அறிவித்தார் நெப்போலியன். ஒருவர் செய்த பெரும் சாதனைகளுக்காக மன்னர்களால் அளிக்கப்படும் பெரும் கவுரவம் இந்தப் பதவி.
இதில்தான் நெப்போலியன் மீது பெரும் மனவருத்தம் கொண்டார் இசை மேதை பீத்தோவன். காதுகேளாத நிலையிலும் 9 சிம்பனிகளை அமைத்து சாதனை புரிந்தாரே, அதே பீத்தோவன்தான்.
நெப்போலியன் மக்களாட்சியின் காவலனாக இருப்பார் என்று எதிர்பார்த்து அவரை தீவிரமாக ஆதரித்து வந்தவர் பீத்தோவன். ஆனால் மன்னராட்சியின் நீட்சியாக வந்து பதவிப் பிச்சை போடுபவராக நெப்போலியன் மாறியது பிடிக்காமல் போனது. அப்போது பீத்தோவன் தனது 3 வது சிம்பனியை அமைத்துக் கொண்டிருந்ததாக வரலாறு கூறுகிறது.

உல்ம் போர் முனையில்...

மீண்டும் போர்க்களத்தில் நெப்போலியன்!
உள்நாட்டுச் சீர்திருத்தங்கள், தனது ஆளுகைக்குட்பட்ட நாடுகளிலும் தன்னை பேரரசனாக நிலைநிறுத்துதல் என நெப்போலியன் பிஸியாக இருந்த நேரத்தில், பிரிட்டன் குழிபறிப்பு வேலையில் தீவிரமாக இறங்கியது.
நெப்போலியனின் கட்டாயக் கூட்டாளிகளான ஆஸ்திரியா மற்றும் ரஷ்யாவின் மனதைக் கரைத்த பிரிட்டன், நெப்போலியனுக்கு எதிராக போர் அறிவிப்பு செய்தது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மேற்கில் ஆங்கிலக் கால்வாய் வழியாக தனது ஸ்பெயின் – பிரெஞ்சு கூட்டு கடற்படையைக் கொண்டு பிரிட்டனுக்குள் ஊடுருவலாம் என நெப்போலியன் திட்டமிட்டார். ஆனால் அதனை முறியடித்துவிட்டது பிரிட்டன்.
அதேநேரம் கிழக்கு முனையில், ரஷ்யாவின் துணையுடன் பிரான்ஸை ஊடுருவ ஆஸ்திரியா முயன்றதை அறிந்த நெப்போலியன், தன் படையை உல்ம் பகுதிக்கு திரும்புமாறு ரகசிய உத்தரவிட்டார். ரஷ்யப் படைகள் ஆஸ்திரியாவுடன் கைகோர்ப்பதற்குள் வேகமாக குறுக்கே புகுந்த பிரெஞ்சுப் படைகள் ‘ஆஸ்ட்ரலிட்ஸ்’ எனும் இடத்தில் ஆஸ்திரியப் படையைச் சிதறடித்து ஆயிரக்கணக்கான வீரர்களைச் சிறைப்பிடித்தனர்.
பிரிட்டனுடன் கடற்போரில் தோற்றாலும், இன்னொரு எதிரியை புரட்டியெடுத்த திருப்தி நெப்போலியனுக்கு. அந்த திருப்தியுடன், தான் பேரரசனானதன் முதலாண்டு நிறைவைக் கொண்டாடினார் 1805-ம் ஆண்டு!
1806- 1807-ல் ரஷ்யப் படைகளுக்கு எதிராக போலந்தில் தொடர் வெற்றிகளைப் பெற்ற நெப்போலியனுடன் வேறு வழியின்றி டில்சிட் ஒப்பந்தம் போட்டுக் கொண்டது ரஷ்யா.
1807-ம் ஆண்டு ஐரோப்பாவையே இரு பிரிவாகப் பிரித்தார் நெப்போலியன். அன்றைய பிரஸ்யா வரையிலான (ஜெர்மனி) பகுதி முழுக்க நெப்போலியன் வசம் வந்தது. அந்தப் பிரதேசத்திலிருந்த நாடுகளிலெல்லாம் தனது நண்பர்களையும் உறவினர்களையும் நியமித்தார் நெப்போலியன்.

நெப்போலியனின் ஐரோப்பா இது!
பிரிட்டனுக்கு எதிரான பொருளாதாரத் தடை!
கிட்டத்தட்ட ஐரோப்பாவே தனது பிடிக்குள் வந்துவிட்டதை உணர்ந்த நெப்போலியன் உனடியாக இதனை பிரிட்டனுக்கு எதிராகப் பயன்படுத்த திட்டமிட்டார். பொருளாதாரத் தடையை அறிவித்தார், கான்டினென்டல் சிஸ்டம் எனும் பெயரில். பிரிட்டனுடன் எந்த நாடும் வர்த்தக உறவு, பொருள்களை இறக்குமதி – ஏற்றுமதி செய்யக்கூடாது, பிரிட்டிஷ் கப்பல்களைப் புறக்கணித்தல் போன்றவை இந்த தடைக்குள் அடங்கும்.
ஆனால் நெப்போலியன் எதிர்பார்த்த மாதிரி இது அத்தனை வெற்றிகரமாக நிறைவேறுவதாகத் தெரியவில்லை. காரணம் கடலில் பிரிட்டன் அசைக்க முடியாத சக்தி. எனவே திருட்டுத்தனமாக பிரிட்டனுடன் வர்த்தக உறவைத் தொடர்ந்தனர் நெப்போலியன் கட்டுப்பாட்டிலிருந்த நாட்டினர்.
குறிப்பாக போர்ச்சுக்கல், நெப்போலியனின் ஆணையை அப்பட்டமாக மீறியது. கடும் கோபம் கொண்ட நெப்போலியன் ஸ்பெயின மற்றும் போர்ச்சுக்கள் நாடுகளை ஆக்கிரமித்தார். தனது படையில் மிகத் தேர்ந்த, திறமை வாய்ந்த 3 லட்சம் வீரர்களை இதில் ஈடுபடுத்திவிட்டு இவர் பிரான்ஸ் திரும்ப, பிரிட்டன் – போர்ச்சுக்கள் மற்றும் ஸ்பெயின் கொரில்லாப் படை ஒன்று சேர்ந்து நெப்போலியன் படையை சிதறடித்தன. இதனை தீபகற்பப் போர் என்கிறது சரித்திரம். இதில் நெப்போலியனுக்கு பெரும் இழப்பு, ராணுவ-பொருளாதார ரீதியாக.
இதுதான் மிகப்பெரிய அடியாக விழுந்தது நெப்போலியனுக்கு. “வாழ்க்கையில் நான் செய்த பெரும் தவறு இந்த தீபகற்பப் போர்கள்தான்” என்று பின்னர் ஒருமுறை அவரே கூறியுள்ளார்.
போப் பட்ட பாடு!
1809-ம் ஆண்டு மீண்டும் ஒரு பெரும் போருக்கு தயாராகின பிரெஞ்சுப் படைகள். இம்முறையும் பிரிட்டன்தான் ஆஸ்திரியாவை நெப்போலியனுக்கு எதிராகத் தூண்டிவிட்டது.
அந்த நேரத்தில் போப் ஆண்டவர் கட்டுப்பாட்டில் இருந்த பல நாடுகள் நெப்போலியனின் பொருளாதாரத் தடையை ஏற்க மறுத்தன. எனவே அந்த நாடுகளையெல்லாம் பிரெஞ்சு சாம்ராஜ்யத்துடன் இணைத்துக் கொண்டார் நெப்போலியன். ஒரு சிறிய படைப்பிரிவு ரோமிலிருந்து போப் ஆண்டவரையே கடத்திச் சென்றுவிட்டது. ஆனால் இப்படிச் செய்யும்படி நெப்போலியன் சொல்லவில்லை. எனவே போப் விடுதலை குறித்தும் அவர் அலட்டிக் கொள்ளவில்லை. 1814-ம் ஆண்டு வரை போப் ஆண்டவரால் வாடிகனுக்கு திரும்ப முடியவில்லை!
இதற்கிடையே, நெப்போலியன் மனைவி ஜோஸப்பின் விவாகரத்து பெற்றுவிட, 1910-ல் மேரி லூசி என்ற ஆஸ்திரிய இளவரசியை திருமணம் செய்துகொண்டார். இந்தத் திருமணத்துக்கு வராமல்போன கார்டினல்களுக்கெல்லாம் நெப்போலியன் தண்டனை கொடுத்தது தனிக் கதை!

ஹிட்லரின் இளமைக்காலம்


ஹிட்லரின் இளமைக்காலம்
இரண்டாம் உலகப்போர் மூள்வதற்கும் அதன் மூலம் 20 கோடி பேருக்கு மேல் மரணமடைவதற்கும் காரணமாக இருந்த ஜேர்மனிய சர்வதிகாரி ஹிட்லரின் வாழ்க்கை பல திருப்பங்களும் திடுக்கிடும் சம்பவங்களும் நிறைந்ததாகும்.

வட ஆஸ்திரியாவில்(Braunau am Inn) உள்ள பிரானோ என்ற ஊரில் 1889 ஆம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் திகதி பிறந்தார்.இவருடைய தந்தையின் பெயர் அலாயிஸ் சிக்கில் கிராப்பர் ஹிட்லர்(Alois Hitler... ).இவர் சுங்க திணைக்களத்தின் அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். அவரின் மூன்றாவது மனைவியின் நான்காவது மகன் ஹிட்லர். பிறந்தது முதலே ஹிட்லர் நோயுற்றவராக இருந்தார்.அடிக்கடி காய்ச்சல் வரும். கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு பிறகு தான் உடம்பு தேறியது.
ஹிட்லருக்கு தாயிடம் செல்லம் அதிகம்.தாய் மீது மிகுந்த பக்தியும் பாசமும் கொண்டவர்.பாடசாலையில் படிக்கும் போது ஹிட்லர் தான் வகுப்பின் முதல் மாணவன். பிறகு அவருக்கு படிப்பில் ஆர்வம் குறைந்தது.படம் வரைவதில் ஆர்வம் ஏற்பட்டது.விரைவிலே அழகான ஓவியங்கள் வரையும் ஆற்றலை பெற்றார்.மாணவப்பருவத்திலேயே நிறைய நாவல்கள் படித்தார். போர்கள் பற்றிய கதைகள் என்றால் நாட்டம் அதிகம்.
1903 இல் ஹிட்லரின் தந்தை இறந்தார். தந்தையின் கண்டிப்பு இல்லாமல் வளர்ந்த ஹிட்லர் நாளுக்கு நாள் முரடனாக மாறினான் . மாணவர்,ஆசிரியருடன் சண்டை பிடிப்பார்.தனது 17 ஆவது வயதில் கல்லூரி இறுதி தேர்வில் தேறினார் ஹிட்லர்.அதற்காக கொடுத்த சான்றிதழை வாங்கிக்கொண்டு வரும் வழியில் நண்பர்களோடு சேர்ந்து மது அருந்தினார்.சான்றிதழையும் கிழித்து எறிந்தார்.
1907 ஆம் ஆண்டில் ஓவியக்கல்லூரியில் சேர முயன்றார்,அதில் அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை.அந்த ஆண்டின் இறுதியில் ஹிட்லரின் தாயார் இறந்துபோனார்.அதன் பின்பு ஓவியங்களை தயாரித்து வாழ்க்கை நடத்தினார்.இரவில் கூட மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் கூட ஓவியங்களை வரைவார்.இவர் வரைந்த ஓவியங்கள் நல்ல விலைக்கு விற்பனையாகின.அதனால் சொந்தமாக ஓவியக்கூடம் அமைத்தார்.இச் சமயத்தில் சிந்தியா என்ற பெண்ணை ஹிட்லர் காதலித்தார்.காதல் தோல்வியடையவே இராணுவத்தில் சேர்ந்தார்.முதலாம் உலகப்போரின் போது ஜேர்மனி இராணுவத்தில் சேர்ந்து பணியாற்றினார்.
ஹிட்லரின் இராணுவப் பிரவேசமும், வெற்றியும்1918 இல் ஜேர்மனி தோற்றது.இத் தோல்விக்கு ஜனநாயகவாதிகளும் யூதர்களும் தான் காரணம் என்று ஹிடலர் நினைத்தார்.உலகில் ஜெர்மானியரே உயர்ந்த இனத்தவர்.உலகம் முழுவதையும் ஜேர்மனிய ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என விரும்பினார்.ஹிட்லர் பேச்சு வல்லமை மிக்கவர்.தேசிய சோசலிஸ்ட் ஜெர்மன் தொழிலாளர் கட்சியில் ஒரு உறுப்பினராக சேர்ந்து தனது பேச்சு வல்லமையால் விரைவிலே கட்சித் தலைவரானார்.
அரசாங்கத்தின் நிர்வாக திறமை இன்மையால் தான் நாட்டில் வறுமை வேலையின்மை பெருகிவிட்டதாக பிரச்சாரம் செய்தார்.அரசாங்கத்துக்கு எதிராக மக்களை தூண்டிவிட்டு ஆட்சியை கைப்பற்ற முயன்றார்.ஆனால் அந்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.அரசாங்கம் அவரை கைது செய்து 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.பின்பு அது ஓராண்டு தண்டனையாக குறைக்கப்பட்டது.சிறையிலிருந்த போது "எனது போராட்டம்"என்ற பெயரில் தன் சுயசரிதையை எழுதினார்.
1928 இல் நடந்த தேர்தலில் ஹிட்லரின் கட்சி தோல்வியடைந்தது.ஆனால் ஹிட்லர் சோர்ந்து போய்விடவில்லை.தன்னுடைய கட்சியின் பெயரை "நாசி"கட்சி என்று மாற்றி நாடுமுழுவதும் தீவிரவாதத்தில் ஈடுபட்டார்.அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் புரட்சிக்கு வழிவகுத்தார்.
இவருடைய இடைவிடாத உழைப்பும் பேச்சுத் திறனும் இராஜ தந்திரமும் வெற்றி பெற்றன.ஆட்சிக்கு எதிராக மக்ககள் கிளர்ந்தெழுந்து பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பாராளுமன்ற கட்டடம் கொளுத்தப்பட்டது.ஜனாதிபதியாக இருந்த ஹில்டன் பேர்க் மக்கள் போராட்டத்துக்கு அடிபணிந்தார்.1933 ஜனவரி 30 ஆம் திகதி ஹிட்லரை பிரதமராக நியமித்தார்.பிரதமராக இவர் பதவி ஏற்ற ஒன்றரை வருடத்தில் ஜனாதிபதி ஹில்டன் பேர்க் மரணமடைந்தார்.
அதனால் ஜனாதிபதி பதவியையும் கைப்பற்றிக்கொண்டு ஜேர்மனின் சர்வாதிகாரியானார்.பாராளுமன்றத்தை கலைத்தார்,இராணுவ திணைக்களத்தினையும்,இராணுவ தளபதி பதவியினையும் தானே ஏற்றுக்கொண்டார்.அரசியல் கட்சிகள் எல்லாவற்றையும் தடை செய்தார்.இனிமேல் ஜெர்மனியில் ஜனநாயகம் என்ற பேச்சுக்கே இடமில்லை என அறிவித்தார்.
யூதர்களை அடியோடு அழிக்க வேண்டும் என முடிவு செய்து ஒரு பாவமும் அறியாத யூதர்களை கைது செய்து சிறையில் பட்டினி போட்டு சித்திரவதை செய்து கொன்றான்.தினமும் சராசரியாக 6000 - 10000 பேர் வரை விஷப் புகையிட்டு கொல்லப்பட்டனர்.ஹிட்லரால் கொல்லப்பட்ட யூதர்களின் எண்ணிக்கை சுமார் ஐம்பது லட்சம் ஆகும்.1939 அல்பேனியா,செக்கொச்லோவக்கியா ஆகிய நாடுகளை கைப்பற்றிக்கொண்டு போலந்து நாட்டின் மீது படைஎடுத்தான்.
இதனால் இரண்டாம் உலக யுத்தம் ஆரம்பமாகியது.யுத்தத்தின் ஆரம்பத்தில் ஹிட்லரின் கை ஓங்கியிருந்தது.ஆனால் போரில் அமெரிக்காவும் ரஷ்யாவும் இணைந்த பின்பு நிலைமை மாறியது.ஜேர்மனி தலைநகரான பெர்லினில் ஒரு சுரங்கம் அமைத்து தங்கியிருந்தார்.இச் சுரங்கத்தில் தான் ஹிட்லரின் அலுவலகமும் படுக்கை அறையும் இருந்தது.ஹிட்லரின் அறை 15 அடி நீளமும் 10 அடி அகலமும் கொண்டது.1945 ஏப்ரலின் பின் பெர்லின் நகரின் மீது ரஷ்ய விமானங்கள் குண்டுகளை வீசின.ஹிட்லர் தங்கியிருந்த பாதாள சுரங்கத்தின் அருகிலும் குண்டுகள் விழுந்தன.ஈவா பிரவுன் என்ற பெண் 1930 ஆம் ஆண்டு முதல் ஹிட்லர் உடைய மனம் கவர்ந்த காதலியாக இருந்து வந்தார்.
ஹிட்லரின் மரண சாசனம்
ஹிட்லர் இறப்பதுக்கு முன் எழுதிய மரண சாசனத்தில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
நாங்கள் இறந்த பிறகு எந்த ஜெர்மன் நாட்டு மண்ணுக்காக கடந்த 12 வருடங்களாக பாடுபட்டு வந்தேனோ இந்த ஜெர்மன் மண்ணிலேயே என்னையும் ஈவாவையும் உடனே எரித்து விட வேண்டும்
என் சொத்துக்கள் எல்லாம் எனக்கு பிறகு என் கட்சிக்கு சேர வேண்டும்.கட்சி அழிந்து விட்டால் நாட்டுக்கு சேர வேண்டும்.
ஜெர்மனி மண்ணின் மீதும், மக்கள் மீதும் நான் கொண்ட பற்றும் பாசமும்தான் என்னை வழிநடத்தின .கடந்த 30 ஆண்டுகளாக என் சக்தி முழுவதையும் என் தாய் நாட்டின் மேன்மைக்காக செலவிட்டிருக்கிறேன் .
இந்தப் போருக்கு நானே மூலகாரணம் என்று யாரும் நினைக்க வேண்டாம்.ஏனென்றால் போர் வெறி கூடாது .ஆயுதக்குறைப்பு செய்ய வேண்டும்,என்று நானே வலிறுத்தி இருக்கிறேன்.
முதல் உலகப்போருக்கு பிறகு இப்படி இரண்டாவது உலகப்போர் மூளும் என்று நான் சற்றும் நினைக்கவில்லை .எப்படியோ போர் மூண்டுவிட்டது.
இந்தப்போரினால் நம் நாடு சந்தித்த பயங்கர விளைவுகள்,நாசமாக்கப்பட பிரம்மாண்டமான மாளிகைகள்,தரைமட்டமாக்கப்பட்ட கலையம்சம் மிக்க நினைவுச்சின்னங்கள் யாவும் நம் மீது உலக நாடுகள் நடத்திய கோரத்தாக்குதலை நம்முடைய பிற்கால சந்ததியினருக்கு உணர்த்திக்கொண்டே இருக்கும்.
இந்த போருக்கு காரணமானவர்களை பார்க்கும் போதெல்லாம் ஒவ்வொரு ஜேர்மனிய இளைஞனுக்கும் உணர்ச்சியும் எழுச்சியும் ஏற்ப்படும்
இவ்வாறு இறுதிச் சாசனம் எழுதி கையெழுத்திட்டார் ஹிட்லர்.
30 ஆம் திகதி இரவு 9 மணி "இன்று மாலை 4 மணிக்கு இத்தாலிய சர்வதிகாரி "முசோலினி"முசோலினியும் அவரது மனைவியும் எதிர்ப்பாளர்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர் ".என்று சுவீடன் நாட்டு ரேடியோ அறிவித்தது
ரேடியோ செய்தியை ஹிட்லர் நேரடியாக கேட்டார் .முசோலினியின் முடிவு,ஹிட்லருக்கு மிகுந்த வேதனையை உண்டாக்கியது .அன்றிரவு 12 மணி பெர்லின் நகரம் முற்றிலுமாக ரஷியப்படைகள் வசமாகிவிட்டது என்றும் எந்த நேரத்திலும் ,சுரங்க மாளிகை தகர்க்கப்படலாம் என்றும் ,ஹிட்லருக்கு தகவல் கிடைத்தது.
ஹிட்லரின் முகம் இருண்டது .மவுனமாக எழுந்து ,தன் தோழர்களுடன் கை குலுக்கினார் .பிறகு தன் அந்தரங்க உதவியாளரை அழைத்து ,"நானும் ஈவாவும் ஒன்றாக இறந்துவிடப்போகிறோம்.நாங்கள் இறந்த பின் எங்கள் உடல்களை ஒரு போர்வையில் சுருட்டி ,பெட்ரோல் ஊற்றி எரித்து சாம்பலாக்கி விடுங்கள்.எங்கள் அறையில் உள்ள கடிதங்கள்,டைரிகள்,என் உடைகள் என் பேனா,கண்ணாடி முதலிய பொருட்களை சேகரித்து ,ஒன்று விடாமல் எரித்து விடுங்கள்"என்று கூறிவிட்டு தன் மனைவியையும் அழைத்து கொண்டு தன் அறைக்கு சென்றார்.
அறைக்கதவு சாத்தப்பட்டது .வெகு நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை.ஹிட்லரும் ,ஈவாவும் என்ன ஆனார்கள் என்று வெளியே இருந்தவர்களுக்கு தெரியவில்லை. வெளியே நீண்ட நேரம் காத்திருந்த மந்திரிகளும் ,தளபதிகளும் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றனர் .
அங்கே அவர்கள் கண்ட காட்சி
ஒரு சோபாவில் உட்காந்திருந்த நிலையில் ஹிட்லரின் உயிரற்ற உடல் . அவர் காலடியில் ஒரு துப்பாக்கி கிடந்தது.அவர் சற்றுநேரத்துக்கு முன்னர் தன்னைத்தானே சுட்டுக் கொன்றதால் துப்பாக்கி நுனியில் இருந்து புகை வந்து கொண்டிருந்தது.அவரின் வலது காதுக்கு கீழிருந்து இரத்தம் கொட்டிக்கொண்டுஇருந்தது.ஹிட்லரின் வலது கரம ஒரு புகைப்படத்தை மார்போடு அணைத்தபடி இருந்தது.அது ஹிட்லரின் தாயாரின் புகைப்படம்.
அவருடைய மனைவி ஈவா வெள்ளைப்புள்ளிகளோடு கூடிய கருநீல மாக்சி உடை அணிந்து இருந்தால்.அவள் உடல் நீலம் பாய்ந்திருந்தது.எனவே அவள் சைனட் விஷம் சாப்பிட்டிருக்க வேண்டும் என்பது புலனாகியது.இருவரது உடலையும் உதவியாளர்கள் ஒரு கம்பளிப்போர்வையில் சுற்றினார்கள்.பின்னர் அந்த உடல்களை தலைமைச் செயலகத் தோட்டத்திற்கு தூக்கிகொண்டு போய் சிலமணி நேரம் அங்கு வந்த ரஷ்ய படைகள் ஹிட்லரை காணாமல் திகைத்து போனார்கள்.ஹிட்லர் ஈவு இரக்கம் அற்ற கொடியவராக இருந்தாலும் சில நல்ல குணங்களும் இருந்தன.ஹிட்லர் குழந்தைகளிடமும் மிருகங்களிடமும் அன்பு கொண்டவர்.மாமிசம் சாப்பிடமாட்டார்.புகை பிடிக்கமாட்டார்.